மழை குழந்தையை தா

மழை குழந்தையை தா


ஏ மேகமே !

பகலவனின் பார்வை
கொடூரத்தால் பலனின்றி போனாய் !

தன் குளிர் காதலியோடு 
சண்டையிட்டு வெப்பத்தை தழுவி 
வியர்வையை பரிசளிக்கும் 
தென்றல் காற்றிடம் 
நேரம் கடன் வாங்கி 
தேசம் எங்கும் பயணித்து பார் !

வெள்ளை கூந்தலாய் 
அருவி வழிந்தோடிய மலைகள் ...
கூந்தல் இழந்த பருவபெண்ணாய்..
அழகு இழந்து இருப்பதை பார் !

மாலை வான நட்சதிரமாய் 
பூக்கள் குலுங்கிய சோலைகள்..
பாலை தேசமாய் படர்ந்திருக்கும் 
நிலையை பார் !

நீராடிய பெண்ணின் 
முகத்தில் நீர்த்துளியாய் 
பனி படர்ந்த புல்வெளிகள் 
பாழ் பட்டிருக்கும் சோகம் பார் ...

நஞ்சையும் புஞ்சையும் 
விளைந்த நிலங்கள் எல்லாம் 
செருப்பின்றி நடந்த பாதமாய் 
வெடித்து கிடப்பதை பார் !

மீன்கள் துள்ளிய நீர்நிலைகள் 
தன் தாகம் தீர்க்க நீரின்றி 
தவிப்பதை பார்...

நிலைமை பார்த்த பின் ...

உன் கடல் காதலியோடு 
வான வீதியில் சரசமாடி 
மழை குழந்தையை தா !


மண்ணின் மகிழ்ச்சிக்காக !





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக