தென்றல்...

தென்றல்...


Thendral
Thendral
தலை குனிந்து நிற்கும் நெற்கதிரை 
தட்டி எழுப்பிச் செல்கிறது
இந்த தென்றல்!

கழனியில் உழைத்த 
உழவனின் வியர்வை 
சூரியனைக் கண்ட பனித்துளியாய்!
கரைந்து விடச் செய்கிறது
இந்த தென்றல்!

இன்று மலர்ந்தப் பூக்களுக்கும் 
நாளை மலரப்   போகும் மொட்டுகளுக்கும்
வாழ்த்துச் சொல்லி 
வருடிச் செல்கிறது.
இந்த தென்றல்!

சாதி மதம் கடந்து 
நானும் வருகிறேன்
தேகங்களை வருடுகிறேன் 
இதயங்களைத் திருடுகிறேன்.

பல இதயங்களைத் திருடிய 
இவன் இயற்கையின்
செல்லக் குழந்தை!





2 கருத்துகள்: