ஹாய் இன்று சண்டே

ஹாய் இன்று சண்டே

ஹாய் இன்று சண்டே ...

பணி செய்த பழைய வாரம்
பறந்து போய் புதியதோர்
வாரம் பூக்கும் நாள் ...

தூக்கம் போகுமுன்
தூங்கி எழ வேண்டுமே என்ற
ஏக்கம் இல்லை ...


குளியல் இல்லை

பேருந்து தாமதம் ,
போக்குவரத்து நெரிசல் ,
ஓடும் நேரம்
ஒன்றுமே தேவை இல்லை ...

பணி இல்லை....
கணிப்பொறியை
கண் துஞ்ச பார்க்க வேண்டிய
கடமை இல்லை ....
மின் அஞ்சலுக்கு
மாற்றஞ்சல் அனுப்பும்
தேவை இல்லை ...
கைபேசி அழைப்பில்
கத்தி  பேசும்
கண்ணிய அதிகாரி பற்றிய
கவலை  இல்லை .

முழுவதும் தூங்கவேண்டும் என்ற
முடிவு படி படுத்தால் கூட
விழி மூடிட முடியவில்லை 

வேலை நாள்களில்
நடை பயணம் செல்லும் நிமிடங்கள்
விடுமுறை நாளென்றால்
விருடென்று ஓடுவதை
நம்பவே முடியவில்லை .

மாலை யான பின்னும்
மகிழ்ச்சி எனபது
மருந்துக்கு  கூட தோன்ற வில்லை ..

இரவு வந்ததும் ..
அடுத்த நாள் 
பணியை பற்றி
அடிக்கடி எண்ணி எண்ணி ..
தூக்கமே வரவில்லை ...

ஹாய்.......
இன்று.......
சண்டே .......





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக