பிறந்த நாள் பரிசு

பிறந்த நாள் பரிசு


அன்று ஒரு நாள் 
அநாதையாக
தரிசு நிலத்தில் 
தனி மரமாய் 
தவித்துக் கொண்டிருந்தேன்!

வாழ்வா? சாவா ? என்று 

பத்து வயது சிறுவன் நீ 
பக்கத்தில் வந்தாய் 
பதை பதைத்தது மனம்
பிய்த்து எறிந்து விடுவாயோ என்று!

தண்டுப் பக்கம் அருகில் 
தடிமனைக் கொண்டு 
மண்ணைக் கிளரினாய்.
மனமோ சிந்தனையில்
வாழ்வா? சாவா ? என்று 
உன் வயது பத்துதானே...

ஆழமாய் தோண்டி 
ஆட்டி ஆட்டி
ஆணி வேரைப் பிடுங்கினாய்.

நீ கடந்து செல்லும் தூரம்
நீளமாக இருக்கும் போல
தோள் கொடுத்து 
தோளில் சுமந்து கொண்டாய் 

படிக்கும் பையன் நீ 
பள்ளிக் கூடம் வந்து சேர்ந்தாய்.
பத்து மணி ஆனது.

பள்ளம் தோண்டினாய்
பதித்தாய் என்னை மண்ணில்.

ஆனந்தம் தொற்றிக் கொண்டது 
ஆதி முதல் ஆணி வேர் வரை
ஆளப் போகிறேன் மண்ணை என்று!

வாழ்வா? சாவா?
வினாக்குறி என்னுள் 
விடை பெற்றுக் கொண்டது!

உன் பிறந்த நாள் பரிசாக 
உன் பள்ளி  கூடத்தில் நான்!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக