வழி(லி) அனுப்பிய வறுமை | Varumai kavithai

வழி(லி) அனுப்பிய வறுமை | Varumai kavithai

varumai
Varumai Kavithai


அடுக்கி வைத்த
அட்டைப் பெட்டியாய் 
அழகு தரும் 
கணணி பூங்காவில் 
சுத்தம் செய்பவளாய் இவள்!

அழுக்குச் சுவடுகளை 
அழிக்கப் பிறந்துள்ளாய்.
அயனின் பார்வையால் 
அவதாரம் எடுத்திருக்கிறாய்.

படியும் அழுக்குகளில் 
பணம் சம்பாதிக்க 
வறுமை இவளை 
வழியனுப்பி வைத்திருக்கிறது!

இவள் தட்டும் தூசியில்
உயிர் பெற்றன 
பிளாஸ்டிக் பூக்கள்.

கடுகளவு தூசி கண்டாலும் 
கருவிழி ஆணையிட 
கரைந்து போகிறது.
கடல் அலை நுரையாய்  
கரை ஒதுங்குகிறது

இவள் உழைப்பால் 
உயர்ந்திருக்கிறது 
குப்பை மேடுகள்!

இவள் வேதனை கண்டு 
இளைப்பார துடிக்குது
துடைப்பங்கள்!

இவளுக்கு ஒய்வு கொடுக்க 
நடுநிசி நெருங்குவதற்காக 
நண்பகல் மொட்டு விரிக்க 
அந்தி வேலை மலருகிறது

அந்தரத்தில் தொங்கும் 
பகல் விளக்கு பகலவன் 
மறைந்து விடுகிறான்!

கைரேக பட்ட காசுகள் 
அகம் சொல்லும் சிந்தனையில் 
அரங்கேற்றம் பெறுகிறது
வீட்டுச் செலவுகளாய்!

ஆயிரம் நினைவுகளில் 
ஒரு நினைவு மட்டும் 
உயிர் பெற்றிருக்கிறது.

மீதமுள்ள நினைவுகளுக்காக 
பகலவனின் ஒளிக்கதிர் 
குடிசை வாயிலில்!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக