முதல் சந்திப்பில் | Muthal Santhippu

முதல் சந்திப்பில் | Muthal Santhippu

Mutham
Muthal Santhippu


உன் முதல் பேச்சு 
என் தேசிய கீதமாய் 
எழுதிய உன் உள்ளம்
உச்சரித்த உன் உதடுகள் 

தேசப்பற்று  மிக்கவன் நான் 
மறப்பதில்லை தேசிய கீதத்தை!

பெண்மைக்குள் ஓர் பெருமை 
புரிந்து கொள்ள முடியாத 
இன்னொரு பெண்மையாய் 
உனது கருவிழி கண்கள்!

உன் விழி பேசி நான் 
மறந்த வார்த்தைகளால்
நானும் அழகாய் தெரிந்தேன் 
உன் முக அழகின் எதிரொளிப்பில்!

மழலையாய் நீ சிரிக்க
மயங்கிய கருவிழியில் 
இமைக்க மறந்த இமைகள்.

இலக்கணப்பிழை  இல்லா 
எழுத்துப்பிழை இல்லா 
பெண்மை இலக்கணம் நீ!

பல்லக்கில் பவனி வரும்
கவிதை ராணி நீ!
தமிழுக்கு ஓர் கவிதை
இல்லை இல்லை 
தரணிக்கோர் கவிதை
உனது பெயர்.

கற்பனை மறந்த சிந்தனை 
கவிதை வடித்தது 
நிஜ உலகில் உன்னோடு
அந்த முதல் சந்திப்பில்!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக