ஜூன் 2013

பூவே பூச்சூட வா

poove

நீ வந்து செல்லும் பாதையில் 
நடைபாதை பூக்களாக 
உனக்காக பூத்திருக்கிறேன்!
உதிராமல் காத்திருக்கிறேன்!
பூவே ! பூச்சூடிடு !

தளிர் விட்ட ரோஜா செடி


இலையின் நுனியில் 
இறந்து போன மழைத்துளி 
உயிர் பெற்று உறவாடுகிறது.
தளிர் விட்ட ரோஜா செடி!

இயற்கையின் சீற்றம்


மழைசாரலில் நனைந்திருக்கிறேன்
மனதை பறி கொடுத்திருக்கிறேன்
நதியின் வளைவுகள் 
நங்கையிடம் கூட இல்லை

மாற்றம் கொடுத்து 
மாற்றிக் காட்டியது 
மழையும் மண் சரிவும்.

உத்தர்கண்ட் பற்றி எழுத
உவமையும் 
உருவகமும் தேவையில்லை.

மரங்களை அழித்ததால் 
மண்சரிவை ஏற்படுதினாயோ?
மலராமலே பிஞ்சு மொட்டுகளை 
மண்ணில் பதித்தாயோ ?
மழலைச் செல்வமும் 
மக்கட் செல்வமும்
மகத்தானதல்லவா ?

தொலைந்து போன உயிர்கள் 
தொலைவிலா ? அருகிலா ?
தொலைக்காட்சி செய்தி கூட 
தெளிவாகத்  தெரிவிக்கவில்லை.

வெள்ளப்பெருக்கு 
வெகு விமரிசையாய்
அடித்துச் செல்லப்பட்ட 
அனைத்து வகை மரங்களோடு
அணிவகுப்பு யாருக்காக?

மிதந்து வந்த மரங்களும் 
மாளிகைகளும் சொல்கிறது
மீண்டு வர வருடம் ஆகுமாமே?

கரையைத் தாண்டி நீ வர 
கரைபுரண்டு வெள்ளம் ஓட
கலை இழந்து 
கற்சிலையாய் நாங்கள்.
கற்காலத்தை நோக்கி நாங்களும்
கடல் அன்னையை நோக்கி நீயும்.

அரசியலை நம்பவில்லை 
அன்னையே உன்னை நம்புகிறேன்
எங்கள் இயற்கை அன்னையே !
இனிமேல் வேண்டாம் 
இது போன்றதொரு 
வெள்ளப்பெருக்கும் மண்சரிவும்.




மருத்துவக் குறிப்புகள்

தலைவலி குறைய

பெரும்பாலானவர்களை மிகவும் கஷ்டபடுத்துவது தலைவலி. இதற்கு மருந்தாக இரண்டு சொட்டு நொச்சி தைலத்தை மூக்கின் துவாரங்களில் தடவினால் சரியாகி விடும். வேண்டுமென்றால் தலையிலும் தடவிக் கொள்ளலாம்.

குழந்தைகளின் சளித் தொல்லை நீங்க

வெற்றிலை மற்றும் கருந்துளசி சாறை எடுத்து தேனில் கலந்து கொடுக்க சளித் தொல்லை குறையும்.

தீப்பொறி காயத்திற்கு

தீப்பொறியினால் சிறு காயம் ஏற்பட்டால் சோற்று காற்றாழையில் உள்ள உட்பகுதியை எடுத்து தடவலாம்.

மொழி பெயர்க்கப்பட்ட கவிதை | mozhi peyarkkappatta kavithai


மொழி பெயர்க்கப்பட்ட கவிதை
உன் கண்ணில் தெரிகிறது
தினம் தினம் வாசித்து 
தற்பெருமை கொள்கிறது 
உன் வீட்டு கண்ணாடி பிம்பம்!

பிறந்த நாள் பரிசு


அன்று ஒரு நாள் 
அநாதையாக
தரிசு நிலத்தில் 
தனி மரமாய் 
தவித்துக் கொண்டிருந்தேன்!

வாழ்வா? சாவா ? என்று 

பத்து வயது சிறுவன் நீ 
பக்கத்தில் வந்தாய் 
பதை பதைத்தது மனம்
பிய்த்து எறிந்து விடுவாயோ என்று!

தண்டுப் பக்கம் அருகில் 
தடிமனைக் கொண்டு 
மண்ணைக் கிளரினாய்.
மனமோ சிந்தனையில்
வாழ்வா? சாவா ? என்று 
உன் வயது பத்துதானே...

ஆழமாய் தோண்டி 
ஆட்டி ஆட்டி
ஆணி வேரைப் பிடுங்கினாய்.

நீ கடந்து செல்லும் தூரம்
நீளமாக இருக்கும் போல
தோள் கொடுத்து 
தோளில் சுமந்து கொண்டாய் 

படிக்கும் பையன் நீ 
பள்ளிக் கூடம் வந்து சேர்ந்தாய்.
பத்து மணி ஆனது.

பள்ளம் தோண்டினாய்
பதித்தாய் என்னை மண்ணில்.

ஆனந்தம் தொற்றிக் கொண்டது 
ஆதி முதல் ஆணி வேர் வரை
ஆளப் போகிறேன் மண்ணை என்று!

வாழ்வா? சாவா?
வினாக்குறி என்னுள் 
விடை பெற்றுக் கொண்டது!

உன் பிறந்த நாள் பரிசாக 
உன் பள்ளி  கூடத்தில் நான்!






தந்தையர் தினம்

Fathers day
Fathers day Kavithai

உள்ளங்கை ரேகையில்
உலவிக் கொண்டிருக்கிறது
உற்சாகமாய் நீங்கள் 
கை பிடித்து நடை பழக்கியது!

பள்ளி செல்லும் 
காலை வேளையிலும் 
திரும்பி வரும்
மாலை வேளையிலும்
தோள் கொடுத்து சுமந்தாய்!
தோழனாய் வாழ்க்கையில்
தோள் கொடுத்து உயர்த்தினாய்!

பள்ளி கல்லுரி என்று பல 
பாரங்களை நான் கொடுக்க 
பாசத்தோடு சுமந்து கொண்டாய்!

வாழ்க்கை எனும் மலையின் 
அடிவாரமாக நீங்கள் இருக்க 
உச்சி முகடுகளில் இருந்து 
உரக்க முழங்குகிறேன்!

உயர்ந்தது உங்களால்தான்!

உதிக்கத் தெரிந்து 
மறையத் தெரியாத 
சூரியனாய் நீங்கள் இருக்க 
உங்கள் ஒளிக்கதிர் பெற்று 
உயிர் வாழ்கிறது என் 
உயிர் வார்த்தைகள்!

தந்தை சொல்மிக்க 
மந்திரம் இல்லை!

தந்தையர் தின வாழ்த்துக்கள்!






கடந்து வந்த பாதை

rayil
Kadanthu vanth paathai


ஜன்னலோர இருக்கை
உரசிய குளிர் காற்று 
நினைவில் முன்னால் காதலி

பிரிந்து வந்த குடும்பம்
சேர்த்து வைத்த ஊதியம்
நகரத்தை நோக்கி பயணம் 

அழகும் அறிவும் சேர்ந்த 
கன்னி இளமை அருகில் 
அனுபவமும் அறிவும் சேர்ந்த 
வயதான முதுமை எதிரில்

வளைவுப் பாதையில்
வளைந்து கொடுத்த ரயில் 
வரையப்பட்ட கன்னி இடை

அழுது கொண்டிருந்த குழந்தை 
ஒரு நாள் தொட்டில் 
ரயில் இருக்கை நடுவில் 

இரவு நேரச் சூரியனாய் 
ரயில் பெட்டி விளக்கு
பகல் நேர நிழலாய் 
தொடர்ந்து வந்த 
தொடர் வண்டி நிழல்கள்

நடைமேடையில்
பாதங்கள் பட 
கண்களில் தெரியவில்லை 
நினைவில் தெரிகிறது 
கடந்து வந்த பாதை
முன்னோக்கிச் செல்லும் ரயிலில்!





ரயில் குழந்தை | rayil kulanthai

Rayil
Rayil kulanthai

ஜன்னலோர இருக்கையில் 
இன்பமாய் நான் அமர்ந்திருக்க 
இரவு நேர குளிர் காற்று 
செவியோரம் ஏதோ சொல்ல 
மொழி பெயர்க்கத் தெரியாமல் 
சுகம் காண்கிறது என் உள்ளம்.

ஆம்!
குழந்தையின் மழலைப் பேச்சு 
சில நேரங்களில் புரிவதில்லை!




மழலைப் பேச்சு

மழலைப் பேச்சு 
சில நேரங்களில் புரிவதில்லை
என் காதலியின் முனுமுனுப்பு.

ஹாய் இன்று சண்டே

ஹாய் இன்று சண்டே ...

பணி செய்த பழைய வாரம்
பறந்து போய் புதியதோர்
வாரம் பூக்கும் நாள் ...

தூக்கம் போகுமுன்
தூங்கி எழ வேண்டுமே என்ற
ஏக்கம் இல்லை ...


குளியல் இல்லை

பேருந்து தாமதம் ,
போக்குவரத்து நெரிசல் ,
ஓடும் நேரம்
ஒன்றுமே தேவை இல்லை ...

பணி இல்லை....
கணிப்பொறியை
கண் துஞ்ச பார்க்க வேண்டிய
கடமை இல்லை ....
மின் அஞ்சலுக்கு
மாற்றஞ்சல் அனுப்பும்
தேவை இல்லை ...
கைபேசி அழைப்பில்
கத்தி  பேசும்
கண்ணிய அதிகாரி பற்றிய
கவலை  இல்லை .

முழுவதும் தூங்கவேண்டும் என்ற
முடிவு படி படுத்தால் கூட
விழி மூடிட முடியவில்லை 

வேலை நாள்களில்
நடை பயணம் செல்லும் நிமிடங்கள்
விடுமுறை நாளென்றால்
விருடென்று ஓடுவதை
நம்பவே முடியவில்லை .

மாலை யான பின்னும்
மகிழ்ச்சி எனபது
மருந்துக்கு  கூட தோன்ற வில்லை ..

இரவு வந்ததும் ..
அடுத்த நாள் 
பணியை பற்றி
அடிக்கடி எண்ணி எண்ணி ..
தூக்கமே வரவில்லை ...

ஹாய்.......
இன்று.......
சண்டே .......