அக்டோபர் 2013

வெப்பம் மழை வரும் அறிகுறி | veppam malai varum arikuri

veppam
Malai varum arikuri

தினம் பல கனவுகள்
என் கவிதையில் வருகுதே
கனவுகள் பலிக்குதே
இது என்ன மெய்யா பொய்யா?

பூக்களின் மனம் அது 
உன் இதழ்களில் தெரியுதே
நினைவுகள் தொலையுதே
நினைவினில் நீயா நானா?

கை கோர்த்து நடக்கும் போது 
உற்சாகம் கொள்ளும் விரல்கள் 
இதயத் துடிப்பில் வேகம் வேகம் 
கூடி கூடித் தொலைந்து போகிறது

கற்பனை தவறும் போது 
தடுமாறும் கவிதையாவும் 
உன் நினைவைத்தேடி 
நீந்தி நீந்திச் செல்கிறதே

பருவம் சொன்ன காதல் அது ஒ ஒ ஒ 
பலித்தே போன கனவும் அது ஒ ஒ 
கனவினில் ஒரு இதழ் முத்தம் ஒ ஒ ஒ 
கலையாத கனவு அது ஒ ஒ ஒ 
உன் வெள்ளிக் கொலுசின் ஸ்வரம் தேடி நானும் வந்தேனே
அது எட்டாவது ஸ்வரமடி

அவள் சிரிப்பின் சிதறல்கள் ஒ ஒ ஒ 
அது என் கவியின் வரிகள்  ஒ ஒ ஒ
நான் கேட்டது உதட்டோர ஈரங்கள்   ஒ ஒ ஒ 
அட கன்னத்தில் பதித்தது யாரது ஒ ஒ ஒ 
பெண்மைக்குள் இன்னொரு பெண்மை கவி 
அது கருவிழி கவிதையடா!





இன்றைய தமிழ் | Today Tamil

tamil
Indraiya Tamil

வளர்த்து விட்ட தமிழை 
உள் நாவு வெளி கொணர 
ஆங்கிலம் பேசும் நுனி  நாவு 
தமிழுக்குத் தடை போட 
இங்கே அவமானம் 
தமிழுக்கு சமர்ப்பணம்!

தமிழில் சினிமா பெயர்
தமிழில் படித்தால் வேலை 
தமிழை வளர்க்க 
தமிழ் நாட்டுச் சலுகை!

கற்காலம் கண்ட தமிழ் 
முதுமை கண்ட கிழவியாய்
முடங்கிப் போகிறது  
கலாச்சார மொழியினால்!

தாய்மை அடைய நினைத்தவள் 
கருச்சிதைவை அடைந்தது போல
துடித்துப் போகிறேன்
தரணியை ஆண்ட தமிழ் 
பொது இடங்களில் 
தலை  கவிழும் போது!

புது முகம் கண்ட
இரு தமிழ் முகம்
அறிமுகம் என்னவோ
ஆங்கிலத்தில்தான்!

தமிழன் என்று சொல்ல
தலை நிமிர்ந்து நிற்க 
தமிழனால் முடியவில்லை
போலி வாழ்க்கை
உண்மையாக வாழ்வதினால்!





பிறந்த நாள் வாழ்த்து | pirantha naal vaalthu


நாளைய ரோஜாப் பூவாக மலரப் போகும்
இன்றைய ரோஜா மொட்டுக்களோடும்

வையகத்தில் மலர்ந்து விட்டதாய் 
இன்று பிறந்த நாள் கொண்டாடும்
ஒட்டு மொத்த ரோஜாப் பூக்களின் 
மண வாழ்த்துக்களோடு 
என் மன வாழ்த்துக்களும்!

இது போன்ற மற்றுமொரு பிறந்த நாள் வாழ்த்து கவிதை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2013/11/blog-post_17.html

நிம்மதி கவிதை



என் கவிதை கண்ட சிறகுகள் 
நானும் கண்டு விட்டால் 
நிம்மதியாக இருப்பேன்
ஏழு கடல் தாண்டி 
நிம்மதி இருந்தாலும்!

எங்கே தேடுவேன்
என் அன்னையின் கருவறையில் 
நான் கண்ட அந்த நிம்மதியை !