வாழ்த்து கவிதை | Vaalthu kavithai

வாழ்த்து கவிதை | Vaalthu kavithai

kalyaanam
Marriage Vaalthu

அன்னையை அரவணைக்கும் 
மழலை சிறு குழந்தையாய் !

தமிழை சீராட்டி கவி பாடும் 
சங்க கால புலவனாய்!

ஆடையில்லா மல்லிகை பூக்களின் 
பிரிக்க முடியாத மணமாய்!

தேகத்திற்கு குளிர் கொடுக்கும் 
மார்கழி விடியல் பனியாய் !

இல்லத்தை தினம் அழகுபடுத்தும் 
இல்லத்து குல ராணியாய்!

இல்லத்தை நல்வழி நடத்தும் 
இல்லத்து குல அரசனாய்!

பிறர் வாழ்வுக்கு உதாரணமாய்
அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள் !

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக