ஏப்ரல் 2015

வாழ்த்து கவிதை | Vaalthu kavithai

kalyaanam
Marriage Vaalthu

அன்னையை அரவணைக்கும் 
மழலை சிறு குழந்தையாய் !

தமிழை சீராட்டி கவி பாடும் 
சங்க கால புலவனாய்!

ஆடையில்லா மல்லிகை பூக்களின் 
பிரிக்க முடியாத மணமாய்!

தேகத்திற்கு குளிர் கொடுக்கும் 
மார்கழி விடியல் பனியாய் !

இல்லத்தை தினம் அழகுபடுத்தும் 
இல்லத்து குல ராணியாய்!

இல்லத்தை நல்வழி நடத்தும் 
இல்லத்து குல அரசனாய்!

பிறர் வாழ்வுக்கு உதாரணமாய்
அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள் !

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!









விதி வலியது | Vithi valiyathu

vithi
Vithi valiyathu


விதியினால் மதி இழந்தேனா? அல்லது 
மதியினால் விதியை அடைந்தேனா?
முடிவெடுப்பதில் அதி வல்லவன் நீ!
உன் முடிவை நீயே தேடிக் கொள்ள 
மானுடருள் நீ எந்த வகையினன்?
முதல் தோல்வி  கண்டவனா? அல்லது 
முதல் முறை பரிதாபத்துக்கு உள்ளானவனா?

ஒரு தலைக் காதல் | oru thalaik kaathal

One side Love
One Side Love

ஒற்றைக் குடையில் 
ஒருமித்து நாம் நடையிட 
ஒரு தலைக் காதலோடு
ஒற்றைக் குடை!