தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
ரயில் பயணம் | Rayil payanam
வெளியூர் பயணம் நான் செல்ல
தூண்டி விடுவாய் என் நினைவுகளை!
நகராத இரு கோடு தண்டவாளத்தில்
மைல் வேகத்தில் நீ பறப்பாய்!
முன்பதிவில்லா பெட்டியில்
முன்பதிவு செய்யபட்டிருக்கும்
எனது கடந்த கால நினைவுகள்
முதல் காதல் முதல் கடைசி காதல் வரை !
உனக்கும் மூதாதையர் உண்டு-அது
என் சிறு வயது அட்டை ரயில்.
எரிபொருள் சக்கரம் இரண்டும் இல்லா
என் பட்ஜெட் பெரிய ரயில்!
உன்னோடு ஓடி வரும் மரங்களால்
உன்னை வீழ்த்த முடிவதில்லை
ஆங்கங்கே நின்று செல்லும் நிலையத்தில்
விட்டுப் பிடித்து தொடரச் சொல்வாய்!
அடம் பிடிக்கும் செல்ல குழந்தைகளை
ஜன்னலோர இருக்கையில் அமர்த்தினால்
அன்னை மடி அதுவென ஆர்பரிப்பர்.
குழந்தைப் புன்னகை ரயிலுக்குச் சமர்ப்பனம்!
பெரிய சத்தம் பெரிய வேகமாய் நீ செல்ல
சிறய சிகப்பு விளக்கு உன்னை மயக்கும்!
புத்தி மயங்கிய உன்னை எழுப்ப
பச்சை விளக்கு பளிசென்ன ஒளிரும்!
வளைந்து செல்லும் தண்டவாளத்தால்
வளைவு நெளிவு உனக்கு அழகு
அதை வடித்து கொடுத்த தண்டவாளம்
கவிஞனுக்கெல்லாம் தலைவன் ஆனான்!
என் வருகை என் அம்மா எதிர்பார்க்க
என் அன்னைக்கு அன்னை நீயானாய்!
நல்ல படியாய் சேர்ந்து விட்டேன்
நற்பெயர் எல்லாம் நீ அடைவாய்!
நான் பயணம் செய்தது என்னவோ
முன்பதிவு இல்லா பெட்டிதான் - ஆனால்
எனக்கும் ரயிலுக்குமான உறவு
முன் ஜென்மத்தில் பதிவானவை!
அப்துல் கலாம் கண்ணீர் அஞ்சலி கவிதை | Abdul kalam
இளைஞர்களை கனவு காண சொல்லி
இந்தியாவையும் உற்சாகபடுத்தி
இரு துருவ முனைகளிலும்
இந்திய பெருமையை எடுத்துரைத்து
யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாரினில் நம் பெருமை எடுத்துரைத்து
இரு வரி தமிழ் திருக்குறள்களை
இளைஞர் இதயத்தில் விதைத்து
குழந்தையோடு குழந்தையாய் நீ மாறி
குதூகலத்தோடு நீயும் உரையாடி
கேள்விக்கனை தொடுக்கச் செய்து
குழந்தைகளுக்கு அறிவுப்பதில் ஊட்டி
பிறந்த ஒரு நாள் மட்டும் நீ அழுது
உன் இறந்த நாளில் இந்தியாவை அழ செய்து
தன்னம்பிக்கை உத்வேகம் எமக்களித்து
எம்மை விட்டுப் பிரிந்த எம் கலாமே!
வருந்துகிறது! நீங்கள் இல்லா இந்தியா!
முதல் காதல் | Muthal Kaathal
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)