தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
marriage kavithai in tamil | திருமண வாழ்த்துக்கள்
![]() |
Thirumana Vaalthu Kavithai |
நாதஸ்வர சத்தம் கேட்டு
நான்கு திசைகளிலும் இருந்து
தென்றல் வந்தது...
திருமண வாழ்த்துச் சொல்ல....
திருமண வாழ்த்துக்கள்..
சந்தனமும் குங்குமமும்
மாறி மாறி வாழ்த்துச் சொன்னது
திருமண வாழ்த்துக்கள்..
அறம் பொருள் இன்பம்
உங்களுக்காக படைக்கப்பட்ட
தமிழ் வார்த்தைகள்.
வார்த்தை சொன்ன வாழ்த்து இது..
திருமண வாழ்த்துக்கள்..
பொருத்தமுள்ள ஜோடிக்கு
பூமாலையாக அமைந்ததாக
ஆரவாரம் கொண்ட
பூக்களின் மண வாழ்த்துக்களோடு
என் மன வாழ்த்துக்களும்....
திருமண வாழ்த்துக்கள்..
பதினாறும் பெற்று
கிளிப் பிள்ளை | Kilippillai
காதலர்களின் முதல் சந்திப்பு
![]() |
Muthal Santhippu |
தலை சாய்த்த
நெற்கதிரைப் போல்
நாணம் கொண்ட முகம்.
அழகின் எல்லை அது
அளவோடு சிவந்து சிரித்த
நாணம் கொண்ட உதடுகள்
புள்ளி வைக்காத கோலம்
அழகாக போட்ட
நாணம் கொண்ட கால்கள்.
விரல்களுக்கு இடையே
பரிமாறப்பட்ட கவிதை சொடுக்குகளின்
நாணம் கொண்ட விரல்கள்.
நேருக்கு நேர்
முகம் பார்க்க
நாணம் கொண்ட கண்கள்.
மஞ்சள் தேகத்திற்கு
சிகப்பு சாயம்
நாணம் கொண்ட கன்னங்கள்.
அழகு அழகு
பெண்மைக்கு நாணம் அழகு
என்னவளுக்கு
அது இயல்பான அழகு!
பள்ளி தோழனுக்கு .....
![]() |
Schoomate kavithai |
அன்று ஒரு நாள்
பள்ளிக்கூட வேப்ப மர நிழல்
மதிய உணவு இடைவேளை
பகிர்ந்தளிக்கப்பட்ட உணவுகள்
பரிமாறப்பட்ட பாசங்கள்(நட்பு).
ஆம் ! உன் பிறந்த நாளை முன்னிட்டு
என் ஆழ்மனதில் எழுந்த நினைவுகள்.
நம் நட்புக் கூட்டங்கள்
ஒன்றாகச் சேர்ந்து
கேலியும் கிண்டலுமான
கதை பேசி
கழிந்த காலங்கள் அவை..
இடை இடையே
இயற்பியலும் வேதியலும்.
பல சான்றோர்களின்
நூல்களைப் படித்திருக்கிறேன்
மனித ஜென்மம் பாவம் என்று.
உன்னுடன் பழகிய பின்பு - நான்
ஏற்றுக் கொள்ளாத வார்த்தைகள் அவை.
கடந்த காலம் திரும்ப வராது
பல முறை பேசிய
தந்தை பேச்சு உணர்த்தவில்லை.
அன்று ஒரு நாள்
பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது
நானும் எனது நண்பனும் என்று
ஆரம்பிக்கும் எனது உதடுகள்
உள் மனதுக்கு உணர்த்தியது
கடந்த காலம் என்னவென்று.
உன் நினைவுகள்
என் ஆழ் மனதில்
சற்று ஆழமாகத்தான்
புதையலாக
புதைக்கப்பட்டிருகிறது.
புதையலை தேடி
எனது பயணம்
இன்னமும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அன்று நாம் சாப்பிட்ட
கைகளின் ஈரம்
இன்னமும் காயவில்லை
என்பதால்தான் என்னவோ
இன்று வரை
உன்னைச் சந்தித்து
கை குலுக்கவில்லை.
நமது பள்ளிக்கூட
வேப்ப மரத்து நினைவுகளோடு
உன்னை மனமார வாழ்த்துகிறேன்.
என் உயிர் தோழனுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
Arthamulla hindhu matham | அர்த்தமுள்ள இந்து மதம்
![]() |
Arthamulla Indhu matham |
காலம் கடந்து
நான் தொட்ட பகவத் கீதை.
உண்மைதனை உணர்ந்தேன்
விதியும் மதியும் என்னவென்று.
உன் அர்த்தமுள்ள இந்து மதத்தினால்!
என் காதலுக்குக் கண்ணில்லை
காதலை பொறுத்தவரை
நான் குருடன்தான்- ஆனாலும்
பள்ளம் மேடு அறிந்து
பாதையில் பயணிப்பேன்.
உன் அர்த்தமுள்ள இந்து மதத்தினால்!
ஒரு கோப்பையிலே
உன் குடியிருப்பு - இனி
உன் அர்த்தமுள்ள இந்து மதத்திலே
என் குடியிருப்பு.
கவிதை உலகிற்கும்
கற்பனை உலகிற்கும்
தத்துவ உலகிற்கும்
மறையா சூரியனே!
கவிஞர் கண்ணாதாசனே!
அர்த்தமுள்ள இந்து மதம்
அருளியமைக்கு நன்றி!
vetkam tamil kavithai | நாணம் கவிதை
kalapadam | கலப்படம்.......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)