Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்
பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

tamil christmas songs | தமிழ் கிறிஸ்துமஸ் பாடல்

Christmas
Tamil Christmas song

அகரத்தின் அகரமே, இயேசுவே
உலக அகரத்தில் நீ அகரமே!

இதழ் படிக்கும் பைபிளிற்கு நீயே அகரம்
படித்து உணரும் இதயத்திற்கும் நீயே அகரம்
நகரும் உலகிற்கு உந்தன் ஒளியே அகரம் - (2)
தடம் பதிக்க வரும் எல்லா கருவுக்கும் நீ அகரம் 
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2)

உருகும் அன்புக்கு உலகில் நீயே அகரம்
உருவாகும் அன்புக்கும் நீதான் என்றும் அகரம்
உன்னதங்கள் எல்லாவற்றிலும் நீதான் அகரம் 
அதை காத்திட துடிப்பதில் நீதான் அகரம் - (2)
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2) இதழ் படிக்கும்

தாய் தேற்றும் அன்புக்கு உந்தன் அருளே அகரம்
தவமாய் தந்தை அருளும் வலிமைக்கு நீயே அகரம் 
குதூகலமாய் குடும்பம் காரணம் நீதான் அகரம் 
உன் அகரத்தின் துணையாய் உன்னோடுதானே என் அகரம் - (2)
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2) இதழ் படிக்கும்









ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் எனது கவிதையின் வரியில் | Anantha yzhalai meetukiraai



Anantha Yaalai

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி
உன் விரல் மென்மை உணர்ந்து விட்டேன் 
அது பூவிதழ் தாண்டி அறிந்து விட்டேன் 

உன் புன்னகை தாண்டி உலகம் சொல்ல 
உலகிடம் எதுவும் இல்லையடி
சோர்ந்து கிடக்கும் நெஞ்சங்கள் எல்லாம் 
உன்னிடம் சுகங்கள் பெற்று விடும் 
கண்விழி பார்த்து கவிதைகள் படித்தேன் 
கவிதையில் எதுவும் கற்பனை இல்லை
உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான் 
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி
உன் விரல் மென்மை உணர்ந்து விட்டேன் 
அது பூவிதழ் தாண்டியதை அறிந்து விட்டேன் 

சுற்றிலும் இயற்கை சொல்லுதடி
சுந்தர தமிழில் பாடுதடி 
மீண்டும் கேட்க நாடுதடி 
உன் புகழ் ஏனோ உயர்ந்தபடி 
அடி தாளங்கள் எதற்கு ராகங்கள் எதற்கு 
உனது குரலே போதுமடி 

உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான் 
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி

ரோஜாவின் இதழ்கள் சின்னதடி 
உன்னை பார்த்தால் நடுங்குதடி 
உந்தன் அழகோ கூடுதடி 
ரோஜாவோ இன்று தோற்றதடி
அதன் முள்ளையும் தொட்டு நறுமணம் கொடுத்து 
உனக்குச் சமமாய் மாற்றி விடு 

உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான் 
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி

சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது 
உன்னோடு காதல்  கொள்ளுதடி




நெனைச்சபடி நெனைச்சபடி | ninaichapadi ninaichapadi

நெனைச்சபடி நெனைச்சபடி மணப்பொன்னு அமைஞ்சதடி என்ற பாடலைப் போல , இந்த உயிர்சிந்தி உயிர்சிந்தி பாடல். பாடிப் பாருங்கள்..


உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!

தலையணையே துணை என நினைத்து
தவிப்புகளை உணவாய் மாற்றி
தள்ளியவள் நீ என் பெண்ணே!
இரவுகளும் கனவுகள் படைக்க
இதயத்தில் ஓர் புத்துயிர் கொடுக்க
நீயும் நானும் சங்கமம் ஆவோம்!

உன் இதயத் துடிப்பாய் நானும் 
என் உயிரில் உறவாய் நீயும்
உண்மைக் காதலாய் உலகிற்கு இருப்போம்!
வான் நிலவு உனை வரவேற்க
என்னவென்று அதை நான் கேட்க
இனி நிலவின் தேவதை நீ என்று
விண்ணுலகு அதிர்வலை எழுப்ப
மெய் உணர்ந்து மெய் மறந்தேன்!

ஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை
ஹை ஹை ஹை ஹைஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை ஹை

தூசு கொண்ட காற்று உந்தன் முகம் தீண்ட
மார்போடு உன்னை அணைத்தேன் உந்தன் கவசமாக
மோத வந்த தூசு என்னை தண்டித்து செல்ல
உந்தன் இதழ்கள் சிந்திய காற்று என் விழியோடு உறவாட 
உன் இதயத் துடிப்பு  இனி என்னோடு 
என் வாழ்க்கையே இனி உன்னோடு ! (2)
என் பிறவி பலன் அது இனிக்கும்
கோவில் குளம் செல்லாமலே!

என்னுயிரே...! கண்மணியே...!
என்னுயிரே...! கண்மணியே...!

உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!

சூரியக்கதிர் என்னை சுட்டு விடும் என்று
சேலை நுனி நீயும் கொண்டு குடை பிடித்தாயே
பூமி கொண்ட காதல் அதை
உன் நிழலோடு சொல்லியது!
உந்தன் உள்ளம் புரியாமலே!
என்னோடு நீயும் காதல் கொள்ள
புரிந்து விட்ட பூமி அது தாடி வளர்த்தது(2)

பூமியெங்கும் பச்சை புற்கள்
புற்களே பூமியின் தாடியாய்
என் காதல் நீ!  என் காதலி நீ!

உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!

தலையணையே துணை என நினைத்து
தவிப்புகளை உணவாய் மாற்றி
தள்ளியவள் நீ என் பெண்ணே!
இரவுகளும் கனவுகள் படைக்க
இதயத்தில் ஓர் புத்துயிர் கொடுக்க
நீயும் நானும் சங்கமம் ஆவோம்!






வெப்பம் மழை வரும் அறிகுறி | veppam malai varum arikuri

veppam
Malai varum arikuri

தினம் பல கனவுகள்
என் கவிதையில் வருகுதே
கனவுகள் பலிக்குதே
இது என்ன மெய்யா பொய்யா?

பூக்களின் மனம் அது 
உன் இதழ்களில் தெரியுதே
நினைவுகள் தொலையுதே
நினைவினில் நீயா நானா?

கை கோர்த்து நடக்கும் போது 
உற்சாகம் கொள்ளும் விரல்கள் 
இதயத் துடிப்பில் வேகம் வேகம் 
கூடி கூடித் தொலைந்து போகிறது

கற்பனை தவறும் போது 
தடுமாறும் கவிதையாவும் 
உன் நினைவைத்தேடி 
நீந்தி நீந்திச் செல்கிறதே

பருவம் சொன்ன காதல் அது ஒ ஒ ஒ 
பலித்தே போன கனவும் அது ஒ ஒ 
கனவினில் ஒரு இதழ் முத்தம் ஒ ஒ ஒ 
கலையாத கனவு அது ஒ ஒ ஒ 
உன் வெள்ளிக் கொலுசின் ஸ்வரம் தேடி நானும் வந்தேனே
அது எட்டாவது ஸ்வரமடி

அவள் சிரிப்பின் சிதறல்கள் ஒ ஒ ஒ 
அது என் கவியின் வரிகள்  ஒ ஒ ஒ
நான் கேட்டது உதட்டோர ஈரங்கள்   ஒ ஒ ஒ 
அட கன்னத்தில் பதித்தது யாரது ஒ ஒ ஒ 
பெண்மைக்குள் இன்னொரு பெண்மை கவி 
அது கருவிழி கவிதையடா!