Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்
தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அன்னையர் தின கவிதை

அன்னையர் தின கவிதை
அன்னையர் தின கவிதை


உலக அகராதிகள் பாசம் என்றால்
உன் பெயரை முதலில் பொழியும்
உயிரைப் பிரித்து இன்னொரு உயிராய்
உலகிற்கும் உறவிற்கும் கை கொடுப்பாய்!

உனக்கென தனியாய் ஓர் சிந்தனை
உன் மனதை ஆட் கொண்டிருக்காது
உன் உறவைத் தவிர ஓர் சிந்தனை
உன் மனதில் துளியும் இருக்காது!

உன் முன்னுரையும் முடிவுரையும்
உறுதியாய் சொல்லலாம் உனக்கானதல்ல
உறுதியாய் சொல்லும் அனைத்தும்
உனது உறவை உறுதியாய் நிலை நிறுத்தும்!

நல்வார்த்தை நிதமும் நீ தருவாய்
உன் வேதனை ஏனோ தினம் மறப்பாய்
என் உள்ளம் மெலிய நிலை நேர்ந்தால்
உன் உயிரையும் விட்டு மீட்டிடுவாய்!

பத்து மாதம் அல்ல 
முடிவிலி சுமையாய் இருந்தாலும் 
சுமந்து இருப்பாய்!
முகம் காணாதிருந்தாலும்
முகம் சுளிக்காமல்
முதுகு வலி தாங்கிக் கொண்டே 
முடிவிலி எண்ணிக்கையில் 
முத்தங்கள் கொடுத்து இருப்பாய்!

அன்பை அளவிட நினைத்தேன் 
எல்லை அதற்கு இல்லை என்றெண்ணி 
கை விடும் நினைப்பை விதைத்தேன்
விதைத்த நினைப்பு மாறி முளையிடவே 
அறிந்து கொன்டேன் - அன்னை இவளே 
அன்பின் முடிவிலி இந்த அகிலத்தில்!

முதல் கவிதை எழுத முயற்சித்தால் 
உன் அன்னையை நினைத்து விடு 
கவிதை கடலென ஆர்ப்பரிக்கும்.
என்ன ஒரு ஆச்சரியம் என்றால் 
கவிதையில் கற்பனை கலப்படம் 
துளி அளவும் கலந்திருக்காது!

அன்னையின்  முன்னே 
சொல்லக் கூடாத உண்மை 
எனக்கு பசிக்குது அம்மா!
சொல்லக் கூடாத பொய் 
நான் சாப்பிட்டேன் அம்மா!
மீறியும் சொல்லி பாருங்கள் 
அன்னையின் அர்த்தம் அறீவீர்கள்!

இதழ் கடித்து விழி உருட்டி
மிரட்டுவதில் இவள் கெட்டிக்காரி 
என் இதழ் மட்டும் அல்ல 
இதயமும் சேர்ந்தே சிரிக்கிறது!
தினமும் இதழும் சிரிக்கிறது 
இதயமும் சிரிக்கிறது!

வான் உச்சிக்கு வந்த சூரியன் 
கதிர் மூலம் என்ன சொல்லியதோ 
தெரியவில்லை
என் பிள்ளையை காணவில்லை 
புலம்பியபடி ஒரு தேடுதல் வேட்டை!
தெரு வீதிகழும் சந்தும் 
இவள் பாசம் அறியும்!

மணி அடித்தால் சோறு
இது அம்மாவின் பாச ஜெயில்!
பல நேரங்ககளில் 
மணி அடிக்காமழும் சோறு!
பசி என்னும் இரண்டெழுத்தை மறந்தேன் 
பசித்து உண்ணுதலையும் மறந்தேன் !

இவளுக்கான உணவை 
இரவுகள் எடுத்து வைக்கிறது 
எஞ்சிய உணவுகள் 


காதலர் தின கவிதை - பிப்ரவரி - 14

காதலர் தினம்
காதலர் தின கவிதை

ஆரம்பம் முடிவு விழியில் தெரியா  
ஆராய்ச்சியிலும் பிடிபடா 
காலாவதி பெயரளவிலும் இல்லா 
காலம் கடந்தும் வாழ்ந்தும் வாழ்ந்திட்ட
வாழ்ந்து கொண்டிருக்கும் காதலே!

மெதுவாய் சுகமாய் நீ என் இதயம் தொட 
என் கரமோ காதல் கவிதை தொட 
நழுவி விட்டன  கவி வார்த்தைகள்
எட்டிப் பிடித்து கரம் கொடுத்தாய்! - காதல்
கரமும் பிடித்தேன்! கவிதையும் பிடித்தேன்!

உதிக்கும் சூரியனும் மலரும் நிலவும் 
புரியாத வார்த்தைகள் தினம் சொல்லும் - காதலே
என் விழி நோக்கி விளக்கவுரை சொல்வாய்!
கண்டதெல்லாம் புரிகிறது
காதல் மட்டும் புரியவில்லை - இருந்தும்
காதலிக்க தகுதி உன்னால் பெற்றேன் !

எத்திசை தேடினும் நிலவாய் காதலி முகம்
நேர் எதிரே எதிரொலி எதிரொளியாய்
காதலே ! எல்லாமே உன் மாய ஜாலம்!
காதல் என்றால் சும்மாவா ? உலகமே குலுங்கும்!
வான் புவி எத்திசை நோக்கினும் காதலே!

தனிமை சற்று கிடைத்தால் 
தானியங்கி ஒலி பெருக்கியாய் 
இரு வரி இதழ்கள் மாறும்!
இலவச இணைப்பாக 
இதழ் சிரிக்கவும் செய்யும்!
எல்லாமே காதல்/காதலியின் பரிசு!


மாலை மயங்கும் சூரியன் 
காலையில் விழிக்கும் 
பொழுது மறைந்தாலும் 
பொழுது மலர்ந்தாலும் 
காதலர்கள் விழிப்பதில்லை!
விழிக்காமல் இருப்பதில்
வியப்பு ஏதும் இல்லை!

மாலை கருக்கல் மலர வேண்ட
கதிரவனை வழி அனுப்பி 
சில மனது கவிதை தேடி 
காதலி முகம் அதில் காணும்!
கவிதை அறியா மனது 
கனவில் கால் பதிக்கும்!
கவிதையும் கனவும் 
காதலின் இரு கண்கள்!

முழு நிலவு வானில் தொங்கும் 
எதிரொளி நிலவு கடல் அலையில் 
அங்கும் இங்கும் சிதறும்!
வேடிக்கை பார்க்கும் முழு நிலவு 
உன்னத சுகம் அதில் காணும்!
காதலை விளக்கியாயிற்று!

தினம் ஓர் இன்பம் கிடைக்கும்
அந்த இன்பத்திற்கு பெயர் சூட்ட 
மனமும் மூளையும் தடுமாறும்!
இந்த இன்பமும் தடுமாற்றமும் 
இறுதி ஆயுள் வரை வேண்டுமா?
எனில் - காதலித்துப் பாருங்கள்! 


வாழ்க காதல் ! வளர்க காதலர்கள்!

காதலர் தினத்துக்கான இன்னும் ஓர் கவிதை படிக்க லிங்கை கிளிக் செய்யவும்...





குடியரசு தின கவிதை | Kudiyarsu thina Kavithai

Kudiyarsu thinam
Kudiyarsu thina kavithai


இடைவெளி இல்லா காற்றாய் 
பாரதம் எங்கும் சமத்துவம் தொடர 
நகருகின்ற தனி ஊசலாய் 
சம உரிமை தொடர்ந்து நீடிக்க 
காலம் காட்டும் கடிகாரமாய் 
அனைவருக்கும் ஒரே சட்டம்!


அன்று முதல் இன்று வரை 
முடிவை எட்டா தீப ஒளியாய் 
வேற்றுமையில் ஒற்றுமை 
நம்மோடும் நம் உணர்வோடும் 
தினமும் பயணம் செய்ய 
வழி வகுத்த அரசியல் அமைப்போடு 
அனைவரும் பயணிப்போம்!

இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!







நண்பர்கள் தின கவிதை | Nanbarkal thina kavithai


nanbarkal
Friendship day kavithai


உறவுகள் பலவிதம் என்று 
உலகம் விதைத்து இருக்கிறது 
நட்பு என்ற விதை ஒன்று 
இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது!

ஒருமையும் (காதல்) பிடிப்பதில்லை 
தனிமையும் (ஒரு தலை காதல்) பிடிப்பதில்லை 
தோழர்கள் (நண்பர்கள் ) என்ற பன்மை 
நட்புக்கு (உயிருக்கு ) பிடித்திருக்கிறது!

காதலை சல்லடை இட்டால் 
வயதைச் சொல்லும் 
நட்பை சல்லடை இட்டால் 
உயிரை உணர்வை சொல்லும்!

விவரம் அறியும் முன் 
நட்பு பூத்து விடுகிறது!
காதல் பிறக்க ஹார்மோன்கள் தேவை 
நட்பு பிறக்க உயிரே தேவை!

பதில் இல்லா வினாக்கள் 
நட்பில் எழுவதில்லை 
நட்பான உறவுகள் பிரிவதில்லை
வேரிட்ட மரங்கள் நகர்வதில்லை! 

குழந்தையின் கிறுக்கல்கள்தான் 
ஆனாலும் புரிந்து விடுகிறது 
நட்பாக கிறுக்கிப் பார் 
ஆஹா! கிறுக்கல் எல்லாம் கவிகள்!

இரவின் இடைவெளி பகலா 
பகலின் இடைவெளி  இரவா
உயிரின் இடைவெளி நட்பா 
நட்பின் இடைவெளி உயிரா!

மயில் இறகில் அழகு விழிகள் 
குயில் குரலில் ஓர் சங்கீதம் 
தூணிலும் துரும்பிலும் இறைவன் 
துடிக்கும் இதயத்தினில் ஓர் நட்பு!

எனது இனிய தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!







முட்டாள் தினம் கவிதை | April fool

April1st
Happy Fools day!

கலியுக அரசியல்வாதிகளால்
சிந்திக்க மறந்த முட்டாளாகினோம்!
கற்பனை இல்லா உதாரணம் நாம் 
நிச்சயம் கலப்படம் இல்லா உண்மை!

இலவச பொருட்கள் எல்லாம் 
இலவசமாய் இன்று இல்லத்தில்!
இலவசத்தோடு இலவசமாய் 
இலவச முட்டாள் இணைப்பிதழ் ஆனோம்!

ஊடகங்களின் அகோர பசிக்கு 
உணவாக தினமொரு பொய்கள்!
குப்பை உணவான உண்மைகள்
உப்பில்லா உணவாய் முட்டாள் மக்கள்!

கார்ப்பரேட் எல்லாம் 
சரியாய் சிந்திக்கும் 
சரியாய் சிந்திக்கா மக்களை 
சரியாக பயன்படுத்தும்!

சரி எது ? தவறு எது ?
அறிவாளியா ? முட்டாளா ?
தவறாய் சொல்வார்கள் 
முட்டாள்தான் சரி என்று!

மணல் திருட்டெல்லாம் 
கண் முன் கொள்ளை!
தினம் அறிந்து  இதழ் திறக்கா
நாம் எல்லாம் முட்டாளின் எல்லை!

கட்சியின் கொள்கை எல்லாம்
கண்ட ---------ம் சொல்லும்!
பயணம் என்னவோ 
ஊழலை நோக்கியே செல்லும்!

நாளும் ஏமாறுவதை 
மூளைக்கு நினைவுபடுத்தவே
ஏமாற்றத்தை எடுத்துரைக்கவே 
நமக்கென்று ஒரு நாள்!

முட்டாள் தினத்தை 
கொண்டாடுங்கள்!
தலை கவிழ்ந்து நாணம் மறந்து 
கொண்டாடுங்கள்!

முட்டாள் தின வாழ்த்துக்கள்!






உலக தண்ணீர் தினம் கவிதை | World water day Kavithai


save_water
World Water Day

(இளைய நிலா பொழிகிறதே பாடலின் சாயலில்)

நீர் வரவு குறைகிறதே
உலகமெல்லாம் காய்கிறதே!
விழி முடி செவி அடைத்து அலைகிறமே
மானுடரே அறிவில்லையோ  ! ...(2)

நீர் வரவு குறைகிறதே...

வரும் காலம் அலங்கோலம் 
தலைமுறை இனி தேய்பிறையோ
வரும் மழையில் ஒரு குளியல் 
எண்ணமெல்லாம் இனி மறக்கும்! (2)

கானல் நீரிலே தாகம் தீருமோ
தண்ணீரில் முகம் காண அரிதாகுமோ 
தண்ணீருக்கு வரிசை அமலாகுமோ

தண்ணீருக்கா சண்டை  என்றாய்
சொன்ன சொல்லை நீ  மறப்பாய்
சண்டையிட்டு அறிவிழப்பாய்
தண்ணீரை இழந்து நீ நிற்பாய்!(2)

வான வீதியில் வெண் சேலைகள் 
இழந்த சேலையோ கரு மேகமோ 
வான் மேகங்கள் விதவைக் கோலங்கள்!

நீர் வரவு குறைகிறதே...





உலக மகளிர் தின கவிதை | Ulaka makalir thinam kavithai

March 8
Women Day

பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது 
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!

மணம் திறக்க இதழ் திறக்க 
மல்லிகைகள் மறப்பதில்லை 
அன்பு காட்ட மறப்பதில்லை 
அன்னை மன பெண் இதயங்கள்!

இதயம் சில நேரம் பேச 
இதழ்கள் அமைதி கொள்ளும்
இதழ்கள் அனபை நிராகரித்தால் 
இதயம் பெரிதாய் எழுச்சி கொள்ளும்!

விழிகள் இரக்கத்தை பார்வையாகவும் 
இதழ்கள் அன்பை சொற்களாகவும்
இதயம் தியாகத்தை துடிப்பாகவும் 
உயிரோடு ஒட்டிக் கொண்டவள்!

மகளாய் பிறப்பெடுத்து 
குல தெய்வமாய் உருமாறுபவள்
நதிகள் எல்லாம் பெண் பெயர் சூட
பூமியும் சூட்டிக் கொண்டது பூமா தேவியென்று!

உறவு முறை ஆராய்ந்து பார்த்தால் 
உறவு படைத்த பிரம்மா ஆவாள்!
அன்னையாய் காதலியாய்
இன்னும் பல உறவுகள்!

கலியுக அறிவியல் ஆண் மகனையும் 
தாய்மை அடையச் செய்யும் 
இயல்பாய் பெண் சுரக்கும் அன்பை 
இதயத்தோடு ஒட்டுவதில் தோல்வி கொள்ளும்!

பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது 
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!

மகளிர் தின வாழ்த்துக்கள்!.....





தேசிய அறிவியல் தினம் | Dhesiya Ariviyal thinam

Raman Day
Thesiya Ariviyal Thinam


ராமன் விளைவினால் வந்த விளைவு 
தேசிய அறிவியல் தினமாம்!
அறிவினால் வந்த விளைவு அறிவியலாம்!

சிறீப் பாய்ந்து சிரித்து நிற்கின்றது
சிறகுகள் இல்லா ராக்கெட்கள்
செவ்வாய் கிரக செயற்கை கோள்கள்!

இல்லத்து இயந்திர பொருட்களில் 
எண்ணிய வேலை சுகமாய் முடிக்க
கச்சிதமான அறிவியல் உண்டு!

விளையாட்டிலும் அறிவியல் புகுத்துவோம்
வீதியில் காந்தங்களோடு விளையாடுவோம்
விண்ணை தாண்டியும் தேடல் கொள்வோம்!

விடுமுறை காணாத அறிவினால்
மின் விளக்கினால் இரவும் பகலாயிற்று
பகலவனையும் படித்தாயிற்று!

முடியாது என்ற வார்த்தை எல்லாம் 
விழி முடி பல நாளாயிற்று
அறிவியலுக்கு அடி பணிந்தாயிற்று!

இன்னும் சொல்லிச் செல்லலாம் 
அறிவுக்கு எல்லை இல்லை - ஆதலால் 
அறிவியலுக்கும் எல்லை இல்லை!




சர்வதேச உலக நீதி தினம் கவிதை | Sarvadesa Ulaga Neethi thinam

justice day in tamil
Justice

உன் இதயத் துடிப்பு போலவே 
என் இதயத் துடிப்பும்
உன்னைப் போலவே 
நீ பிறரையும் என்ன வேண்டும்!

உன் அகம் உன் சுற்றம் போல 
என் அகம் என் சுற்றம்
நல் உறவுக்கும் நல் உணர்வுக்கும் 
நீ கை குலுக்கிடல் வேண்டும்!

உன் உடல் உன் குருதி போல 
என் உடல் என் குருதி
நல் சிந்தனைகள் மனதில் ஏற
சாதிகள் உடன் கட்டை ஏறட்டும்!

உன் மதம் போதிக்கும் அன்பைப் போல
என் மதம் போதிக்கும் அன்பு 
மதங்கள் எல்லாம் ஒன்றே 
மனங்கள் முழுமை பெறட்டும்! 

உரிமைகள் முழு உருவம் பெற 
அதிகாரம் அழிந்து போகட்டும்!
எல்லாமே சில காலம்
குற்றங்கள் மண்டி இடட்டும்!  

தனி மனித ஒழுக்கங்கள் 
முழுமையான ஒழுக்கம் பெறட்டும்!
நீதி தேவதையின் தராசுக்கு
வேலை இல்லாமல் போகட்டும்!





சர்வதேச தாய் மொழி தினம் கவிதை | Sarvadesa Thaai mozhi thinam

World language day
Thaai mozhli Thinam


மொழியின்றி வாழ்வதில்லை 
இல்லை இல்லை 
தாய் மொழியின்றி வாழ்வதில்லை!

சிந்தனைக்கு கவி சுவை சூட்டவும்
இல்லை இல்லை 
சிந்தனைக்கு கவி சுவை ஊட்டவும்,

நம் கலாச்சாரம் அழிந்து விடாமல் 
இல்லை இல்லை 
நம் கலாச்சாரம் சிதறி விடாமல்,

மொழியில் பிற மொழி புகாமல் 
இல்லை இல்லை 
மொழியில் பிற மொழி கலப்பிடம் ஆகாமல்,

இன்று வரை செம்மொழியாய் 
இல்லை இல்லை 
என்றுமே செம்மொழியாய், 

தாய் மொழியை மனதில் மறவாமல்
இல்லை இல்லை 
தாய் மொழியை மனதில் மறைக்காமல்,

எங்கு நான் நடந்து சென்றாலும் 
எங்கு நான் பறந்து சென்றாலும் 
நிழலாய் பிற மொழி வரட்டும்!

உடலாய் உணர்வாய் உயிர்வாய்
ஆன்மாவாய், ஆம்! ஆன்மாவாய்!
என் தாய் தமிழ் மொழி வரட்டும்!

ஆன்மாவிற்கு அழிவில்லை!
தாய் மொழிக்கு நிகர் ஏதும் இல்லை! 




சிட்டு குருவி தினம் | Sittu kuruvi day



Kuruvi
Chittu kuruvi Day

ஏழை குடிசை அழகானது
சிட்டு குருவியின் குடிலாலே!
இறக்கை முளைத்த மழலையாய்
இலக்கு தெரியாமல் வீட்டினுள்
இங்கும் அங்கும் பறந்தாயே!

கிராமத்து வீதிகளுக்கு அழகாய்
மின் கம்பியில் வரிசையாய்
மின்னொளியாய் தெரிந்தனவே!
இனி எங்கு சென்று தேடுவேன்
சிறுவயதில் நான் கண்ட சிட்டுதனை!

இரை தேடி ஏமாந்த சிட்டுக்கள்
மானுடனால் ஏமாற்றப்பட்டனவே!
வேதி உரங்கள் கலந்த மண்ணாலே!
புழு பூச்சி ஏதும் இல்லா
பூமித்தாய் அநாதை ஆனாளே!



சிட்டு பறக்கும் இடத்தில்
சிறகுகள் இல்லாமல்
புகை தூசு பறந்தனவே!
சிட்டு பறக்கும் உயரம் தாண்டி
செல்போன் டவர் வளர்ந்தனவே!

நொடிமுள் வேகமாய் மணிமுள் நகர
அலைபேசியில் பேசும் மானுடர்கள்
சிட்டுகளின் உயிரை சிதைத்தனரே!
மலர்ந்து விட்ட மொட்டு சிட்டுகளை
மலடிப் பெண்ணாய் மாற்றினரே!

ஊடகங்களே ஊக்குவியுங்கள்
சிட்டுகளைக் காணவில்லை யென்று!
மானுட விழிகளே சபதமெடுங்கள்
சிட்டுகளின் இனம் காப்போம் யென்று!





காதலர் தின கவிதை | Lovers day Valentine day

Kaathalar thinam
Kaathalar thina kavithai

சிறகுகள் இல்லா என் தேவதைக்கு,

கற்பனை இல்லா கவியோடு 
பொய் பேசா உன் விழியோடு
ராகம் பாடும் உன் இதழோடு
இசை மீட்டும் உன் காதணியோடு
தினமும் ஓர் விளையாட்டு!

அகமும் உணர்வும் அன்போடு
நாட்காட்டி நகர்த்திய நாட்களோடு
நடைபோட்டது நம் காதல் அன்போடு
கலந்து விட்டேன் இன்று உன்னோடு!

கரங்கள் தொட்டு நாம் விளையாட
அதனால் உன் நாணங்கள் கவி பாட
நம் காதல் கவித்துவம் பெற்று விட
ஏங்கினேன் மீண்டும் கவி வந்து விட! 

இதயத்தால் உனக்கும் எனக்கும் 
இன்று பிறந்த நாள் விழாவாம்!
தகவல் சொல்ல ஒற்றன் வந்தானாம்
சொல்ல வந்தது பிப்ரவரி 14 ம்

குழந்தைகள் தினம் | Childrens Day

Thinam
Kulanthaikal Dinam


புழுதி பறக்கும் வீதியில் 
புயல் வேக ஓட்டம் தினமும்!

சிரிப்பின் சிதறல்கள் 
சிந்தாமல் இல்லை தினமும்!

செவிச்செல்வம் தேடி 
சென்ற நடைபயணம்  தினமும்!

புத்தகப் பையின் சுமைகள் 
புதுவித சுகமாய் தினமும்!

காகித பணம் காணாமல் 
காலணா கிடைத்தது தினமும்!

குளம் கிணறு என்று 
குளித்த நாட்கள் தினமும்!

விளையாட்டாய் ஒரு விஞ்ஞானம் 
வீதியில் காந்தங்களோடு தினமும்!

மிதிவண்டியில் அதிவேக பயணம் 
மிதிக்காமல் இல்லை தினமும்!

அன்னை மடியில்
ஆர்ப்பரிக்கும் குழந்தை போல

அளவற்ற்ற மகிழ்ச்சி கண்ட 
அந்த குழந்தை நாட்கள் 
அழைப்பு விடுத்தால் வருமா?






சுதந்திர தினக் கவிதை | Suthanthira thina kavithai

Augut
Suthanthira thinam

சுதந்திரம் பற்றிய இன்னும் ஓர் கவிதை , இங்கே கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2018/07/suthanthiram-kavithai.html


அகரம் முதல் சிகரம் வரை 
ஆயிரம் வாய்ப்புகள் உண்டு
உலகை அறிந்திடு 
உழைப்பால் உயர்ந்திடு
உனக்கென ஓர் சரித்திரம் எழுதிடு!

உன் நெருங்கிய தோழனாய் 
உழைப்பு இருக்கட்டும்!
நெருங்கவே முடியாத எதிரியாய் 
சோம்பல் இருக்கட்டும்!

பலமுறை உன்னை 
நீயே கேட்டு விடு 
நான் ஏன் பிறந்தேன் என்று?

பல வெற்றி கண்ட பிறகு 
ஒரு முறை சொல்லி விடு 
சாதிக்கப் பிறந்தவன் நான் என்று !

இனியும் தாமதம் வேண்டாம்!
இறப்பதற்குள் சரித்திரம் படைப்போம்!
சுதந்திரம் வாங்கிய உறவுகளுக்கு
மன நிறைவோடு சமர்பிப்போம்!





தந்தையர் தினம்

Fathers day
Fathers day Kavithai

உள்ளங்கை ரேகையில்
உலவிக் கொண்டிருக்கிறது
உற்சாகமாய் நீங்கள் 
கை பிடித்து நடை பழக்கியது!

பள்ளி செல்லும் 
காலை வேளையிலும் 
திரும்பி வரும்
மாலை வேளையிலும்
தோள் கொடுத்து சுமந்தாய்!
தோழனாய் வாழ்க்கையில்
தோள் கொடுத்து உயர்த்தினாய்!

பள்ளி கல்லுரி என்று பல 
பாரங்களை நான் கொடுக்க 
பாசத்தோடு சுமந்து கொண்டாய்!

வாழ்க்கை எனும் மலையின் 
அடிவாரமாக நீங்கள் இருக்க 
உச்சி முகடுகளில் இருந்து 
உரக்க முழங்குகிறேன்!

உயர்ந்தது உங்களால்தான்!

உதிக்கத் தெரிந்து 
மறையத் தெரியாத 
சூரியனாய் நீங்கள் இருக்க 
உங்கள் ஒளிக்கதிர் பெற்று 
உயிர் வாழ்கிறது என் 
உயிர் வார்த்தைகள்!

தந்தை சொல்மிக்க 
மந்திரம் இல்லை!

தந்தையர் தின வாழ்த்துக்கள்!






மகளிர் தின வாழ்த்துக்கள்!

Makalir thinam
Makalir thina Kavithai


பெண்மையை
தமிழுக்கு இணையாய் ஒப்பிட்டு
தமிழ்த்தாய் பாடிய
சிறு வயது பள்ளி கூடத்திலேயே  
உணர்ந்தேன்.
பெண்மையின் அருமையை!

மகளிர் தின வாழ்த்துக்கள்!