![]() |
Kaathalar thina kavithai |
சிறகுகள் இல்லா என் தேவதைக்கு,
கற்பனை இல்லா கவியோடு
பொய் பேசா உன் விழியோடு
ராகம் பாடும் உன் இதழோடு
இசை மீட்டும் உன் காதணியோடு
தினமும் ஓர் விளையாட்டு!
அகமும் உணர்வும் அன்போடு
நாட்காட்டி நகர்த்திய நாட்களோடு
நடைபோட்டது நம் காதல் அன்போடு
கலந்து விட்டேன் இன்று உன்னோடு!
கரங்கள் தொட்டு நாம் விளையாட
அதனால் உன் நாணங்கள் கவி பாட
நம் காதல் கவித்துவம் பெற்று விட
ஏங்கினேன் மீண்டும் கவி வந்து விட!
இதயத்தால் உனக்கும் எனக்கும்
இன்று பிறந்த நாள் விழாவாம்!
தகவல் சொல்ல ஒற்றன் வந்தானாம்
சொல்ல வந்தது பிப்ரவரி 14 ம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக