தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
இயற்கையின் சீற்றம்
மழைசாரலில் நனைந்திருக்கிறேன்
மனதை பறி கொடுத்திருக்கிறேன்
நதியின் வளைவுகள்
நங்கையிடம் கூட இல்லை
மாற்றம் கொடுத்து
மாற்றிக் காட்டியது
மழையும் மண் சரிவும்.
உத்தர்கண்ட் பற்றி எழுத
உவமையும்
உருவகமும் தேவையில்லை.
மரங்களை அழித்ததால்
மண்சரிவை ஏற்படுதினாயோ?
மலராமலே பிஞ்சு மொட்டுகளை
மண்ணில் பதித்தாயோ ?
மழலைச் செல்வமும்
மக்கட் செல்வமும்
மகத்தானதல்லவா ?
தொலைந்து போன உயிர்கள்
தொலைவிலா ? அருகிலா ?
தொலைக்காட்சி செய்தி கூட
தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
வெள்ளப்பெருக்கு
வெகு விமரிசையாய்
அடித்துச் செல்லப்பட்ட
அனைத்து வகை மரங்களோடு
அணிவகுப்பு யாருக்காக?
மிதந்து வந்த மரங்களும்
மாளிகைகளும் சொல்கிறது
மீண்டு வர வருடம் ஆகுமாமே?
கரையைத் தாண்டி நீ வர
கரைபுரண்டு வெள்ளம் ஓட
கலை இழந்து
கற்சிலையாய் நாங்கள்.
கற்காலத்தை நோக்கி நாங்களும்
கடல் அன்னையை நோக்கி நீயும்.
அரசியலை நம்பவில்லை
அன்னையே உன்னை நம்புகிறேன்
எங்கள் இயற்கை அன்னையே !
இனிமேல் வேண்டாம்
இது போன்றதொரு
வெள்ளப்பெருக்கும் மண்சரிவும்.
மருத்துவக் குறிப்புகள்
தலைவலி குறைய
பெரும்பாலானவர்களை மிகவும் கஷ்டபடுத்துவது தலைவலி. இதற்கு மருந்தாக இரண்டு சொட்டு நொச்சி தைலத்தை மூக்கின் துவாரங்களில் தடவினால் சரியாகி விடும். வேண்டுமென்றால் தலையிலும் தடவிக் கொள்ளலாம்.
குழந்தைகளின் சளித் தொல்லை நீங்க
வெற்றிலை மற்றும் கருந்துளசி சாறை எடுத்து தேனில் கலந்து கொடுக்க சளித் தொல்லை குறையும்.
பெரும்பாலானவர்களை மிகவும் கஷ்டபடுத்துவது தலைவலி. இதற்கு மருந்தாக இரண்டு சொட்டு நொச்சி தைலத்தை மூக்கின் துவாரங்களில் தடவினால் சரியாகி விடும். வேண்டுமென்றால் தலையிலும் தடவிக் கொள்ளலாம்.
குழந்தைகளின் சளித் தொல்லை நீங்க
வெற்றிலை மற்றும் கருந்துளசி சாறை எடுத்து தேனில் கலந்து கொடுக்க சளித் தொல்லை குறையும்.
தீப்பொறி காயத்திற்கு
தீப்பொறியினால் சிறு காயம் ஏற்பட்டால் சோற்று காற்றாழையில் உள்ள உட்பகுதியை எடுத்து தடவலாம்.
மொழி பெயர்க்கப்பட்ட கவிதை | mozhi peyarkkappatta kavithai
பிறந்த நாள் பரிசு
அன்று ஒரு நாள்
அநாதையாக
தரிசு நிலத்தில்
தனி மரமாய்
தவித்துக் கொண்டிருந்தேன்!
வாழ்வா? சாவா ? என்று
பத்து வயது சிறுவன் நீ
பக்கத்தில் வந்தாய்
பதை பதைத்தது மனம்
பிய்த்து எறிந்து விடுவாயோ என்று!
தண்டுப் பக்கம் அருகில்
தடிமனைக் கொண்டு
மண்ணைக் கிளரினாய்.
மனமோ சிந்தனையில்
வாழ்வா? சாவா ? என்று
உன் வயது பத்துதானே...
ஆழமாய் தோண்டி
ஆட்டி ஆட்டி
ஆணி வேரைப் பிடுங்கினாய்.
நீ கடந்து செல்லும் தூரம்
நீளமாக இருக்கும் போல
தோள் கொடுத்து
தோளில் சுமந்து கொண்டாய்
படிக்கும் பையன் நீ
பள்ளிக் கூடம் வந்து சேர்ந்தாய்.
பத்து மணி ஆனது.
பள்ளம் தோண்டினாய்
பதித்தாய் என்னை மண்ணில்.
ஆனந்தம் தொற்றிக் கொண்டது
ஆதி முதல் ஆணி வேர் வரை
ஆளப் போகிறேன் மண்ணை என்று!
வாழ்வா? சாவா?
வினாக்குறி என்னுள்
விடை பெற்றுக் கொண்டது!
உன் பிறந்த நாள் பரிசாக
உன் பள்ளி கூடத்தில் நான்!
தந்தையர் தினம்
உலவிக் கொண்டிருக்கிறது
உற்சாகமாய் நீங்கள்
கை பிடித்து நடை பழக்கியது!
பள்ளி செல்லும்
காலை வேளையிலும்
திரும்பி வரும்
மாலை வேளையிலும்
தோள் கொடுத்து சுமந்தாய்!
தோழனாய் வாழ்க்கையில்
தோள் கொடுத்து உயர்த்தினாய்!
பள்ளி கல்லுரி என்று பல
பாரங்களை நான் கொடுக்க
பாசத்தோடு சுமந்து கொண்டாய்!
வாழ்க்கை எனும் மலையின்
அடிவாரமாக நீங்கள் இருக்க
உச்சி முகடுகளில் இருந்து
உரக்க முழங்குகிறேன்!
உயர்ந்தது உங்களால்தான்!
உதிக்கத் தெரிந்து
மறையத் தெரியாத
சூரியனாய் நீங்கள் இருக்க
உங்கள் ஒளிக்கதிர் பெற்று
உயிர் வாழ்கிறது என்
உயிர் வார்த்தைகள்!
தந்தை சொல்மிக்க
மந்திரம் இல்லை!
தந்தையர் தின வாழ்த்துக்கள்!
கடந்து வந்த பாதை
உரசிய குளிர் காற்று
நினைவில் முன்னால் காதலி
பிரிந்து வந்த குடும்பம்
சேர்த்து வைத்த ஊதியம்
நகரத்தை நோக்கி பயணம்
அழகும் அறிவும் சேர்ந்த
கன்னி இளமை அருகில்
அனுபவமும் அறிவும் சேர்ந்த
வயதான முதுமை எதிரில்
வளைவுப் பாதையில்
வளைந்து கொடுத்த ரயில்
வரையப்பட்ட கன்னி இடை
அழுது கொண்டிருந்த குழந்தை
ஒரு நாள் தொட்டில்
ரயில் இருக்கை நடுவில்
இரவு நேரச் சூரியனாய்
ரயில் பெட்டி விளக்கு
பகல் நேர நிழலாய்
தொடர்ந்து வந்த
தொடர் வண்டி நிழல்கள்
நடைமேடையில்
பாதங்கள் பட
கண்களில் தெரியவில்லை
நினைவில் தெரிகிறது
கடந்து வந்த பாதை
முன்னோக்கிச் செல்லும் ரயிலில்!
ரயில் குழந்தை | rayil kulanthai
மழலைப் பேச்சு
மழலைப் பேச்சு
சில நேரங்களில் புரிவதில்லை
என் காதலியின் முனுமுனுப்பு.
ஹாய் இன்று சண்டே
ஹாய் இன்று சண்டே ...
பணி செய்த பழைய வாரம்
பறந்து போய் புதியதோர்
வாரம் பூக்கும் நாள் ...
தூக்கம் போகுமுன்
தூங்கி எழ வேண்டுமே என்ற
ஏக்கம் இல்லை ...
குளியல் இல்லை
பேருந்து தாமதம் ,
போக்குவரத்து நெரிசல் ,
ஓடும் நேரம்
ஒன்றுமே தேவை இல்லை ...
பணி இல்லை....
கணிப்பொறியை
கண் துஞ்ச பார்க்க வேண்டிய
கடமை இல்லை ....
மின் அஞ்சலுக்கு
மாற்றஞ்சல் அனுப்பும்
தேவை இல்லை ...
கைபேசி அழைப்பில்
கத்தி பேசும்
கண்ணிய அதிகாரி பற்றிய
கவலை இல்லை .
முழுவதும் தூங்கவேண்டும் என்ற
முடிவு படி படுத்தால் கூட
விழி மூடிட முடியவில்லை
வேலை நாள்களில்
நடை பயணம் செல்லும் நிமிடங்கள்
விடுமுறை நாளென்றால்
விருடென்று ஓடுவதை
நம்பவே முடியவில்லை .
மாலை யான பின்னும்
மகிழ்ச்சி எனபது
மருந்துக்கு கூட தோன்ற வில்லை ..
இரவு வந்ததும் ..
அடுத்த நாள்
பணியை பற்றி
அடிக்கடி எண்ணி எண்ணி ..
தூக்கமே வரவில்லை ...
ஹாய்.......
இன்று.......
சண்டே .......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)