பூக்களின் ராணி மல்லிகை | jasmine flower kavithai --

பூக்களின் ராணி மல்லிகை | jasmine flower kavithai --

malli
Mallikai


மல்லிகைப் பூவின் 
மணத்தை தென்றலும் 
இரவல் வாங்கி உலா வருகிறது.
மல்லிகைப் பூவிடம் கடன் பட்ட தென்றல்!

வாலிப வயதில்தான் புரிந்தது
காலை வேளையில் மலராமல் 
அந்தி வேலை ஏன் மலருகிறாய் என்று!

உன் மணம் கண்டுதான் 
இரவுகள் உனக்கு பட்டம் அளித்திருக்கிறது
காமத்தின் தலைவன் மல்லிகை என்று!

ஆடை அணியாமல் 
அளவற்ற்ற பூக்கள் இருந்தாலும் - என்
அகம் ரசிப்பது என்னவோ உன்னைத்தான்!

உன் அழகினை ரசிக்க 
மாலை நேர சூரியன் 
மேற்கில் உதிக்க ஆசைபடுகிறான்.

உன்னை காதல் செய்ய 
ரோஜாவும் ஆசை கொண்டதால் 
உன்னோடு சேர்ந்து 
நூலில் கோர்க்கப்படுகிறான்.

பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் 
பழமொழி இது 
பழமை மாறவில்லை - மல்லிகையினால்!
பொறாமையில் சிவந்தது ரோஜாக்கள்.

உன் அழகை ரசிக்க 
இரவெல்லாம் விழித்துக் கொண்டே 
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றான் 
விண்ணுலக நிலவு.

மல்லிகைப் பூவை ரசிக்க
மணம் நுகர 
விண்ணைத் தாண்டி 
வந்தாலும் வரும் - இந்த 
விண்ணுலக நிலவு!

நிலவிடமிருந்து ஒளி வாங்கி 
நிகரில்லா பெருமை சேர்க்கிறாய்.
உன்னை வீழ்த்த ஒரு பூ 
உலகினில் இல்லை.
பூக்களின் ராணி மல்லிகையே!





1 கருத்து: