செப்டம்பர் 2018

சிறகுகளுக்காய் ஓர் ஏக்கம்

Siraku
Sirkukal



சிறகுகள் கிடைத்து 
வானம் பக்கமாகும்
அந்த நாள் எந்த நாளோ ?

கிடைத்தே தீரும்

Kidaithal
Kidaithe Theerum

உதவி இல்லாத சூழல் 
ஒரு பொழுதும் நேராது 
நம்பிக்கை இல்லாத சூழல் 
ஒரு பொழுதும் வாராது!

செய்து விட்ட புண்ணியங்கள் 
பலன் தராமல் போவது இல்லை
செய்து விட்ட பாவங்கள் 
கை விட்டுப் போவது இல்லை!

கைக்கு எட்டாத காதலியை நினைத்து
எழுதிய கவிதைகள் பலம் பெறும்!
எட்டாத வெற்றியை தொட்டு விட
எட்டும் முயற்சிகள் தோற்பதில்லை!

விழி கசிந்த கண்ணீரில்
மெய்மை சுரந்திருப்பின்
வருங்காலம் பதில் சொல்லும்!
காலம் நீளலாம், பொய்மை நீளாது!

நிமிர்ந்து நிற்பது தைரியம் என்று
தோள் நிமிர்த்தி சொல்பவர்
வளைந்து கொடுப்பது பலகீனம் என்று
தவறிய சொல் வழி நடப்பர்!

அறிவாளி என்று தன்னை  உணர்ந்தால்
முட்டாளாய் முன்னோக்கி செல்வாய்
விதியானாலோ அறிவினாலோ
கிடைப்பவை நிச்சயம் கிடைத்தே தீரும்!








காட்சிப் பிழை

Tharai
Kaachip Pilai


சரி செய்ய முடியாத 
காட்சிப் பிழை 
தரை தொடும் வானம்!




கிருஷ்ண ஜெயந்தி கவிதை

Krishnar
Krishna Jeyanthi Kavithai


கீதையின் குருவாய்
வாழ்க்கையின் வழி காட்டியாய்
எண்ணங்களின் கண்ணாடியாய்!

புல்லாங்குழல் காற்றில் இசையாய் 
குறும்புகளில் ஓர் கதையாய்
மயிலிறகில் ஓர் கண்ணனாய்!

மேகத்தில் மறையும் நிலவாய்
வாடா நட்சத்திர பூவாய்  
வெண்ணெயையும் தாண்டிய வெண்மையாய்!

உடலைத் தாண்டிய ஆன்மாவாய் 
உடலைத் தாண்டிய வீரமாய்
உன் நாடகத்தில் நானும் ஒருவனாய்!

நீல நிறத்தில் ஓர் குழந்தையாய் 
அதர்மத்திற்கு எதிராய் தர்மமாய் 
கிருஷ்ண வேடமிட்ட மழலையாய்!

ஆயர்பாடியில் ஓர் கண்ணனாய்
லீலைகளில் ராச லீலையாய்
காதலை எல்லாம் ஆட்கொண்டவனாய்!

மரணம் எட்டாத என் ஆன்மாவாய் 
கிருஷ்ண ஜெயந்தி அவதாரமாய்
வெண்மை இதயங்களோடு வாழ்வாய்!

ஸ்ரீ ராம ஜெயம்!