ஜூலை 2013

வழி(லி) அனுப்பிய வறுமை | Varumai kavithai

varumai
Varumai Kavithai


அடுக்கி வைத்த
அட்டைப் பெட்டியாய் 
அழகு தரும் 
கணணி பூங்காவில் 
சுத்தம் செய்பவளாய் இவள்!

அழுக்குச் சுவடுகளை 
அழிக்கப் பிறந்துள்ளாய்.
அயனின் பார்வையால் 
அவதாரம் எடுத்திருக்கிறாய்.

படியும் அழுக்குகளில் 
பணம் சம்பாதிக்க 
வறுமை இவளை 
வழியனுப்பி வைத்திருக்கிறது!

இவள் தட்டும் தூசியில்
உயிர் பெற்றன 
பிளாஸ்டிக் பூக்கள்.

கடுகளவு தூசி கண்டாலும் 
கருவிழி ஆணையிட 
கரைந்து போகிறது.
கடல் அலை நுரையாய்  
கரை ஒதுங்குகிறது

இவள் உழைப்பால் 
உயர்ந்திருக்கிறது 
குப்பை மேடுகள்!

இவள் வேதனை கண்டு 
இளைப்பார துடிக்குது
துடைப்பங்கள்!

இவளுக்கு ஒய்வு கொடுக்க 
நடுநிசி நெருங்குவதற்காக 
நண்பகல் மொட்டு விரிக்க 
அந்தி வேலை மலருகிறது

அந்தரத்தில் தொங்கும் 
பகல் விளக்கு பகலவன் 
மறைந்து விடுகிறான்!

கைரேக பட்ட காசுகள் 
அகம் சொல்லும் சிந்தனையில் 
அரங்கேற்றம் பெறுகிறது
வீட்டுச் செலவுகளாய்!

ஆயிரம் நினைவுகளில் 
ஒரு நினைவு மட்டும் 
உயிர் பெற்றிருக்கிறது.

மீதமுள்ள நினைவுகளுக்காக 
பகலவனின் ஒளிக்கதிர் 
குடிசை வாயிலில்!






பசுமை இலைகளாய் - ஹைகூ

pasumai
Pasumai Ilaikal

பட்டு போன மரத்தில்  
பசுமை இலைகள் 
பச்சைக் கிளி கூட்டம்

ஹைகூ வாழ்க்கை | Hikoo life

vaalkai
Vaalkai kavithai

பயண இலக்கு தெரிந்து 
நிலையில்லாத பயணம் 
வாழ்க்கை

எறும்புக் கூட்டம் | Erumbu koottam

erumbu
Erumbuk koottam

மெல்லென நடை பயிலும் 
பாவையின் பின் நடக்கும் 
காளையின் நடைக்கு ஒப்ப 

மேவிய ஒலி எழுப்பி 
முன் செல்லும் வண்டி தொட்டு 
பின் செல்லும் பெட்டி போலும் 

அழித்திடும் தன்மை கொண்ட 
ஆயுதம் தோளில் தாங்கி செல்லும்
ஆண் மக்கள் படையைப் போல

இன்பமாய் ஒலித்த மணி 
இசையென கேட்ட நொடி 
ஒன்றினை ஒன்று தொட்டு
ஓடிடும் பள்ளி பிள்ளை யொத்து

காரது கறுத்ததாலே 
கவ்விய இரை வாய் தாங்கி 
முன்னொன்று முந்தி செல்ல 
பின்னொன்று அதை தொடர்ந்து 
சிற்றுடல் தனை கொண்டு 
சீரிய பயணம் செய்யும் 
சின்னஞ்சிறு  எறும்பின் கூட்டம்
தன் இடம் சேர வேண்டி 
தாரையாய் சென்றது காண்!






ஹைகூ பேரணி | Haikoo

Perani
Haikoo perani

கழனியை நோக்கி 
விடியற்காலையில் பேரணி
கிராமத்து விவசாயிகள்

எனக்கொரு காதலி இருந்திருந்தால் | Enakkoru kaathali irunthirunthaal

En kaathal
Enakoru kaathali

கவிதை எழுதி பேனா மை
காலியாகி இருந்திருக்கும்!
அவள் விழியோரம் மையில் 
விளைந்த கவிதையை 
விதைத்திருப்பேன்! 

அவள் மூச்சுக் காற்றை சேகரிக்க 
முயற்சி எடுத்து 
வெற்றியும் கண்டு இருப்பேன்!
பிறர் தீண்டாமல் இருக்க அதை 
நிலாவில் சேகரித்தும் வைத்திருப்பேன்!

அவள் சிரிப்பின் சிதறல்கள் 
என்  கவிதையின் கருவாயிருக்கும்!
அவள் வாசித்த கவிதை வரிகள் 
உதட்டோர சிவப்பாய் 
ஒட்டி இருந்திருக்கும்!

அவள் தேகம் கிள்ளி விளையாட 
ஆசை பட்டிருப்பேன்!
அதனால் தினமும் நகம்
வெட்டி இருப்பேன்!

கடல் அலை முத்தத்தில் 
கால் நனைத்திருப்போம்!
கரையாத நினைவு அது 
கல்வெட்டுகளாக மாறியிருக்கும்!

அவள் பாதத்தில் 
வெள்ளிக் கொலுசு ஒன்றை 
மாட்டி இருப்பேன்!
எட்டாவது  ஸ்வரமாக
உலகுக்கு உணர்த்தியிருப்பேன்! 

இன்பத்தின் எல்லை 
எதுவென்று தேடியிருப்பேன்!
பிரிவுக்கு இல்லை எல்லை 
என்று முடிவெடுத்திருப்பேன்!

மழையோ வெயிலோ 
ஒரே குடையில் பயணித்திருப்போம்!
உடல் பொய் உயிர் மெய் 
பல கலியுக காதல்களுக்கு 
உணர்த்தியிருப்பேன்!

சாஸ்திரம் அடங்கிய 
திருமண அழைப்பிதழில்
கவிதையாய் எங்கள் பெயரை 
அச்சடித்திருப்பேன்!

எனக்கொரு காதலி இருந்திருந்தால்!!!






கருவிழிகள் | Karuvili

kankal
Karuvili kavithai

பாலில் விழுந்த கருவண்டு  
உனது  கருவிழிகள் 
தொட்டுத்தூக்க முயற்சித்து   
தோல்வியைத் தழுவுகிறது!
உனது கண் இமைகள்.

காமராஜர் | Kamarajar

Kavithai kamarajar
Kaamarajar kavithai

ஏழைகளின் கல்விக் கனவு
விடியும் முன்னே பலிக்கிறது
கற்கண்டாய் இனிக்கிறது - உன் 
கல்வித்திட்டம்.
ஆரவாரம் கொள்கிறது 
மதிய உணவுத் திட்டம்.

மக்களுக்கு மகுடம் சுட்டி 
படிக்காத மேதையாக 
பண்பாளன் நீ ஆட்சி செலுத்த 
எளிமையும் நேர்மையும்
எட்டிப் பிடித்து
உன் தோளில் தொற்றிக் கொண்டது.

உன் இரு தோளிலும்
உயிர்த் தோழனாயாய் அமர 
நேர்மைக்கும் எளிமைக்கும் 
வாய்ப்பு கொடுத்தாய்!

இறக்கும் வரை 
இறங்க வில்லை - அவைகள் 
உன் தோளை விட்டு!

உனது எளிமையும் நேர்மையும் 
ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது
பள்ளி கல்லூரி பொது இடங்களில்
உருவச் சிலையாய்!

உன் சிந்தனையில் உதித்து 
உயிர் பெற்று 
கம்பீரமாய் காட்சி தருகிறது
பல தொழிற்சாலைகளும்
பல அணைக்கட்டுக்களும்!

நீ செய்த சாதனைகளால்
உன் உருவச்சிலை 
உயிர் பெற்று நிற்கிறது
பட்டி தொட்டி எல்லாம்!

மண்ணில் பிறந்து 
மனதை விட்டு நீங்காமல் 
சரித்திரம் படைத்த கர்ம வீரரே !
கிங் மேக்கரே!
ஏழைகளுக்கு உதவுவதில் வள்ளலே!
இந்தியாவின் மற்றுமொரு அண்ணலே!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!





சுதந்திர தினக் கவிதை | Suthanthira thina kavithai

Augut
Suthanthira thinam

சுதந்திரம் பற்றிய இன்னும் ஓர் கவிதை , இங்கே கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2018/07/suthanthiram-kavithai.html


அகரம் முதல் சிகரம் வரை 
ஆயிரம் வாய்ப்புகள் உண்டு
உலகை அறிந்திடு 
உழைப்பால் உயர்ந்திடு
உனக்கென ஓர் சரித்திரம் எழுதிடு!

உன் நெருங்கிய தோழனாய் 
உழைப்பு இருக்கட்டும்!
நெருங்கவே முடியாத எதிரியாய் 
சோம்பல் இருக்கட்டும்!

பலமுறை உன்னை 
நீயே கேட்டு விடு 
நான் ஏன் பிறந்தேன் என்று?

பல வெற்றி கண்ட பிறகு 
ஒரு முறை சொல்லி விடு 
சாதிக்கப் பிறந்தவன் நான் என்று !

இனியும் தாமதம் வேண்டாம்!
இறப்பதற்குள் சரித்திரம் படைப்போம்!
சுதந்திரம் வாங்கிய உறவுகளுக்கு
மன நிறைவோடு சமர்பிப்போம்!





பருவகால நினைவுகள் | Paruva kaala Ninaivukal


உன்னோடு சேர்ந்து 
உயிர் பெற்று 
உறவாட நினைக்கிறது - எனது 
பதினாறு வயது 
பருவகால நினைவுகள்.

அங்கீகாரம் பெறாத கவிதை | Poetry without signature


அவள் கையொப்பம் இட்ட
எந்தவொரு புத்தகமும் 
கவிதைப் புத்தகம்தான்!
உன் கையொப்பத்திற்காக 
உருகுகின்றேன்!
தினமும் ஏங்குகின்றேன்!