2013

இயற்கையின் புதல்வனே - நம்மாழ்வார்

nammalvaar

nammaalvaar

இயற்கையின் வேதனை 
இயல்பாக இல்லாமல் 
செயற்கையினால் வந்த 
செயற்கை என நீ அறிந்து
செயற்கையை கருவறுத்த
இயற்கையின் புதல்வனே !

இயற்கையை சிரிக்க வைத்து 
சிரிப்பின் சிதறல்களாய் - ஆங்காங்கே
இயற்கை விவசாயம் 
நலம் பெறச் செய்த நல்லவரே!

இயற்கை உரங்களின்
தவறான இலக்கணமாம்
செயற்கை உரங்களை 
வீழ்த்தச் செய்தவரே!

இயற்கையோடு இயற்கையாய் 
இரண்டற நீ கலந்ததால் 
உன் இயற்கை ஆர்வம் 
இறைவனும் அறிந்து
அழைத்து விட்டான் உன்னை!

நீ இல்லா இயற்கை 
இனி இடர் கண்டு விட
எங்கு சென்று தேடுவோம் உன்னை!

உங்களது ஆன்மா
சாந்தி அடைய 
இறைவனை வேண்டுகிறேன்!

https://www.facebook.com/pages/Dr-G-Nammalvar-Organic-Agriculturist/197789246939878






new year kavithai in tamil | புது வருட கவிதை





கிழித்தெறியும் நாட்காட்டியில்
கடைசி நேர உயிராய்
வருடத்தின் இறுதி நாள்!

இறுதி நாளின் 
தொப்புள் கொடி உறவாய்
உலகில் நாளை உதயம்!
புது வருடம் 2016!

புது வருட வாழ்த்துக்கள்!


மற்றுமொரு புத்தாண்டு கவிதை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://nellaibaskar.blogspot.com/2014/12/blog-post_26.html




சேமிப்பு ஹைக்கூ


இழந்து விட்ட பேனா மையில் 
இப்படியும் ஓர் சேமிப்பு!
காகிதம் கண்ட கவிதைகள்.

எனக்கான இதயங்கள்



துன்பங்கள் அவலமாய் கோர்த்து
துயர் கொண்ட மாலையாய்
வாழ்கையில் தினம்  விழ
விதியால் வந்த துன்பம் தனை
வீதியில் எரியச் செய்த நட்பு
எனக்கான இதயம் என் நண்பன்!

விழிமூடி இரவுகள் இருள் காட்ட
விழிதிறந்து பகலையும் காட்ட
இரவும் பகலும் ஓய்வு எடுக்காது
சுகம் காணும் கனவில் உலா வந்து
தினம் ஒரு கவிதைப் பரிசு
தந்து செல்லும் என் காதல்.
எனக்கான இதயம் என் காதலி!

அன்பு எனும் அளவுகோலின்
அகரமும் சிகரமுமா யிருந்து
உலகத்திலும் உறவுகளிலும்
உன்னதமும் புனிதமுமா யிருந்து
கற்பனை தீண்டா கவிதை யாய்
சொந்தங்களில் முதன்மையாய்
மெய்யான தத்துவம் என் அம்மா!
எனக்கான இதயம் என் அம்மா!




christmas poems | christmas in tamil | கிறிஸ்துமஸ் கவிதை

christmas
christmas in tamil

கருணையின் சிகரமாய் 
கடவுளாய் பிறந்தவன்
கடவுளின் ஒளி!

வருந்தும் உள்ளங்களின் 
வாழ்க்கை வழி காட்டியாய்
வாழ்வு கொடுத்த ஒளி!

வாயில்தோறும் மின்னொளியில்
ஒளிர்கின்ற நட்சத்திரத்தில்
வீடு தேடி வந்த ஒளி!

சுக்குநாறிப் புல்லில்
வளர்ந்து விட்ட குடிலில்
அவதரித்த புனித ஒளி!

கேட்டதும் கொடுத்து 
தட்டியதும் திறந்து 
தேடியே கண்ட ஒளி!

மானுடர்களை இரட்சிக்க 
மாட்டு தொழுவத்திலே
புனிதனாய் பிறந்த ஒளி!

ஒளி தந்த வெளிச்சத்திலே
துயர் கொண்ட இருள் நீங்கி
வாழ்வை செழுமையாக்கிய  ஒளி!

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!






விரலின் மகுடம்


தாமரை இதழின் நகலாய்
நான் கண்ட உன் நகங்கள்!

மின்னொளி பட்டு
ஒளிவீசும் வைரமாய்
கண்சிமிட்டும் உன் நகங்கள்!

வளர்பிறை உண்டு
தேய்பிறை இல்லை
ஆதலால் வீதிக்கும்
செல்லவில்லை!

உதடுகளில் உறவாடி
எச்சிலில் விளையாட
வாய்ப்பு இங்கு இல்லை
நகம் கடிக்க மாட்டாயே?

உன் விரல் பிடித்து
உலா வர ஆசை படுவேன்!
உண்மைதான்!

நகம் தொடவும்
மறவ மாட்டேன்!
அதுவும் உண்மைதான்!

ரோஜா மலர் பறிக்க
உன் விரல் ஏங்கும்!
ரோஜா என்னவோ
உன் நகம் தொட ஏங்கும்!

பழமொழி உருமாறும்
புது மொழி உருவாகும்.
இனி உன் நகம் கண்டு
கவிஞனும் சொல்லுவான்!

அகத்தின் அழகு
முகத்தில் மட்டுமல்ல!
நகத்திலும் என்று!




அன்புள்ள அம்மாவுக்கு



வெள்ளைக் காகிதத்தில் 
அம்மா என்று எழுதிட 
அங்கே கவிதை ஒன்று 
பிரசவ வலி கண்டுவிட 
கற்பனைகள் வலுவிழக்கும் 
கவிதை அது உயிர்ப் பெறும்! 

உயிர்ப் பெற்ற அந்த 
வெள்ளைக் காகிதத்தில் 
நான் கண்ட கவிதைகள் இதோ!

சுமைகளை சுகமாய் 
மொழி பெயர்க்கும் அகராதி!
கடவுள் அளித்த அகராதி
கடவுளாய் என் அம்மா!

மழலையாய் தவழ்ந்தேன்
விரல்பிடித்து  நடை பழகினேன்
அம்மா எனும் கவிதையை 
அடிக்கடி தவறுதல் இல்லாமல் 
ஒப்புவித்தேன்!

இரு கை விரித்து 
நீ என்னை அழைக்க 
தவழ்ந்து நானும் வந்தேன்.

நான் தவழ்ந்து வந்ததில் 
மின்னல் வேகம் இல்லை.
அதனால் நானும் வஞ்சித்தேன்
கடவுளை தினம் தினம்!
நடை பழகும் நாள் வரை!

கன்னத்தைக் கிள்ளி
நீ சிரிக்க 
கை கால் அசைத்து 
களிப்பை வெளிப்படுத்தினேன்!
கடவுளை இங்கும் 
வஞ்சித்தேன்!

உணவு ஊட்டும் வேளையில் 
உதடுகளால் வண்டி ஒட்டி 
உலகச் சாதனை படைத்தேன்!

நெஞ்சத்தில் வஞ்சம் இல்லை
சிந்தனையில் சுயநலம் இல்லை
இன்றுவரை சொல்லவில்லை 
நான் கேட்டு எதுவும் 
இல்லை என்று!

சீரும் சிறப்புமாய் 
வளர்ந்து வந்தேன்!
இரவுகள் வந்தாலும் 
விழி மூடாமல் 
தவம் செய்து 
நீ தொட்டில் ஆட்டியதால்!

அம்மா!
உன் புகழ் பெருமை 
நான் அறிந்ததினால் 
தெய்வம் இல்லை என்று 
பொய்யுரைக்கும் நாத்திகனிடம்  
நினைவுபடுத்தி விடுகிறேன்
அவனது அம்மாவை!




கவிதைக்கு விடுமுறை


குளிருட்டப்பட்ட அலுவலகத்தில் 
அனல் காற்று வீச 
அறிந்து கொண்டேன்!
அலுவலகத்திற்கு நீ விடுப்பு என்று.

இன்று கவிதைக்கு விடுமுறை!

காதலில் விழுந்தேன் | Kaathalil vilunthen done

Kaathal
Kaathalil vilunthen

காட்சி கண்ட விழிகள் 
கவிதை சொல்லும் !
கவிஞனாய் நீ இல்லாவிட்டாலும்!

மௌனம் தாங்கும் பூக்கள் 
மெல்லிசை பாடும்!
மெட்டுக்கள் இல்லா பொழுதும்!

மலராத ரோஜா மொட்டும் 
மலர்ந்து விடும்!
மலர்வது நாளையென அறிந்தும்!

தவமிருக்கும் சாலையோர மரங்களும் 
தவழ்ந்து உன்னைத்தொடும்!
தவழ முடியாதென்று தெரிந்தும்!

தேவதை அவள் கடந்து செல்ல 
தேகங்கள் மெய் சிலிர்க்க 
நான் மட்டும் என்ன விதிவிலக்கு?

காதலில் விழுந்தேன்!





அம்மா அளித்த வரம் | Amma alitha varam

Mother
Amma Alitha Varam


அம்மா என்று எழுதியவுடன்
நானும் மாறி விட்டேன்.
தலை சிறந்த கவிஞனாய்!

கவிதைத் தேடல் | Searching Poetry

thedal
Kavithai Thedal


என் கண்ணா!
நீ என்னைத் தேடி வர 
விழியோர மையை 
கைகுட்டையில் 
ஒழித்து வைக்கிறேன்!
கண்களால் பேச மறந்து 
கவிதை எழுதி விடுவாயோ என்று!

விழிகளின் சிந்தனை | Kan sinthanai

kiraamam
Kiramthi kathiravan


கருவிழிகள் நோக்கும் தூரம் 
கட்டிடங்களாய் தெரிய 
கதிரவனின் உதயனும் 
கதிரவனின் அஸ்தமனமும்
கட்டிடத்தின் பின்பு!

இவன் 
கிராமத்து கதிரவன் அல்ல போலும்!

நேர்மையாய் வாழ்ந்த நாட்கள் | Nermaiyaai vaalntha naatkal

Honest
Honesty

சில மாதம்
கை கால் அசைத்து 
நேர்மையாகவும் 
நிம்மதியாகவும் 
நானும் இருந்தேன்

யோகாவும் தியானமும் 

தரவில்லை 
அந்த நிம்மதியை!

வழிபட்ட கடவுளும் 

தரவில்லை 
அந்த நிம்மதியை!

இமை மூடிய கருவிழியின் 

கனவும் தரவில்லை 
அந்த நிம்மதியை!

சம்பாதித்த காசு பணம் 

தரவில்லை 
அந்த நிம்மதியை!

மண்ணும் பொன்னும் 

தரவில்லை 
அந்த நிம்மதியை!

நட்பும் காதலும் கூட 

தரவில்லை 
அந்த நிம்மதியை!

இருந்தாலும் தந்து விட்டது 
அந்த இருள் கொண்ட 
கருவறை!




பிறந்த நாள் வாழ்த்துக்கள் | Pirantha naal vaalthukkal

piranth naal
Pirantha Naal vaalthu kavithai


சிறுவயது பெரிய கனவுகள் 
சீராக செம்மையாக வளர வேண்டும்!

வந்து விடும் சோதனைகள் 
வாழ்த்து சொல்லும் சாதனையாக வேண்டும்!

இதழ்கள் சிரித்து வாழ 
இதயம் இனிமை காண வேண்டும்!

அகவை ஒன்று கூட 
அளவற்ற்ற மகிழ்ச்சி காண வேண்டும்!

விதியையும் வீதியில் நிறுத்துபவனாக 
வீரநடை நீ போட வேண்டும்!

உதிர்த்துவிட்ட உன் சிரிப்பில் 
உதிராத சொந்தமாக நான் வேண்டும்!

பிறை கண்ட நிலா நீ 
பிரியாத வளர்பிறை உனக்கு வேண்டும்!

நல்வாழ்வு நீ வாழ்ந்து 
நலம் நாளும் பெற வேண்டும்!

கவிதை கண்ட வரிகள் 
கற்பனை அல்லாத மெய்யாக மாற 
கடவுளை வேண்டுகிறேன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இது போன்ற மற்றுமொரு பிறந்த நாள் வாழ்த்து கவிதை இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2013/10/blog-post_19.html






குழந்தைகள் தினம் | Childrens Day

Thinam
Kulanthaikal Dinam


புழுதி பறக்கும் வீதியில் 
புயல் வேக ஓட்டம் தினமும்!

சிரிப்பின் சிதறல்கள் 
சிந்தாமல் இல்லை தினமும்!

செவிச்செல்வம் தேடி 
சென்ற நடைபயணம்  தினமும்!

புத்தகப் பையின் சுமைகள் 
புதுவித சுகமாய் தினமும்!

காகித பணம் காணாமல் 
காலணா கிடைத்தது தினமும்!

குளம் கிணறு என்று 
குளித்த நாட்கள் தினமும்!

விளையாட்டாய் ஒரு விஞ்ஞானம் 
வீதியில் காந்தங்களோடு தினமும்!

மிதிவண்டியில் அதிவேக பயணம் 
மிதிக்காமல் இல்லை தினமும்!

அன்னை மடியில்
ஆர்ப்பரிக்கும் குழந்தை போல

அளவற்ற்ற மகிழ்ச்சி கண்ட 
அந்த குழந்தை நாட்கள் 
அழைப்பு விடுத்தால் வருமா?






நீ தேடிய நிம்ம்தி | Nee thediya nimmathi

Kavithai
Tharkolai Suicide

சமீபத்திய ஒரு தற்கொலையை மையமாக வைத்து இந்த கவிதை எழுதி உள்ளேன். இதில் சொல்ல வருவது என்னவென்றால், தற்கொலை செய்தவரை கிண்டல் செய்ய வேண்டாம். சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், அவர்கள் நிம்மதி தேடி இந்த முடிவை எடுத்து இருப்பார்கள்.


விண்ணைத் தொடும்
விளிம்பில் இருந்து
புவி நோக்கி நீ குதித்து
விண் நோக்கி நீ சென்றாய்!

மன வேதனைகள்
உன்னை தூரத்த
தனிமையும் அதற்கு
தோள் சேர்த்து
கை கோர்க்க
காலன் அவன்
கணித்து விட்டான்!

உடல் விட்ட உயிரை
வழிந்தோடும் குருதி சொல்ல
படிந்து விட்ட குருதி
பல பேருக்கு
காட்சி பொருளாய் தெரிய
படித்தவன் எவனுக்கும்
புரியவில்லை நீ பட்ட துயரம்!

கட்டிடத்தின் உயரத்தை
கருவிழி கொண்டு அளந்தவன்
உன் உள்மன துயரத்தை
அளக்க வில்லை!

மிஞ்சியது என்னவோ
உன் குடும்ப வேதனையும்
படித்தவனின் கிண்டலும்தான்!

அகல் விளக்கு ஏற்றி அழுதது
உன் அன்னை மட்டும் அல்ல
நானும் தான்!

உன் ஆன்மா நிம்மதி கொள்ள
நிரந்தரமான சாந்தி அடைய
சொர்க்கம் சென்று விட
இறைவனை வேண்டுகிறேன்!

இறந்த பிறகாவது கிடைக்கவிட்டும்
நீ தேடிய நிம்ம்தி!






வெப்பம் மழை வரும் அறிகுறி | veppam malai varum arikuri

veppam
Malai varum arikuri

தினம் பல கனவுகள்
என் கவிதையில் வருகுதே
கனவுகள் பலிக்குதே
இது என்ன மெய்யா பொய்யா?

பூக்களின் மனம் அது 
உன் இதழ்களில் தெரியுதே
நினைவுகள் தொலையுதே
நினைவினில் நீயா நானா?

கை கோர்த்து நடக்கும் போது 
உற்சாகம் கொள்ளும் விரல்கள் 
இதயத் துடிப்பில் வேகம் வேகம் 
கூடி கூடித் தொலைந்து போகிறது

கற்பனை தவறும் போது 
தடுமாறும் கவிதையாவும் 
உன் நினைவைத்தேடி 
நீந்தி நீந்திச் செல்கிறதே

பருவம் சொன்ன காதல் அது ஒ ஒ ஒ 
பலித்தே போன கனவும் அது ஒ ஒ 
கனவினில் ஒரு இதழ் முத்தம் ஒ ஒ ஒ 
கலையாத கனவு அது ஒ ஒ ஒ 
உன் வெள்ளிக் கொலுசின் ஸ்வரம் தேடி நானும் வந்தேனே
அது எட்டாவது ஸ்வரமடி

அவள் சிரிப்பின் சிதறல்கள் ஒ ஒ ஒ 
அது என் கவியின் வரிகள்  ஒ ஒ ஒ
நான் கேட்டது உதட்டோர ஈரங்கள்   ஒ ஒ ஒ 
அட கன்னத்தில் பதித்தது யாரது ஒ ஒ ஒ 
பெண்மைக்குள் இன்னொரு பெண்மை கவி 
அது கருவிழி கவிதையடா!





இன்றைய தமிழ் | Today Tamil

tamil
Indraiya Tamil

வளர்த்து விட்ட தமிழை 
உள் நாவு வெளி கொணர 
ஆங்கிலம் பேசும் நுனி  நாவு 
தமிழுக்குத் தடை போட 
இங்கே அவமானம் 
தமிழுக்கு சமர்ப்பணம்!

தமிழில் சினிமா பெயர்
தமிழில் படித்தால் வேலை 
தமிழை வளர்க்க 
தமிழ் நாட்டுச் சலுகை!

கற்காலம் கண்ட தமிழ் 
முதுமை கண்ட கிழவியாய்
முடங்கிப் போகிறது  
கலாச்சார மொழியினால்!

தாய்மை அடைய நினைத்தவள் 
கருச்சிதைவை அடைந்தது போல
துடித்துப் போகிறேன்
தரணியை ஆண்ட தமிழ் 
பொது இடங்களில் 
தலை  கவிழும் போது!

புது முகம் கண்ட
இரு தமிழ் முகம்
அறிமுகம் என்னவோ
ஆங்கிலத்தில்தான்!

தமிழன் என்று சொல்ல
தலை நிமிர்ந்து நிற்க 
தமிழனால் முடியவில்லை
போலி வாழ்க்கை
உண்மையாக வாழ்வதினால்!





பிறந்த நாள் வாழ்த்து | pirantha naal vaalthu


நாளைய ரோஜாப் பூவாக மலரப் போகும்
இன்றைய ரோஜா மொட்டுக்களோடும்

வையகத்தில் மலர்ந்து விட்டதாய் 
இன்று பிறந்த நாள் கொண்டாடும்
ஒட்டு மொத்த ரோஜாப் பூக்களின் 
மண வாழ்த்துக்களோடு 
என் மன வாழ்த்துக்களும்!

இது போன்ற மற்றுமொரு பிறந்த நாள் வாழ்த்து கவிதை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2013/11/blog-post_17.html

நிம்மதி கவிதை



என் கவிதை கண்ட சிறகுகள் 
நானும் கண்டு விட்டால் 
நிம்மதியாக இருப்பேன்
ஏழு கடல் தாண்டி 
நிம்மதி இருந்தாலும்!

எங்கே தேடுவேன்
என் அன்னையின் கருவறையில் 
நான் கண்ட அந்த நிம்மதியை !

கல்லறையைத் தேடி | Kallarai Thedi

Sokam
Vaalkai Sokam


முகம் பார்க்காமல் சந்தித்தோம்
இதயம் பார்த்துதான் இணைந்தோம்

பல முறை கூறினாய் 
என் காதல் என்னோடு என்று!

உன்னோடு நான் இல்லை 
அனாதையாய் நான் நிற்க
இனியும் சொல்லாதே 
என் காதல் என்னோடு என்று!

நிஜத்தோடு வாழமுடியாமல் 
நிதம் நீ தவித்தாலும் 
நிழலோடு வாழ்வதாய் 
பல முறை சொல்வாய்!

நிஜம் எனும் மரம் 
வெட்டப்பட்ட பிறகு 
நிழலை நீ எங்கே தேடுவது 
அழிந்து விட்ட நானும் 
அதை எப்படி கொடுப்பது?
காதலை அளித்து
நிம்மதியை அழித்து விட்டாய்!

நிமிட பிரிவுகளை
நிரந்தர பிரிவுகளாக
நிறுத்தி விட்டாய் 
நீ இருந்த என் இதயத்தில்!

சிறகுகள் ஒடித்து 
சிறை பிடிக்கவில்லை 
உன்னை என் இதயத்தில்!
சிறகுகள் விரித்து நீ பறக்க 
சிந்துகிறேன் கண்ணீரை!

காதலில் நீ இல்லை - ஆதலால் 
கானல் நீரில் தாகம் தணிக்கிறேன்.
தாகமும் தணிந்த பாடில்லை 
நித்திரையும் வந்த பாடில்லை - உன் 
நினைவுகளும் தொலைந்த பாடில்லை
நிதமும் ஏமாற்றம் அடைகிறேன்!
இன்றாவது நிம்மதி கிடைக்குமா?

ஆடை கழற்றிய இரவுகள் 
அரை நிர்வாணமாக 
விடிந்து போன பொழுதுகளும் 
விடியாத இருளாய் தோன்ற 
விழிகளும் வருந்துகிறது
நீ இல்லாத காதலில்!

கல்லறையைத் தேடி!





காதல் தோல்வி | Love failure kavithai

Sethu kavi
Setthup po

வன்முறை கண்ட
நம் மனதுக்குள் 
தடுத்து நிறுத்த வரவில்லை 
வழக்கமாய் வரும் 
அந்த சமாதானத் தூதுவன்
சிகப்பு ரோஜா!

தனிமையாய் நீ அமர 
தடுத்து நிறுத்திய
தாகம் கொண்ட வேண்டுகோளை 
தகர்த்து எறிந்தாய்!
தணிந்து விடாத தாகம் என்னுள்!

உனக்குத் தெரியாதா?
உன்னுடனே நான் இருக்க 
நான் இல்லா தனிமையை 
நீ எங்கு சென்று தேடுவாய்?

பதில் சொல்லி விட்டுப் போ
இல்லையேல்
உன் இதழ்களாய் 
உதிர்த்து விடு

செத்துப் போ என்று !




அறிவியல் அதிசயம் | Ariviyal Athisayam | Science Magic

Athisayam
Ariviyal Athisayam


அறிவியலுக்கு அடி பணியாத 
அதிசய வானவில் 
உனது வளைந்த புருவங்கள்!

மனித நேயம் | Manitha Neyam

Vibathu
Saalai Vibathu

சாலை விபத்தில் 
கருவிழியால் நோக்கி 
இதயத்தால் நோக்காமல் 
இரக்கம் மறந்த
கடந்து செல்லும் உயிர்
தவழும் உயிரை மறந்ததே!

வடிகின்ற குருதியில் 
சாலையோர பள்ளமும் 
நிரம்பி வழியுதே!

ஏக்கம் கொண்ட நுரையீரல்
இறுதி சுவாசமோ என நினைந்து
முடிவு தெரியாமல் திணறுதே!

காத்திருக்கும் உறவு முகம்
கலக்கம் அடையுமே
இறுதி நாள் இதுவென்று
கலங்கலான சிந்தனை செய்யுமே!

ஊசலாடும் உயிருக்கு 
மருத்துவ மனை அறையில்
காகித காந்தி பணமும்  
விலை பேசுமே!

விதியும் இறுதி ஊர்வலமும் 
மானுடனாய் மரித்தவனுக்கு
பூலோக உறவுகள்!
மறந்து விட வேண்டாம்

மனித நேயத்தை 
மறந்து விட வேண்டாம்!
மறைத்தும் சென்று 
விட வேண்டாம்!

சாலை விபத்துகளில் உதவிடுவோம்!






இவள் பூலாக தேவதை | pooloka thevathai

Penmai
Penmai Kavithai


கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய் 
தீர விசாரிப்பதே  மெய்.

இடப்பக்க மூளை பல முறை 
இதயத்திற்கு உணர்த்தியது
விண்ணுலக தேவதையாக இருக்கலாம்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

எனது கவிதையின் கருவாக
கன்னி உனது அழகுகள் 
தேவதையின் அழகை போல் 
அமைந்ததால் - கன்னியே  
எனது கவிதை கூட
உன்னை சந்தேகப்பட்டது.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

எனது உயிர் நண்பனாம்
என் பேனாவின் மை 
கவிதையின் வழியாக 
உன் அழகோடு கலந்ததால்
அவனும் உன்னை சந்தேகிக்கிறான்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

இறுதியாக என் மனமும் 
ஆறுதல் அடைந்தது.
உன் கன்னத்தை கிள்ளி
உண்மையை அறிந்ததினால்.
இவள் பூலோக கன்னி அல்ல என்று!
இவள் பூலாக தேவதை!





கவிதையான கனவுகள் | Kavithaiyaana kanavukal

Kanavu
Kanavu kavithai

இரவின் கனவுகளை 
கண்களில் சுமந்து 
விழியோரப் பார்வையால் 
எனக்கு காட்டி 
மொழி பெயர்க்கச்  
சொல்கிறாய்
கவிதையாக!


இன்றைய விவசாயி | Today Farmer

Vivasaayi
Indraiya vivasaayi

கழனியில் முளைத்த 
களைய வேண்டிய
களைகளாய் கட்டிடங்கள்.
களைய முடியாமல் 
இன்றைய விவசாயி!

சேறை சோறாக மாற்றும்
வித்தை தெரிந்து
விவசாயத்தில் 
பாதம் பதிக்க முடியாமல்
இன்றைய விவசாயி!

தன்னிலை மறந்து
நண்பகல் வெயிலில்
கழனியின் நடுவில்
கலப்பைப் பிடிக்கும்
துணிவு இருந்தும்
துணிச்சல் இல்லாமல் 
இன்றைய விவசாயி!

கழனியின் மகள்  
நாற்று வளர்ந்து 
பருவப் பெண்ணாய்
தலை சாய்க்கும் 
நெற்கதிரை காண முடியாமல்
இன்றைய விவசாயி!

காலனின் குறிப்பறிந்து
விளைச்சல் கண்டவன்
மாறி வரும் கலியுகத்தால்
விவசாய வளர்ச்சி காணாமல்
இன்றைய விவசாயி!

மலடியின் கனவில்
ஒரு சுகப் பிரசவமாய் 
விவசாயின் கனவில் 
அமோக விளைச்சலாம்!
கனவு காணும் 
இன்றைய விவசாயி!

கானல் நீரில் தாகம் 
தணித்துக் கொண்டு 
இன்றைய விவசாயி!

விளை நிலத்தின் அருமை
விலை போகும் நிலமாய்
விளைச்சல் தெரியாமல்
விவசாயத்தை வீழச் செய்த 
வியாபாரப் பைத்தியங்கள்
மானுடப்  பணப் பைத்தியங்கள். 
பைத்தியங்களை 
திருத்த முடியாமல் 
இன்றைய விவசாயி!





முதல் சந்திப்பில் | Muthal Santhippu

Mutham
Muthal Santhippu


உன் முதல் பேச்சு 
என் தேசிய கீதமாய் 
எழுதிய உன் உள்ளம்
உச்சரித்த உன் உதடுகள் 

தேசப்பற்று  மிக்கவன் நான் 
மறப்பதில்லை தேசிய கீதத்தை!

பெண்மைக்குள் ஓர் பெருமை 
புரிந்து கொள்ள முடியாத 
இன்னொரு பெண்மையாய் 
உனது கருவிழி கண்கள்!

உன் விழி பேசி நான் 
மறந்த வார்த்தைகளால்
நானும் அழகாய் தெரிந்தேன் 
உன் முக அழகின் எதிரொளிப்பில்!

மழலையாய் நீ சிரிக்க
மயங்கிய கருவிழியில் 
இமைக்க மறந்த இமைகள்.

இலக்கணப்பிழை  இல்லா 
எழுத்துப்பிழை இல்லா 
பெண்மை இலக்கணம் நீ!

பல்லக்கில் பவனி வரும்
கவிதை ராணி நீ!
தமிழுக்கு ஓர் கவிதை
இல்லை இல்லை 
தரணிக்கோர் கவிதை
உனது பெயர்.

கற்பனை மறந்த சிந்தனை 
கவிதை வடித்தது 
நிஜ உலகில் உன்னோடு
அந்த முதல் சந்திப்பில்!





வழி(லி) அனுப்பிய வறுமை | Varumai kavithai

varumai
Varumai Kavithai


அடுக்கி வைத்த
அட்டைப் பெட்டியாய் 
அழகு தரும் 
கணணி பூங்காவில் 
சுத்தம் செய்பவளாய் இவள்!

அழுக்குச் சுவடுகளை 
அழிக்கப் பிறந்துள்ளாய்.
அயனின் பார்வையால் 
அவதாரம் எடுத்திருக்கிறாய்.

படியும் அழுக்குகளில் 
பணம் சம்பாதிக்க 
வறுமை இவளை 
வழியனுப்பி வைத்திருக்கிறது!

இவள் தட்டும் தூசியில்
உயிர் பெற்றன 
பிளாஸ்டிக் பூக்கள்.

கடுகளவு தூசி கண்டாலும் 
கருவிழி ஆணையிட 
கரைந்து போகிறது.
கடல் அலை நுரையாய்  
கரை ஒதுங்குகிறது

இவள் உழைப்பால் 
உயர்ந்திருக்கிறது 
குப்பை மேடுகள்!

இவள் வேதனை கண்டு 
இளைப்பார துடிக்குது
துடைப்பங்கள்!

இவளுக்கு ஒய்வு கொடுக்க 
நடுநிசி நெருங்குவதற்காக 
நண்பகல் மொட்டு விரிக்க 
அந்தி வேலை மலருகிறது

அந்தரத்தில் தொங்கும் 
பகல் விளக்கு பகலவன் 
மறைந்து விடுகிறான்!

கைரேக பட்ட காசுகள் 
அகம் சொல்லும் சிந்தனையில் 
அரங்கேற்றம் பெறுகிறது
வீட்டுச் செலவுகளாய்!

ஆயிரம் நினைவுகளில் 
ஒரு நினைவு மட்டும் 
உயிர் பெற்றிருக்கிறது.

மீதமுள்ள நினைவுகளுக்காக 
பகலவனின் ஒளிக்கதிர் 
குடிசை வாயிலில்!






பசுமை இலைகளாய் - ஹைகூ

pasumai
Pasumai Ilaikal

பட்டு போன மரத்தில்  
பசுமை இலைகள் 
பச்சைக் கிளி கூட்டம்

ஹைகூ வாழ்க்கை | Hikoo life

vaalkai
Vaalkai kavithai

பயண இலக்கு தெரிந்து 
நிலையில்லாத பயணம் 
வாழ்க்கை

எறும்புக் கூட்டம் | Erumbu koottam

erumbu
Erumbuk koottam

மெல்லென நடை பயிலும் 
பாவையின் பின் நடக்கும் 
காளையின் நடைக்கு ஒப்ப 

மேவிய ஒலி எழுப்பி 
முன் செல்லும் வண்டி தொட்டு 
பின் செல்லும் பெட்டி போலும் 

அழித்திடும் தன்மை கொண்ட 
ஆயுதம் தோளில் தாங்கி செல்லும்
ஆண் மக்கள் படையைப் போல

இன்பமாய் ஒலித்த மணி 
இசையென கேட்ட நொடி 
ஒன்றினை ஒன்று தொட்டு
ஓடிடும் பள்ளி பிள்ளை யொத்து

காரது கறுத்ததாலே 
கவ்விய இரை வாய் தாங்கி 
முன்னொன்று முந்தி செல்ல 
பின்னொன்று அதை தொடர்ந்து 
சிற்றுடல் தனை கொண்டு 
சீரிய பயணம் செய்யும் 
சின்னஞ்சிறு  எறும்பின் கூட்டம்
தன் இடம் சேர வேண்டி 
தாரையாய் சென்றது காண்!






ஹைகூ பேரணி | Haikoo

Perani
Haikoo perani

கழனியை நோக்கி 
விடியற்காலையில் பேரணி
கிராமத்து விவசாயிகள்

எனக்கொரு காதலி இருந்திருந்தால் | Enakkoru kaathali irunthirunthaal

En kaathal
Enakoru kaathali

கவிதை எழுதி பேனா மை
காலியாகி இருந்திருக்கும்!
அவள் விழியோரம் மையில் 
விளைந்த கவிதையை 
விதைத்திருப்பேன்! 

அவள் மூச்சுக் காற்றை சேகரிக்க 
முயற்சி எடுத்து 
வெற்றியும் கண்டு இருப்பேன்!
பிறர் தீண்டாமல் இருக்க அதை 
நிலாவில் சேகரித்தும் வைத்திருப்பேன்!

அவள் சிரிப்பின் சிதறல்கள் 
என்  கவிதையின் கருவாயிருக்கும்!
அவள் வாசித்த கவிதை வரிகள் 
உதட்டோர சிவப்பாய் 
ஒட்டி இருந்திருக்கும்!

அவள் தேகம் கிள்ளி விளையாட 
ஆசை பட்டிருப்பேன்!
அதனால் தினமும் நகம்
வெட்டி இருப்பேன்!

கடல் அலை முத்தத்தில் 
கால் நனைத்திருப்போம்!
கரையாத நினைவு அது 
கல்வெட்டுகளாக மாறியிருக்கும்!

அவள் பாதத்தில் 
வெள்ளிக் கொலுசு ஒன்றை 
மாட்டி இருப்பேன்!
எட்டாவது  ஸ்வரமாக
உலகுக்கு உணர்த்தியிருப்பேன்! 

இன்பத்தின் எல்லை 
எதுவென்று தேடியிருப்பேன்!
பிரிவுக்கு இல்லை எல்லை 
என்று முடிவெடுத்திருப்பேன்!

மழையோ வெயிலோ 
ஒரே குடையில் பயணித்திருப்போம்!
உடல் பொய் உயிர் மெய் 
பல கலியுக காதல்களுக்கு 
உணர்த்தியிருப்பேன்!

சாஸ்திரம் அடங்கிய 
திருமண அழைப்பிதழில்
கவிதையாய் எங்கள் பெயரை 
அச்சடித்திருப்பேன்!

எனக்கொரு காதலி இருந்திருந்தால்!!!






கருவிழிகள் | Karuvili

kankal
Karuvili kavithai

பாலில் விழுந்த கருவண்டு  
உனது  கருவிழிகள் 
தொட்டுத்தூக்க முயற்சித்து   
தோல்வியைத் தழுவுகிறது!
உனது கண் இமைகள்.

காமராஜர் | Kamarajar

Kavithai kamarajar
Kaamarajar kavithai

ஏழைகளின் கல்விக் கனவு
விடியும் முன்னே பலிக்கிறது
கற்கண்டாய் இனிக்கிறது - உன் 
கல்வித்திட்டம்.
ஆரவாரம் கொள்கிறது 
மதிய உணவுத் திட்டம்.

மக்களுக்கு மகுடம் சுட்டி 
படிக்காத மேதையாக 
பண்பாளன் நீ ஆட்சி செலுத்த 
எளிமையும் நேர்மையும்
எட்டிப் பிடித்து
உன் தோளில் தொற்றிக் கொண்டது.

உன் இரு தோளிலும்
உயிர்த் தோழனாயாய் அமர 
நேர்மைக்கும் எளிமைக்கும் 
வாய்ப்பு கொடுத்தாய்!

இறக்கும் வரை 
இறங்க வில்லை - அவைகள் 
உன் தோளை விட்டு!

உனது எளிமையும் நேர்மையும் 
ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது
பள்ளி கல்லூரி பொது இடங்களில்
உருவச் சிலையாய்!

உன் சிந்தனையில் உதித்து 
உயிர் பெற்று 
கம்பீரமாய் காட்சி தருகிறது
பல தொழிற்சாலைகளும்
பல அணைக்கட்டுக்களும்!

நீ செய்த சாதனைகளால்
உன் உருவச்சிலை 
உயிர் பெற்று நிற்கிறது
பட்டி தொட்டி எல்லாம்!

மண்ணில் பிறந்து 
மனதை விட்டு நீங்காமல் 
சரித்திரம் படைத்த கர்ம வீரரே !
கிங் மேக்கரே!
ஏழைகளுக்கு உதவுவதில் வள்ளலே!
இந்தியாவின் மற்றுமொரு அண்ணலே!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!





சுதந்திர தினக் கவிதை | Suthanthira thina kavithai

Augut
Suthanthira thinam

சுதந்திரம் பற்றிய இன்னும் ஓர் கவிதை , இங்கே கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2018/07/suthanthiram-kavithai.html


அகரம் முதல் சிகரம் வரை 
ஆயிரம் வாய்ப்புகள் உண்டு
உலகை அறிந்திடு 
உழைப்பால் உயர்ந்திடு
உனக்கென ஓர் சரித்திரம் எழுதிடு!

உன் நெருங்கிய தோழனாய் 
உழைப்பு இருக்கட்டும்!
நெருங்கவே முடியாத எதிரியாய் 
சோம்பல் இருக்கட்டும்!

பலமுறை உன்னை 
நீயே கேட்டு விடு 
நான் ஏன் பிறந்தேன் என்று?

பல வெற்றி கண்ட பிறகு 
ஒரு முறை சொல்லி விடு 
சாதிக்கப் பிறந்தவன் நான் என்று !

இனியும் தாமதம் வேண்டாம்!
இறப்பதற்குள் சரித்திரம் படைப்போம்!
சுதந்திரம் வாங்கிய உறவுகளுக்கு
மன நிறைவோடு சமர்பிப்போம்!





பருவகால நினைவுகள் | Paruva kaala Ninaivukal


உன்னோடு சேர்ந்து 
உயிர் பெற்று 
உறவாட நினைக்கிறது - எனது 
பதினாறு வயது 
பருவகால நினைவுகள்.

அங்கீகாரம் பெறாத கவிதை | Poetry without signature


அவள் கையொப்பம் இட்ட
எந்தவொரு புத்தகமும் 
கவிதைப் புத்தகம்தான்!
உன் கையொப்பத்திற்காக 
உருகுகின்றேன்!
தினமும் ஏங்குகின்றேன்!

பூவே பூச்சூட வா

poove

நீ வந்து செல்லும் பாதையில் 
நடைபாதை பூக்களாக 
உனக்காக பூத்திருக்கிறேன்!
உதிராமல் காத்திருக்கிறேன்!
பூவே ! பூச்சூடிடு !

தளிர் விட்ட ரோஜா செடி


இலையின் நுனியில் 
இறந்து போன மழைத்துளி 
உயிர் பெற்று உறவாடுகிறது.
தளிர் விட்ட ரோஜா செடி!

இயற்கையின் சீற்றம்


மழைசாரலில் நனைந்திருக்கிறேன்
மனதை பறி கொடுத்திருக்கிறேன்
நதியின் வளைவுகள் 
நங்கையிடம் கூட இல்லை

மாற்றம் கொடுத்து 
மாற்றிக் காட்டியது 
மழையும் மண் சரிவும்.

உத்தர்கண்ட் பற்றி எழுத
உவமையும் 
உருவகமும் தேவையில்லை.

மரங்களை அழித்ததால் 
மண்சரிவை ஏற்படுதினாயோ?
மலராமலே பிஞ்சு மொட்டுகளை 
மண்ணில் பதித்தாயோ ?
மழலைச் செல்வமும் 
மக்கட் செல்வமும்
மகத்தானதல்லவா ?

தொலைந்து போன உயிர்கள் 
தொலைவிலா ? அருகிலா ?
தொலைக்காட்சி செய்தி கூட 
தெளிவாகத்  தெரிவிக்கவில்லை.

வெள்ளப்பெருக்கு 
வெகு விமரிசையாய்
அடித்துச் செல்லப்பட்ட 
அனைத்து வகை மரங்களோடு
அணிவகுப்பு யாருக்காக?

மிதந்து வந்த மரங்களும் 
மாளிகைகளும் சொல்கிறது
மீண்டு வர வருடம் ஆகுமாமே?

கரையைத் தாண்டி நீ வர 
கரைபுரண்டு வெள்ளம் ஓட
கலை இழந்து 
கற்சிலையாய் நாங்கள்.
கற்காலத்தை நோக்கி நாங்களும்
கடல் அன்னையை நோக்கி நீயும்.

அரசியலை நம்பவில்லை 
அன்னையே உன்னை நம்புகிறேன்
எங்கள் இயற்கை அன்னையே !
இனிமேல் வேண்டாம் 
இது போன்றதொரு 
வெள்ளப்பெருக்கும் மண்சரிவும்.