பிப்ரவரி 2015

சோகங்கள் | Sokam

Sokam
Sokam


உதித்தவன் மறைந்து இரவுகள் மலர 
உதயமாகிறது என் இதயத்தின் புலம்பல்கள்!
சில துளி பெருவெள்ளமாய் கண்ணீர் துளிகள்
சிறப்புரை ஆற்றுகிறது விழியோரங்களில்!

நிம்மதியை  இதயமருகே வர விடாது 
நித்தமும் காவல் புரிகிறது தனிமைகள்!
படுக்கை அறை போர்வைக்குள் ஒழிந்து
படாத பாடு படுத்துகிறது சோகங்கள்!

என்றாவது ஒரு நாள் முடிவுரை காணுமா?
ஏக்கத்தோடு படுக்கையறை நான் செல்ல 
எட்டும் தூரத்தில் எள்ளி நகையாடுது 
என் தூக்கம் தொலைக்கும் சோகங்கள்!

பிறப்பு என்றால் இறப்பு ஒன்று இருக்க 
சோகம் என்றால் இன்பம் மட்டும் இல்லை!
ஆகாயத்தில் பொலிவாய் கோட்டை கட்டி 
அடிமண்ணில் அஸ்திவாரமாய் சோகங்கள்!

ஆண்மகன் என்றால் அழக கூடாதாம் 
அழகாய் இருக்கிறது கலியுக பழமொழி!
அடக்கிய சோகங்கள் ஆயுள் குறைக்க 
அடி மண் இன்றே கண்டால் சந்தோசம்தான்!

ஆறடி மண்ணுக்குள் நான் சென்றாலும் 
அடக்கம் செய்யாதீர்கள் என் சோகங்களை!
அங்கும் சோகங்கள் நுழைந்து விட்டால் 
அகிலமே ! எங்கு நான் செல்வேன் ?






நாய் கவிதை | Sella pirani

Dog
Chella Piraani Kavithai


வீட்டு வாயிலில் என் பாதம் பதிய
லொள் லொள் சத்தத்துடன் வரவேற்புரை
அன்பு நன்றி முடிவுரை உன்னோடு!

இரு கால்களை இரு கரங்களாக்கி
என் இடையோடு இறுகத் தழுவி
நன்றியை பகிர்வாய் என்னோடு!

என் விரல் நுனி உன் நெற்றி தொட 
உன் அன்பை எனக்கு உணர்த்திட
வால் ஆட்டிடுவாய் நன்றியோடு!

என் தோட்டத்து வயல்களுக்கு
காவலாய் கள்ளி வேலிகள்
கள்ளி வேலிகள் உன் காவலோடு!

இரவில் மடியில் நான் விழி முடி
கனவோடு கவியோடு நான் பயணிக்க
வாயிலில் நீ என்றென்றும் நன்றியோடு!