மே 2017

உயிர்த் தோழிக்கு | to my best friend

tholikku kavithai
En Yuir Tholikku


என் உணர்வுக்கு உயிர் கொடுக்க 
உள்ளத்து துள்ளல்களை சுகமாக்க
வாழ்நாள் கனவு சுக நிஜமாக்க 
என் உள்ளத்து விழி காட்டிய வழி நீ !

கருமேக மழை குளிர் காற்றாய் 
மனதோடு ஒட்டிக் கொண்டு 
நிதமும் என் மனம் வருடும் 
மதுரை மல்லித் தென்றல்  நீ !

உன் குரல் என் செவி அறிந்து 
உன்னதக் குரல் இதுவென்று 
என் அகம் அது தினம் உணர்த்திற்று
தரணியில் சிறகில்லா தமிழ் குயில் நீ !

என் இதயத்திற்கு விழி கொடுத்து 
அதற்கு இமை கொடுக்க நீ மறந்து 
காலம் முழுதும் உன் உள்ளம் பார்க்க
இதய விழி கொடுத்த பிரம்மா நீ !

வாழை மடல் மென்மை நீ கொண்டு 
வானுயர நற்குணம் அதில் விதைத்து
இன்முக நட்பை எனக்கு பரிசாக்கி 
கண்ணீர் ஊற்றை நிறுத்தியவள் நீ !

வலியும் சுகமும் வாழ்வோடு நடை போட
வலியை நிரந்தரமாய் புறந்தள்ளி 
சுகத்தை நிரந்தரமாய் எனதாக்கி 
என் உள்ளத்துக்கு வரம் கொடுத்தவள் நீ !

முகம் பார்க்கும் காதலுக்கு 
உலகத்தை உதாரணம் சொல்லி
உள்ளம் பார்க்கும் நட்புக்கு
உலகமாய் நம்மை உதாரணமாக்கியவள் நீ !