மே 2013

மழை குழந்தையை தா


ஏ மேகமே !

பகலவனின் பார்வை
கொடூரத்தால் பலனின்றி போனாய் !

தன் குளிர் காதலியோடு 
சண்டையிட்டு வெப்பத்தை தழுவி 
வியர்வையை பரிசளிக்கும் 
தென்றல் காற்றிடம் 
நேரம் கடன் வாங்கி 
தேசம் எங்கும் பயணித்து பார் !

வெள்ளை கூந்தலாய் 
அருவி வழிந்தோடிய மலைகள் ...
கூந்தல் இழந்த பருவபெண்ணாய்..
அழகு இழந்து இருப்பதை பார் !

மாலை வான நட்சதிரமாய் 
பூக்கள் குலுங்கிய சோலைகள்..
பாலை தேசமாய் படர்ந்திருக்கும் 
நிலையை பார் !

நீராடிய பெண்ணின் 
முகத்தில் நீர்த்துளியாய் 
பனி படர்ந்த புல்வெளிகள் 
பாழ் பட்டிருக்கும் சோகம் பார் ...

நஞ்சையும் புஞ்சையும் 
விளைந்த நிலங்கள் எல்லாம் 
செருப்பின்றி நடந்த பாதமாய் 
வெடித்து கிடப்பதை பார் !

மீன்கள் துள்ளிய நீர்நிலைகள் 
தன் தாகம் தீர்க்க நீரின்றி 
தவிப்பதை பார்...

நிலைமை பார்த்த பின் ...

உன் கடல் காதலியோடு 
வான வீதியில் சரசமாடி 
மழை குழந்தையை தா !


மண்ணின் மகிழ்ச்சிக்காக !





சினிமாவின் மறுபக்கம் | cinema marupakkam


பல பாடல் வரிகளில் 
கவிதை இல்லை 
கற்பனையும் இல்லை 
கலாச்சார சீரழிவு 
தெளிவாகத் தெரிகிறது.

சில நகைச்சுவை வசனங்களில்
சிந்தனை இல்லை.
இரட்டை அர்த்தங்களுக்கு 
விதி விலக்கு  இல்லை.
இங்கே அவமானம் 
பெண்மைக்கு சமர்ப்பணம்.

ஒவ்வொரு பாடலும் 
பிரதிபலிக்கிறது
வாலிப பருவத்தின் 
புட்டி பால் மது என்று!

ஒளியும் ஒலியும் 
ஒழுங்காய் அமையவில்லை
ஒழுக்கம் கெட்டுப் போகிறது.
எங்கள் சினிமாவில்....






பருவக் கோளாறு...


படிப்பை முடிக்காமல்
சிந்தனை தெளிவில்லாமல் 
பண்பாடு அறியாமல் 
பணம் சம்பாதிக்காமல் 
செலவழிக்க தவறாமல் 
சரியான வயதை எட்டாமல் 
இவர்களுக்கு மட்டும்
வந்து விடுகிறது காதல்!

பிஞ்சிலே சில காய்கள்
வெம்பி பழுப்பது உண்டு.
இவர்களுக்கு எப்பொழுதுமே 
அக்கினி கோடை காலம்தான்!

தாகம் தணிந்த மயக்கம்


குப்பைத் தொட்டியில்
Kuppai thotti
குப்பைத் தொட்டியில்
குழந்தையாய்...

சதை கொண்ட ஏக்கங்கள்
கட்டிலில்
தாகம் தணிந்த மயக்கம்
குப்பைத் தொட்டியில்!

பத்து மாத பாரம் தாங்காமல்
தூக்கி எறிந்தாயோ
சுமைகள் உனக்கு சுகம் தானே!

என் அழுகை குரல்
கண்காட்சி ஒன்றை ஏற்படுத்த
மாந்தர்கள் கூடி நின்று
உன்னை அழுக்காய் விமர்சிப்பார்களே!

ஐயோ அம்மா
நான் என்ன செய்வேன்
குப்பையில் கிடந்ததால்
அறிவில்லா மாந்தர் என்னை
அழுக்காய் பார்ப்பார்களே!

குப்பைத் தொட்டியில் குமுறல்கள்
என் தேசத்து கீதங்கள்
என் நினைவுச் சின்னமாய்
என் அகத்தினிலே பதிந்திருக்கும்
என் தேசத்து குப்பைத் தொட்டி!

என் தேசத்து ஒரு நாள் தொட்டில்!

காலை நாளிதழ் பார்த்து
உன் வேதனை நிம்மதி அடைகிறது
குப்பைத் தொட்டியில்
பச்சிளங் குழந்தை மீட்பு!






பேசிய கண்கள்



நீ பேசும் வார்த்தைகள் 
என் செவிகளுக்கு  எட்டவில்லை 
கண்களுக்கு எட்டியது.
நீ கண்களால் பேசுவதால்!

வறுமையின் விலை...


Varumai
Varumai kavithai
வறுமை  சில நேரங்களில்
வீதியில் விலை போகிறது
விபச்சாரி

பூக்களின் ராணி மல்லிகை | jasmine flower kavithai --

malli
Mallikai


மல்லிகைப் பூவின் 
மணத்தை தென்றலும் 
இரவல் வாங்கி உலா வருகிறது.
மல்லிகைப் பூவிடம் கடன் பட்ட தென்றல்!

வாலிப வயதில்தான் புரிந்தது
காலை வேளையில் மலராமல் 
அந்தி வேலை ஏன் மலருகிறாய் என்று!

உன் மணம் கண்டுதான் 
இரவுகள் உனக்கு பட்டம் அளித்திருக்கிறது
காமத்தின் தலைவன் மல்லிகை என்று!

ஆடை அணியாமல் 
அளவற்ற்ற பூக்கள் இருந்தாலும் - என்
அகம் ரசிப்பது என்னவோ உன்னைத்தான்!

உன் அழகினை ரசிக்க 
மாலை நேர சூரியன் 
மேற்கில் உதிக்க ஆசைபடுகிறான்.

உன்னை காதல் செய்ய 
ரோஜாவும் ஆசை கொண்டதால் 
உன்னோடு சேர்ந்து 
நூலில் கோர்க்கப்படுகிறான்.

பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் 
பழமொழி இது 
பழமை மாறவில்லை - மல்லிகையினால்!
பொறாமையில் சிவந்தது ரோஜாக்கள்.

உன் அழகை ரசிக்க 
இரவெல்லாம் விழித்துக் கொண்டே 
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றான் 
விண்ணுலக நிலவு.

மல்லிகைப் பூவை ரசிக்க
மணம் நுகர 
விண்ணைத் தாண்டி 
வந்தாலும் வரும் - இந்த 
விண்ணுலக நிலவு!

நிலவிடமிருந்து ஒளி வாங்கி 
நிகரில்லா பெருமை சேர்க்கிறாய்.
உன்னை வீழ்த்த ஒரு பூ 
உலகினில் இல்லை.
பூக்களின் ராணி மல்லிகையே!





காதல் கடிதம் | kaathal kaditham


பெயர் தெரியாத
என் சிறகுகள் இல்லா தேவதைக்கு...

அழகின் எல்லை எதுவரை என்று 
நான் ஆராய்ந்த பொழுதுதான் 
உன்னை முதலில் கண்டேன்!

அழகு என்னும் அளவுகோலின் 
ஆரம்பமும் சரி!
உச்சமும் சரி!
நீயே! நீ மட்டும்தான் பெண்ணே!

மன நிம்மதி தேடி 
ஆலயம் செல்கிறேன் - உன்னை 
முதலில் சந்தித்த பூங்காவிற்கு.
முதல் சந்திப்பு 
அத்தனை புனிதமானது.

உனது வெள்ளிக் கொலுசுகள் 
என்றைக்குப்  பேசும் என்று 
எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
அனால் உனது நினைவுகள் 
பேசாத அழகிய சிலையாய்!
மௌனம் களைவாய் அன்பே!

பசுமை சோலைத் தேடும் 
பாலைவன மணல்களாய் - உனது 
பதிலைத் தேடும் என் காதல் ஆசைகள்!

கானல் நீராய் வர வேண்டாம்.
மலைச் சாரலாய் வந்து விடு.
என் தாகம் தனித்து விடு அன்பே!

எட்டா தூரத்தில் அமைந்த 
விண்வெளி கூட 
பூமியை காதல் செய்கிறது.
பூங்காவில்  எட்டிய தூரத்தில் 
நீயும்  நானும்.

நீ ஒருமுறை கூட 
பூச்சூடி பார்த்ததில்லை.
நாம் தினமும் 
வந்து போகும் பூங்காவில் 
உன் கூந்தலேற 
ஒற்றைக் காலில் 
தவம் செய்யும் 
பூக்களைப் பார்த்தாயா?

ஒரே ஒரு முறை மட்டுமாவது
பூச்சூடி விடு.
பிறந்த பூக்களுக்கு வாழ்வு அளித்து 
சிறகுகள் இல்லா தேவதை 
என்பதை நிருபித்து விடு.

உன் பெயர் கூட தெரியாமல் 
உன்னை காதல் செய்யும் நான் 
உனக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா?
சிறகுகள் இல்லா தேவதை.

உன் பெயர் மட்டும் தெரிந்து  இருந்தால்
எனது கவிதையின் அனைத்து வரிகளிலும் 
எதுகை மோனையாக  
உனது பெயரே அமைந்திருக்கும்.

உன் இதழ்கள் பேசும் வார்த்தையை விட 
உன் காதணிகள் பேசும் கவிதை 
மிக மிக அருமை.
ரசிக்க முடியாமல் 
உன் பாதழகில் மயங்கிக் கிடக்கிறது
வெள்ளிக் கொலுசுகள்.

வானத்தில் ஆயிரம் ஆயிரமாய் 
நட்சத்திரங்கள் பூத்திருந்தாலும் 
நட்சத்திரங்களின் ராணியாக இருக்கும் 
ஒற்றை நிலா நீதான் பெண்ணே!

தேய்பிறை என்பதையே அறியாத 
உன் அழகைக் கண்டு 
தினமும் வியக்கத்தான் செய்கிறேன்!

பல அதிசயங்கள் உன்னில் அடக்கம்.
உன்னை அழகாக்கிய பத்து மாதங்கள்
பூமியிலே தங்கிய நிலா
சிறகுகள் இல்லா தேவதை
இன்னும் பல.....

வலியை தாங்கிய உளியாக நானும் 
செதுக்கப்பட்ட சிற்பமாக நீயும் 
செதுக்கிய சிற்பியாக 
நாம் வந்து அமரும் பூங்கா!

என் இதயம் துடிக்க வேண்டும் 
அதுவும் உனக்காக மட்டும்.
உன் இதயதில் இடம் ஒன்றை 
கொடுத்து விடு பெண்ணே!

எழுதி முடிக்கவும் மை தீர்ந்தது.
முற்றுப்புள்ளி இடவில்லை.
காற்புள்ளியோ(,)
அரைபுள்ளியோ (;)
உனது விழியோரம் 
மை தேடி வைத்து விடு!

புள்ளி வைத்தக் கோலங்களாய்
ஒவ்வொரு வரியும் மாறி விடும்.
தொடர வேண்டும் - இனி 
இது நமது புனிதப் பயணமாக!

நீ சம்மதம் தெரிவித்தால் 
காதல் தூதுவனாக
சிகப்பு ரோஜாவை அனுப்புகிறேன்.

என்றும் உன் அன்புடன் 

வெளி நாடு வாழ் "இந்தியனாக"...


nri
Velinaadu val indian
திரை கடல் ஓடி திரவியம் தேடும் இவன் 
வரும் முன் மறப்பதில்லை 
வாசனை திரவியம் வாங்குவதற்கு!

பாஸ்போட் விசா எதுவும் இல்லாமல் 
இவன் கனவும் கடல் தாண்டி வருகிறது
பிறந்த மண் தேடி!

மண் வாசனை என்றால்
என்னவென்று இவனிடம் கேட்டுப் பார்.
மனம் திறந்து மணமாக பேசுவான்!

தமிழ் நாட்டின் விழாக்கள் 
இவன் அறைத் தொலைக்காட்சியில்  
தெளிவாகத்தான் தெரிகிறது!

கைபேசியின் அலைகளுக்குள் 
இவன் சொந்தங்களின் குரல்கள்
முகம் காட்டி மறைகின்றன!

கடல் தாண்டி இருப்பதால் 
இவன் சிந்தும் வேதனைக் கண்ணீர் 
இந்திய எல்லையைக் கூட
தொடுவதில்லை.

சொர்க்கமே என்றாலும் 
அது நம் ஊரைப் போல் வருமா
பாடலை பல முறை கேட்டிருப்பான்.
பரவசம் அடைந்திருப்பான்.
பாட்டு முடியும் வரை 
பகல் கனவும் கண்டிருப்பான்!

வியர்வைத் துளியாய் மாறிய 
தினாரும் ரியாலும்
இந்திய ரூபாயாக மாறும் போது
மணம் வீசத்தான் செய்கிறது.

தோற்றுப்போன மல்லிகை  மணம் 
துயரம் தாங்கி 
ஒற்றை காலில்
மௌனம் சாதிக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை
துணைக் கண்டமாக
இவன் தங்கும் அறை.
கடல் நாடு தாண்டி வாழ்ந்தாலும்
வெளி நாடு வாழ் "இந்தியனாக".






தென்றல்...


Thendral
Thendral
தலை குனிந்து நிற்கும் நெற்கதிரை 
தட்டி எழுப்பிச் செல்கிறது
இந்த தென்றல்!

கழனியில் உழைத்த 
உழவனின் வியர்வை 
சூரியனைக் கண்ட பனித்துளியாய்!
கரைந்து விடச் செய்கிறது
இந்த தென்றல்!

இன்று மலர்ந்தப் பூக்களுக்கும் 
நாளை மலரப்   போகும் மொட்டுகளுக்கும்
வாழ்த்துச் சொல்லி 
வருடிச் செல்கிறது.
இந்த தென்றல்!

சாதி மதம் கடந்து 
நானும் வருகிறேன்
தேகங்களை வருடுகிறேன் 
இதயங்களைத் திருடுகிறேன்.

பல இதயங்களைத் திருடிய 
இவன் இயற்கையின்
செல்லக் குழந்தை!





பிரசவ வலிக்குப் பயந்த நான்...


பெண்மையை உயர்த்திப் பேச 
என்னை நானே 
தாழ்த்திக் கொண்டதும் உண்டு.
பிரசவ வலிக்குப் பயந்த நான் 
ஆண் மகனாக பிறந்தேன்.


கவிதை பேசும் காதணிகள்...




ஒற்றைக் கால் பூக்கள் 
தலையாட்டி கவிதை பேசுகிறது.
என்னவளின் காதணிகள்!