Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உயிரே பதிலாய் --


                                    உருவமில்லா காற்று
                               அங்கும் இங்கும் அலைகிறது
                                உருப்படியாய் என்ன செய்தது
                                   உதடுகள் கேள்வி எழுப்ப
                                நுரையீரல் பதில் சொல்லிற்று
                                உயிர் கொடுக்கும் ஆக்சிஜன்
                                    அவன்தான் என்று!








சுய ஒழுக்கம்

Suya olukkam


 தவறான உறவுகள் தள்ளி விட 
தடுமாற்றம் இயல்பு 
தடம் மாறுவதுதான் தவறு.
நல் எண்ணம் காந்தமாய் 
நல் எண்ணத்தை இழுக்கும்!
நல் எண்ணமே தேவை!

எல்லாமே என்னிலும் உண்டு 
உன்னிலும் உண்டு
சகலமும் உற்பத்தியாகிறது 
உன் சிந்தனையிலும் 
உன் எண்ணத்திலும்!
தனிமை மௌனமாய் 
சொல்லி விடுகிறது 
நீ யார் என்று !..
தனிமை உன் கேள்விக்கான பதில்!

தவறிய ஒன்று பெரும்பாலும் 
இயல்பு நிலை அடைவதில்லை 
தவறிய கண்ணாடி உடைகிறது 
தவறிய வார்த்தைகள் 
மனதை உடைக்கிறது ...
தவறாமல் இருக்க 
தவறா கவனம் வேண்டும்!

காலம் மாறுகிறது 
நேரம் மாறுகிறது 
காலத்திற்கு ஏற்ற மாற்றம் 
கண்டிப்பாய் தேவை
மாறாத மாற்றம் 
தனித்து விடப்படுகிறது 
நேர்மை ஒன்றே மாறாத ஒன்று!

சுவாசம் ஆயுளை நீட்டுகிறது 
வார்த்தை மதிப்பை கூட்டுகிறது 
காதல் அன்பை பகிர்கிறது 
எண்ணம் வெற்றியை ஈட்டுகிறது
சுய ஒழுக்கமே வடிவம் கொடுக்கிறது! 


இழப்பில் மகிழ்ச்சி | சிகரெட் கவிதை

நழுவிய சிகரெட்
நழுவிய சிகரெட் 

விரல் நழுவிய சிகரெட் 
விரக்தியில் விழிகள் 
மகிழ்ச்சியில் நுரையீரல்!







பைத்தியக்காரன் - done

Paithiyam
Paithiyakaaran Kavithai


பாதங்கள் வகுத்த வழியோடு
வலிக்காமல் பயணித்து
உடல் சொல்லி அமர்வது என் வழக்கம்!

சில நேரம் காதல் கொண்ட வாழ்க்கை
சில நேரம் உதறிய உறவுகள் - என்னை 
தனிமையில் உலவ வைக்கிறது!

சில நேரங்களில் சாப்பாடு பிச்சையாக 
சில நேரங்களில் தானமாக 
சில நேரம் விதி உடன் வருவதில்லை!

உலகத்துக்கு என்னை பிடிக்கவில்லை 
எனக்கும் உலகம் புடிக்கவில்லை 
பூமிக்கு தத்துப் பிள்ளை - ஆதலால் 
விட்டு வைத்திருக்கிறது!

அழகை மயக்கும் ரோஜாவும் தெரியும் 
பகையை முடிக்கும் கூர்முனை கத்தியும் தெரியும் 
காதலும் பகையும் தெரிவதில்லை!

இரவில் தாய் மடி தேடி அலைந்தேன்
தேடலில் எதுவும் எட்டவில்லை 
சாலையோர மேடையே இறுதியில் தாய் மடியாய்!

நான் உளறுவது பிற விழிகளுக்கு தெரியும் 
நான் அழுவது எனது விழியில் புலப்படாது 
பைத்திய மனஙகள் மனதுக்குள் அழுகிறது!

பனியும் வெயிலும் பாடம் நடத்தின 
கிழிந்து போன என் கந்தல் துணிக்கு 
எந்த பாடமும் விளங்கவில்லை!

கண்ணீர் வந்தே தேய்பிறையானேன்
மதிப்பில்லா என் கண்ணீருக்கு
வளர்பிறை என்ன தேய்பிறை என்ன ?

எல்லை என்று சொல்வது எதிலும் உண்டு 
எண்ணில் அந்த எல்லையை தேடினேன் 
எட்டாத என் எல்லையை என்னவென்று சொல்ல !

வயிறு பசித்தால் சாப்பாடு 
தாகம் எடுத்தால் தண்ணீர் 
பஞ்சத்திற்கு வளைந்தது என் உடல்!

இதுவும் கடந்து போகும் என்ற 
பொருந்தாத வார்த்தையுடன் அழுகிறேன் 
கடைசிவரை பைத்தியக்காரனாய்!












ரசிகர்கள் அல்ல வெறியர்கள்

Cinema
Cinema Veriyarkal


சினிமா என்றால் பொழுதுபோக்கு 
மறந்து விட்டது பல பேருக்கு 
சிந்தனை எல்லாம் மழுங்கி இருக்கு 
விழிக்காத மூளை மயக்கத்தில் இருக்கு!

நடித்தவன் உச்சியில் இருப்பான்  
ரசித்தவன் எங்கே இருப்பான் 
ரசித்த போதை தெளிந்து விடும் 
வெறி கொண்ட போதை கூடி விடும்!

முதல் முறை திரை நோக்க 
சில நூறு ரூபாய்கள் 
இரண்டாம் முறை திரை நோக்க 
சேமிப்பதில் அரை குறைகள்!

நடிகனின் முகத்தில் முகத்திரை - அதை 
அறியாத மனதில் மனத்திரை 
முகத்திரை விலகி விடும் 
மனத்திரை ஒட்டி விடும்!

அரசியலுக்கு சினிமா முதல் படி  
ரசிகனுக்கு அதுவே கடைசி படி 
இனி இங்கு இல்லை வேறு படி 
எப்படி வாழ்வது முறைப்படி!

திரை வடிவில் மனம் கெட்டான்
இனி எதன் வடிவில் அதை மீட்பான் 
மனமும் திரையும் ஒன்றல்ல 
மனம் முன் திரை பெரிதல்ல!

அஜித்தும் நடிகரே விஜயும் நடிகரே
ரசிகன் இருவரையும் ரசிக்கிறான் 
வெறியன் ஒருவரை துதி பாடுகிறான் 
இவர்கள் ரசிகர்களே அல்ல வெறியர்கள்!










சாலை விதிகள் | Saalai Vithikal

Indian Road rules in tamil
Saalai Vithak Kavithai



வீட்டுக்கொரு வாகனம்
கட்டாயமில்லா கட்டாயம்
விதிமுறை அறிந்து பயணித்தால்
விபத்து ஒதுங்கி பயணிக்கும்!

தலைக்கொரு கீரிடமாய்
உயிர்க்கொரு கவசமாம்
தலைக்கவசம் கம்பீரமாய்
தலையினில் முடி சூடட்டும்!

வளைவுப் பாதையோ நளினம்
நளினத்திலே வேண்டுமோர் கவனம்
வாகனித்தில் ஒலி எழுப்ப
விபத்தை புறந் தள்ளலாம்!

விதிமுறை மீறிய வேகம்
விதியின் வசம் செல்லும்
விதியின் ஆணையோ
விபத்தை கொடுக்கும்!

வாழ்வில் பிற தடை கடந்து வர
வேகத் தடை கரம் கொடுக்கும்
வேகத் தடை அறிந்து பயணிக்க
அசம்பாவிதத்தில் தடை ஏற்படும்!

ஒளி நிற விளக்குகளில்
ஓர் மௌன ராகம்
ஓராயிரம் அர்த்தங்களுடன் !
நில் கவனி செல்!

முகப்பு விளக்கு பகலில் ஒளிர்ந்தால்
வாகன விபத்து மிகவும் குறைவு
முகப்பு விளக்கு பகலில் ஒளிரட்டும்
வாகன முகம் அதில் ஜொலிக்கட்டும்!

வாழ்க்கைக்கு ஓர் நெறிமுறை
சாலைகளுக்கு ஓர் விதிமுறை
நெறிமுறை மீறினால்
அவன் மனிதனே இல்லை!
விதிமுறை மீறினால்
அவனுக்கு வாழ்வே இல்லை!







சிலர் மற்றும் பலர் | Silar mattrum Palar

Single


கலியுகத்திலும் நீதியின் கரம் பிடித்து 
களைப்பு கொண்டு நடப்பவர் சிலர்
அதையே எள்ளி நகையாடி 
களைப்பு இன்றி நடப்பவர் பலர்!

அரசியலை சேவை என்று 
சுய வாழ்வை மறைந்தவர் சிலர்
அதையே பணம் என்றெண்ணி
படை பலமுடன் வருபவர் பலர்!

துன்பத்திலும் அமைதி காத்து
தனக்குள்ளே சிரிப்பவர் சிலர்
அதையே இன்பமாக்கி இதழால்  
இதயத்தால் சிரிப்பவர் பலர்!

வெற்றியில் நிதானம் கொண்டு 
தொடர் வெற்றி கொள்பவர் சிலர்
அதையே சாதனை என்றெண்ணி
அடங்காமல் திரிபவர் பலர்!

உடலும் அறிவும் செதுக்கிய திறமையை 
தர்மத்திற்கு பயன்படுத்துபவர் சிலர்
அதையே திறமைக்கு விலையென்று 
அதர்மத்திற்கு விலை போவர் பலர்!

சரித்திரங்கள் சிறகு விரித்து 
அணைத்தது இன்றுவரை சிலர்
சரித்திரத்தில் இடம் பிடிக்க நினைத்து 
சறுக்கிக் கொண்டவர் பலர்!





எல்லாம் தாண்டி | Ellam thaandi

Thaasi
Vibachaari Kavithai
பசி தீர்க்கும்  எல்லா உணவிலும்
ஏதோ ஒரு முனகல் அறிந்தேன்!
தேக ஆசை கொண்ட ஆடவனின்
பணத்தின் உணர்ச்சி என்று அறிந்தேன்!

தேக ருசி கொண்ட கழுகுகள்
வீடு வாயில் வரை தூரத்தின!
கட்டிலோடு தொலையவில்லை
கடந்து போன கட்டில் உறவுகள்!

பேருந்தில் உரசுபவன் முன்னே
தலை நிமிர்ந்து பேசுகிறேன்
பத்தினி வேஷம் போடுகிறேன்
என் தொழில் அவன் அறியாதலால்!

பல வீட்டு கட்டில் கால்கள்
பழுதடைந்தோ சுகமில்லாமலோ ஆனதால்
பழகிப் போனது பலருக்கு என் கட்டில்
பக்குவப்பட்டு நாசமானது என் மனது!

வலிக்காமல் வாழ்க்கை இல்லை
மறைமுகமாக சொல்லி செல்கிறது
ஒவ்வொரு கடந்த இரவுகளும்
சில நாள் என் தேகத்திற்கு விடுமறை!

வளையல் என்றால் உடைகிறது
காப்பு என்றால் வளைகிறது
அணியும் ஆபரணங்கள் உணர்த்துகிறது
கலியுக ஆடவர்களின் காம ஆசையை!

கசங்காமல் உடுத்தி செல்லும் ஆடை
கசங்காமல் திரும்பி வர
கசங்கிய காகித பண கையோடு
கசங்கி இருக்கும் என் தேக மது!

பாதங்கள் படிதாண்டி வெளியேற
வழி மறித்து நிற்கும் மகனிடம்
பதில் எதுவும் சொல்லமுடியவில்லை
எங்கு செல்கிறேன் என்று!

செய்யும் தவறுக்கான காரணத்தோடு
இதழ் சிரித்து இதயம் அழுது
நகர்கிறது என் வாழ்க்கை
கலியுக ராமர்கள் இல்லை - ஆதலால்!




பண்பாடு நிலைக்கட்டும் | panbadu nilakattum

panbaadu
Panbaadu


உலகம் முன்னேறியதாய் 
மார் தட்டும் விஞ்ஞானத்திற்கு 
மானம் என்னவென்று அறியாது 
பண்பாடு என்னவென்று புரியாது!

தலைவனைக் கண்ட தலைவியவள் 
தலை கவிழ்ந்து இதழ் சிரித்தாள்
சிறப்பாய் சிதறின இதழ் சிரிப்புகள்
சிதறாமல் இருந்தன பண்பாடுகள்!

தேகம் மறைக்கா ஆடைகள் 
வாழ்வை கெடுக்கும் வாய்ப்புண்டு
பக்குவப்படா மிருகங்கள் விழி முன் 
புத்திசாலித்தனமாய் நடப்பது நல்லது!  

அகவை முதிர்ந்த பெரியவர்களிடம்
அன்போடு நடக்க வேண்டும் 
பண்பு கொண்ட முதிர்ந்த மனது 
பண்பாடோடு உன்னை பாராட்டும்!

இலக்கணம் மறந்த கவிதைகளை
புதுக்கவிதைகள் என புகழ்ந்தாலும்  
மரபு மீறிய கவிதைகள் அவையென
மனம் நினைக்கும் அல்லவா? 

செவ்வாயில் நீர் கண்டுபிடித்தாலும் 
விஞ்ஞானம் ஒளிவேகத்தில் பயணித்தாலும் 
பண்பாடு ஒலி வேகத்திலாவது 
பயணிக்கட்டும்! பண்பாடு நிலைக்கட்டும்!




பேஸ்புக் | facebook

Kavi
Facebook



அகம் தெரியாதவர்களின்
முகம் மட்டும் அறிந்து
அரட்டை அடிக்க 
ஆரம்பமாகிறது 
இணையதள  உறவுகள் !

நிழற்படங்களின் 
நிஜ முகம் காணாமல்
நிறம் தரம் கண்டு
நிரந்தரம் இதுவென 
நினைக்கின்ற மனது இது!

விழிப்புணர்வு இல்லா
வளராத சிந்தனைகளால்
வளர்ச்சி காணும் சர்ச்சைகள் 
இங்கு ஏராளம்!

உறவுகளை சீர்குலைக்க
உணர்வுகள் தூண்டும்.
தவறுகள் இங்கு
சாதுர்யம் எனப்படும்!

அரட்டை அடிக்கும்
வார்த்தை ஜாலங்களில்
விழிகள் சிரிக்கும் 
அகம் மகிழ்வு கொள்ளும்.

உண்மை அன்புகள் 
ஊமையாய் ஓய்வெடுக்கும்
உறவுகளுடன் இல்லத்தில்!
உலவுவார்கள் இணையத்தில்
போலி அன்பைத் தேடி!

மனம் ஒன்றை கண்டதாய்
மணம் முடிந்ததை மறப்பர்
மறப்பது இயல்பாகும் 
மணம் கண்ட மனதினை!
மல்லு கட்டும் நீதிமன்றம்
மனதையும் மணத்தையும் பிரிக்க!

உணர்சிகளின் உந்துதலால்
நட்பு என்ற முன்னுரை 
காதலாக நகரும்
இரண்டு தினங்களிலே!

முடிவுரை என்னவோ
உயிர் உருகுலைந்திருக்கும்
இல்லையேல் இதயம் ஒன்று
அங்கே உடைந்து இருக்கும்!

உறவுகளை சீர்குலைக்கா
உணர்வுகளை பாதிக்கா
வதந்திகள் பரப்பா 
வன்முறை உண்டு பண்ணா 
நல்ல சிந்தனை 
நமக்கு வேண்டும்!

சமுக வலைத்தளங்களை
சரியாக பயன்படுத்துவோம்!




புகை

pakai
Pookai


வளரும் சந்ததியினரை
வழுக்கிய சறுக்கள்!
வலிமையிழந்து நீ 
வலுவோடு அவன்!

விரல்களுக்கு இடையில் 
உயிரைத் தின்னும்
விளையாட்டுப் பொருளாக
கலியுக நாகரீகம் இவன்!

தொடர்ந்து வருகிறான்
தூக்கி நீ எறிந்த போதும்!
உதடுகளோடு மட்டுமல்ல 
உயிரோடு உறவாடுகிறான்!

வெள்ளைப் புகையில் 
கருப்பாய் ஒரு விதவை
சிவந்த நுரையீரலில்
சீராக மாற்றம் செய்தான்!

புகையோடு உறவாடி
புதியதாய் ஓர் உறவு 
நுரையீரலை சந்தித்து  
புற்று நோய் வளர்த்தான்!

வளர்ந்து விட்ட அவன் 
எட்டி உதைத்தான்
அந்தோ சாய்ந்தான் 
கல்லறைக் குழியில்!




மனித நேயம் | Manitha Neyam

Vibathu
Saalai Vibathu

சாலை விபத்தில் 
கருவிழியால் நோக்கி 
இதயத்தால் நோக்காமல் 
இரக்கம் மறந்த
கடந்து செல்லும் உயிர்
தவழும் உயிரை மறந்ததே!

வடிகின்ற குருதியில் 
சாலையோர பள்ளமும் 
நிரம்பி வழியுதே!

ஏக்கம் கொண்ட நுரையீரல்
இறுதி சுவாசமோ என நினைந்து
முடிவு தெரியாமல் திணறுதே!

காத்திருக்கும் உறவு முகம்
கலக்கம் அடையுமே
இறுதி நாள் இதுவென்று
கலங்கலான சிந்தனை செய்யுமே!

ஊசலாடும் உயிருக்கு 
மருத்துவ மனை அறையில்
காகித காந்தி பணமும்  
விலை பேசுமே!

விதியும் இறுதி ஊர்வலமும் 
மானுடனாய் மரித்தவனுக்கு
பூலோக உறவுகள்!
மறந்து விட வேண்டாம்

மனித நேயத்தை 
மறந்து விட வேண்டாம்!
மறைத்தும் சென்று 
விட வேண்டாம்!

சாலை விபத்துகளில் உதவிடுவோம்!






இன்றைய விவசாயி | Today Farmer

Vivasaayi
Indraiya vivasaayi

கழனியில் முளைத்த 
களைய வேண்டிய
களைகளாய் கட்டிடங்கள்.
களைய முடியாமல் 
இன்றைய விவசாயி!

சேறை சோறாக மாற்றும்
வித்தை தெரிந்து
விவசாயத்தில் 
பாதம் பதிக்க முடியாமல்
இன்றைய விவசாயி!

தன்னிலை மறந்து
நண்பகல் வெயிலில்
கழனியின் நடுவில்
கலப்பைப் பிடிக்கும்
துணிவு இருந்தும்
துணிச்சல் இல்லாமல் 
இன்றைய விவசாயி!

கழனியின் மகள்  
நாற்று வளர்ந்து 
பருவப் பெண்ணாய்
தலை சாய்க்கும் 
நெற்கதிரை காண முடியாமல்
இன்றைய விவசாயி!

காலனின் குறிப்பறிந்து
விளைச்சல் கண்டவன்
மாறி வரும் கலியுகத்தால்
விவசாய வளர்ச்சி காணாமல்
இன்றைய விவசாயி!

மலடியின் கனவில்
ஒரு சுகப் பிரசவமாய் 
விவசாயின் கனவில் 
அமோக விளைச்சலாம்!
கனவு காணும் 
இன்றைய விவசாயி!

கானல் நீரில் தாகம் 
தணித்துக் கொண்டு 
இன்றைய விவசாயி!

விளை நிலத்தின் அருமை
விலை போகும் நிலமாய்
விளைச்சல் தெரியாமல்
விவசாயத்தை வீழச் செய்த 
வியாபாரப் பைத்தியங்கள்
மானுடப்  பணப் பைத்தியங்கள். 
பைத்தியங்களை 
திருத்த முடியாமல் 
இன்றைய விவசாயி!





வறுமையின் விலை...


Varumai
Varumai kavithai
வறுமை  சில நேரங்களில்
வீதியில் விலை போகிறது
விபச்சாரி

வெளி நாடு வாழ் "இந்தியனாக"...


nri
Velinaadu val indian
திரை கடல் ஓடி திரவியம் தேடும் இவன் 
வரும் முன் மறப்பதில்லை 
வாசனை திரவியம் வாங்குவதற்கு!

பாஸ்போட் விசா எதுவும் இல்லாமல் 
இவன் கனவும் கடல் தாண்டி வருகிறது
பிறந்த மண் தேடி!

மண் வாசனை என்றால்
என்னவென்று இவனிடம் கேட்டுப் பார்.
மனம் திறந்து மணமாக பேசுவான்!

தமிழ் நாட்டின் விழாக்கள் 
இவன் அறைத் தொலைக்காட்சியில்  
தெளிவாகத்தான் தெரிகிறது!

கைபேசியின் அலைகளுக்குள் 
இவன் சொந்தங்களின் குரல்கள்
முகம் காட்டி மறைகின்றன!

கடல் தாண்டி இருப்பதால் 
இவன் சிந்தும் வேதனைக் கண்ணீர் 
இந்திய எல்லையைக் கூட
தொடுவதில்லை.

சொர்க்கமே என்றாலும் 
அது நம் ஊரைப் போல் வருமா
பாடலை பல முறை கேட்டிருப்பான்.
பரவசம் அடைந்திருப்பான்.
பாட்டு முடியும் வரை 
பகல் கனவும் கண்டிருப்பான்!

வியர்வைத் துளியாய் மாறிய 
தினாரும் ரியாலும்
இந்திய ரூபாயாக மாறும் போது
மணம் வீசத்தான் செய்கிறது.

தோற்றுப்போன மல்லிகை  மணம் 
துயரம் தாங்கி 
ஒற்றை காலில்
மௌனம் சாதிக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை
துணைக் கண்டமாக
இவன் தங்கும் அறை.
கடல் நாடு தாண்டி வாழ்ந்தாலும்
வெளி நாடு வாழ் "இந்தியனாக".






இது கலியுகக் காதல்......


Kaliyukam
Kaliyuka kaathal
உண்மை அன்பைப் 
புரிந்து கொள்ளாதக் காதல்
சதைத் தின்னும் 
கழுகிடம் மாட்டி கொள்ளும்.
இது கலியுகக் காதல்.

காமத்துப் பாலில் 
இல்லாதக் காமங்கள் கூட
கலியுகக் காதல் 
கற்றுக் கொடுக்கும்.

நாணலைத் தேடும் 
காதலை விட 
அறைகளைத் தேடும் 
கலியுகக் காதல் அதிகம்.

கலியுகக் காதலின் 
உறைவிடம் இருள்.
ஏனோ தெரியவில்லை.
கலியுகக் காதலுக்கு 
வெளிச்சமே பிடிக்கவில்லை!

காதல் மயக்கம் மாறிப் போய்
காம மயக்கம் ஆனது.
இது கலியுகக் காதலின் அடையாளம்.

காதல் ஓர் உண்மையான அன்பு!
காதல் புனிதமானது!
உண்மை காதல் 
கண்களால் பேசும்! 
உணர்வுகளால் உறவாடும்!
நாணத்தால் விளையாடும்!

காதலைக் களங்கப்படுத்த வேண்டாம்!
கண்ட கண்ட இடங்களில் 
காமத்தை வெளிப்படுத்தி 
தெரு நாயாய் மாற வேண்டாம்!

தெய்வீகக் காதலின் 
தவறான இலக்கணம்
கலியுகக் (காமக்) காதல்!




முற்றுப் புள்ளி......


point
Muttrup pulli

மதம் கொண்ட காம கொடூரர்கள்
மலராத மொட்டுக்களையும் 
பிய்த்து எறிந்தனவே!

பயிரை காக்க வேண்டிய வேலி கூட
சில நேரம் பயிரை மேய்ந்து விட்டு 
சீரழிக்கவும் செய்திடுகிறது.

சட்டம் எனும் அதிகார பேனா 
பாலியல் பலாத்காரம் எனும் 
வன்கொடுமைக்கு முற்றுப் புள்ளி 
வைக்க மறந்தது போலும்.

என் பாரத தாயே!
உன் விழியோரம் மை தேடி 
முற்றுப் புள்ளி வைத்து விடு!