ஏப்ரல் 2013

பெண்மை என்ற பெயர்.........


பெண்மை மென்மேலும் 
பெருமை அடைகிறது.
தாய்மை அடையும் பொழுது.

ஓரப் பார்வை........


Paarvai
Oorap paarvai

எந்த அகராதியில் 
தேடியும் கிடைக்காத அர்த்தம் அது.
ஒரே ஒரு ஓரப் பார்வை 
ஓராயிரம் பதிலைச் சொல்கிறது.

அதோ ! 
திரும்பி பார்த்து விட்டுச் செல்லும் 
என் காதலி 
என்னிடம் விட்டுச் சென்றது!

நிலவு...



அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது
அந்த எழுதப்படாத   வெள்ளைக் காகிதம்
தலைப்பு மட்டும் கொடுத்து விட்டார்கள் 
நிலவு என்று.

தமிழீழம்....

EElam
Tamil eelam

கற்பனையின் அன்னையாம் 
கவிதை தலைக் குனிய 
எனது எழுத்தில்
உண்மை வரிகள் வெளிப்படுகிறது.
கற்பனைக்கு வேலை இல்லை
தமிழீழத்தை  நினைத்து
கவிதை எழுதும் பொழுது.

இது எங்கள் சென்னை...

Chennai
Enkal Chennai

காற்றில் பறக்க விட்ட விதிகள்
பேருந்துப் புகையோடு பறந்த
சிகரெட் புகை 
இது எங்கள் சென்னை.

அலுவலகத்தை நோக்கி 
ஊதியத்தை எதிர்பார்த்து 
பழுதடைந்த பேருந்தில் 
எங்கள் பயணம்.
இது எங்கள் சென்னை.

சென்னைக்கே உரித்தான 
கெட்ட வார்த்தை அது
இது வாய்மொழி இலக்கியமா?
இல்லை செவிவழி இலக்கியமா?
சந்தோசம் கோபம் 
இந்த இரண்டின் முழக்கம் அது!
இது எங்கள் சென்னை.

மஞ்சள் பை அது 
மாடிகள் பல கட்டும்
உழைப்புக்கு உயர்வு
இது எங்கள் சென்னை.

மகிழூந்து வைத்து 
சுட்டெரிக்கும் வெயிலை 
மேலும் சூடாக்குவோம்.
இது எங்கள் சென்னை!

பாதங்கள் இரண்டும் 
சாலையில் பதியாமல் 
இரு சக்கர வாகனத்தில்
நான் வீடு சென்றால்
பெரிய சாதனை.
வாகன நெரிசல்
எங்கள் சாலையின் தனித்துவம்.
இது எங்கள் சென்னை!

அகத்தின் அழகு 
முகத்தில் தெரியுமாம்.
எங்கள் சென்னையின் அழகு 
கூவம் ஆற்றில் தெரியும்.
இது எங்கள் சென்னை!

அழகான மெரினா மணல் அது 
உருண்டாலும்
புரண்டாலும் 
அழுக்கு ஒட்டாது.
காதல் பெயரைச் சொல்லி 
அழுக்கு இதயங்கள் 
அதன் மேல் அமர்ந்து இருக்கும்.
சுற்றுலா வந்த கிராமத்துப் பறவை
அதிசயமாய் பார்க்கும்.
இது எங்கள் சென்னை!

நிறைகள் சில 
குறைகள் பல
இருந்தாலும் கூறிக் கொள்வோம்.
இது எங்கள் சிங்காரச் சென்னை!
சிங்காரச் சென்னை
உங்களை அன்புடன் வரவேற்கிறது!





காகிதத்தைச் சேமிப்போம்!....


Kaakitham
Kaakitham
பணத்தை வெளியேத் தள்ளிய 
தானியங்கி காசாளும் இயந்திரம் 
என்னிடம் சொன்னது
காகிதத்தைச்  சேமிப்போம்!

வீழ்ந்து விடுவதில்லை..

Veelnthu
Veelnthu Viduvathillai
விழுந்துவிட்ட என் காதல்
வீழ்ந்து விடுவதில்லை.
விட்டுக் கொடுத்துப் போகும்
என் காதலியால்!

அசை போடும் உன் நினைவுகள்..........


Ninaivukal
Ninaivukal
அசை போடும் உன் நினைவுகள் 
இன்று வரை ஜீரணம் ஆகவில்லை
ஆறடி குழியில் சேர்ந்த பின்னும்.

தாய்மை...


Thaaimai
Thaaimai


ஆண் மகனும் 
தாய்மை அடைகிறான்.
அவன் நட்ட விதைகள்
மண்ணைத் துளைத்து
வெளி வரும் பொழுது!

கோடை கால பறவை


Paravai
Paravai kavithai

நீர் தேடி அலையும்
பறவையின் மனக் குமுறல் இதோ...

வீதி  உலா நானும் வருகிறேன்

வானின் வழியாக
தாகம் தணிக்க
நீர் தேடி அலைகிறேன்...
கானல் நீரைக் கண்டு
ஏமாற்றம் அடைகிறேன்.

வீதி  உலா நானும் வருகிறேன்...

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
பசுமை தெரியவில்லை.
பண முதலைகளின்
நில அளவுக் கல்.
சாரை சாரையாய்.

வீதி  உலா நானும் வருகிறேன்...

பறி போன விளை நிலம் அது.
வில்லங்கச் சான்றிதழ் கேட்டு
வீதியில் போராடுகிறான்
விவசாயி ஒருவன்.
நேற்று வரை
என் தாகம் தணித்த
கடவுள் அவன்.

வீதி  உலா நானும் வருகிறேன்...

இதயத் துடிப்பு அதிகமாக
இளைப்பார இடம் தேடுகிறேன்.
புல்வெளி கூட இல்லாத இடத்தில்
மரங்களை நான் எங்கே தேடுவது ?

வீதி  உலா நானும் வருகிறேன்...

எனது சிறகுகள்
வலிக்க மட்டுமா செய்கிறது
கனக்கவும் செய்கிறது.
இருந்தாலும் தொடர்கிறேன்
தாகம் தணிக்கும் நீர் தேடி.

வீதி  உலா நானும் வருகிறேன்...

உடலில் உயிர் இருக்க வேண்டி
உங்கள் வீட்டு மாடி தேடி வருகிறேன்..
குவளையில் தண்ணீர் வைத்திடு தாயே!

எனது வீதி உலாவை
இனிதாய் நிறைவு செய் தாயே!!!.





காலண்டர்...

Calendar kavithai
Calendar kavithai

காலம் என்னும் காலண்டர்
தினமும் ஒரு கிழமையை 
உதிர்க்கிறது.
காகிதப் பூக்கள் என்பதால் 
வண்டுகளும் சீண்டவில்லை.
தென்றலும் வருடவில்லை.

மானுடனின் வியாபாரப் புத்தி 
உன்னையும் விட்டு வைக்கவில்லை.
விளம்பரத்தை உன்னில் பதித்தான்.
விளம்பரம் மட்டும் தானா?
சாதி, மதம் , கட்சி ........

உழைப்பும் 
உணர்வுகளும் 
சிந்தனைகளும் 
தீர்மானிக்கதக் காலத்தை 
ராசி பலன் சொல்லிற்று.
கன்னி ராசிக்கு 
இன்று உற்சாகமாம் !

மூடப்பட வேண்டிய மூடநம்பிக்கைகள் 
மூடப்படாமல் இருக்கிறது உன்னுள்.
எமகண்டம் முதல் சூலம் வரை.
நீ என்ன செய்வாய் ?
சாஸ்திரங்கள் உன் தோழன் ஆயிற்றே!
சூலம் - கிழக்கு ....
உனக்கு மட்டும் 
இது விதி விலக்கு.

கடிகாரம் என்ற பெயரில் 
உன் தமையனும் அங்கே
தொங்க விடப்பட்டிருக்கிறான்.

சுவரில் தொங்கிக் கொண்டே 
மானுடர்களின் வாழ்க்கையை 
நொடிக் கணக்கிலும் 
நாள் கணக்கிலும்
ஆட்டுவிப்பது 
உங்களுக்குக் கை வந்த கலை.

அமைதியாக மின் விசிறி காற்றில் 
முனு முனுக்கும் நீ
என் காதலியின் 
முனு முனுக்குக்கு இணைதான்.

காலத்தை உணர்த்துபவன் 
என்பதால்தான் என்னவோ
உனக்கு மட்டும் விதி விலக்கு.
காலம் தாழ்த்திக்
காலையில் கிழிக்கப்படுகிறாய்.

இழந்த காலமும் 
இழந்த உயிரும் 
திரும்ப வராது
வருடத்தின் முதல் இதழிலும் 
காலம் பொன் போன்றது 
கடமை கண் போன்றது
உன் கடைசி இதழிலும் 
எழுதப்பட வேண்டிய 
மானுட வாசகங்கள்!





இழப்பீடு ஹைக்கூ


Ilapeedu
Ilappeedu

இறந்த காதலும் 
கேட்கிறது இழப்பீடாக
ஆறடி நிலம்.

இதயம் வலிக்கிறது...


Vali
Ithayam valikkirathu

எனது பேனாவில் 
மை மட்டும்தான்
சுரந்தது.
கவிதை எழுத 
என் கற்பனை அல்லவா
கசிந்தது.

இதயம் வலிக்கிறது.
இணையத்தில் என் கவிதை 
திருடப்படும் பொழுது!

எவர் முன்பும் 
நான் மண்டியிடவில்லை!
கற்பனையைத் தொழுகிறேன்.  
அருளை அவன் புரிகிறான் 
கவிதையாக!

இதயம் வலிக்கிறது.
இணையத்தில் என் கவிதை 
திருடப்படும் பொழுது!

களவாடப்பட்ட கவிதைக் கண்டு 
கண்ணீர் சுரந்தது
கண்களில் அல்ல!
இதயத்தில்.....

இரக்கம் கொண்ட இதயம் இது!!!

இதயம் வலிக்கிறது.
இணையத்தில் என் கவிதை 
திருடப்படும் பொழுது!




விடா முயற்சி


muyarchi
Vidaa muyrachi

இளைஞனே !

இயலாது என்ற
வார்த்தையைக் கூறி 
உன் விழிகளை நீயே 
மூடிக் கொள்ளாதே!

தமிழ் அகராதியில் மட்டும்
இருக்க வேண்டிய வார்த்தை அது!
உன் அகராதியில் அல்ல!

இயலும் என்ற 
வார்த்தையைக் கூறி 
உன் விழிகளை 
நீயே திறந்து கொள்.

விழிகளை விரைவாய் 
திறந்துப் பார்த்து 
வெற்றி எனும் பாதையில் 
பயணத்தைத் தொடர்!

இனிதாய்த்  தொடர்ந்த 
இன்பப்  பயணத்தின் இடையில் 
தோல்வி எனும் 
பாதை வரலாம்!

தடைக் கற்களும் 
உன்னால் செதுக்கப்பட வேண்டும்
வெற்றிப் படிக்கட்டுகளாக!

எப்படியும் வாழலாம் 
என்றில்லாமல் 
இப்படித்தான் வாழ வேண்டும்.
உன் மனதில்
நிறுத்தப்பட வேண்டிய வாசகங்கள்!

லட்சியம் என்னும் எண்ணத்தை
உன்னுள் வை.
அலட்சியம் செய்யாமல் 
அதை நினை.
அரை நொடி கூட
வீணாக்க வேண்டாம்.

உன் முயற்சியின் விளைவு
இறுதியில் மாறும்
இமாலய வெற்றியாக!

விடா முயற்சியுடன் 
முயற்சி செய்தால் 
விடிந்த பிறகு 
உன் வானில் ஜொலிக்கும் 
நட்சத்திரமே நீதான்...

விடா முயற்சிக்கான மற்றுமொரு கவிதை
http://nellaibaskar.blogspot.com/2014/01/blog-post_5.html





இது கலியுகக் காதல்......


Kaliyukam
Kaliyuka kaathal
உண்மை அன்பைப் 
புரிந்து கொள்ளாதக் காதல்
சதைத் தின்னும் 
கழுகிடம் மாட்டி கொள்ளும்.
இது கலியுகக் காதல்.

காமத்துப் பாலில் 
இல்லாதக் காமங்கள் கூட
கலியுகக் காதல் 
கற்றுக் கொடுக்கும்.

நாணலைத் தேடும் 
காதலை விட 
அறைகளைத் தேடும் 
கலியுகக் காதல் அதிகம்.

கலியுகக் காதலின் 
உறைவிடம் இருள்.
ஏனோ தெரியவில்லை.
கலியுகக் காதலுக்கு 
வெளிச்சமே பிடிக்கவில்லை!

காதல் மயக்கம் மாறிப் போய்
காம மயக்கம் ஆனது.
இது கலியுகக் காதலின் அடையாளம்.

காதல் ஓர் உண்மையான அன்பு!
காதல் புனிதமானது!
உண்மை காதல் 
கண்களால் பேசும்! 
உணர்வுகளால் உறவாடும்!
நாணத்தால் விளையாடும்!

காதலைக் களங்கப்படுத்த வேண்டாம்!
கண்ட கண்ட இடங்களில் 
காமத்தை வெளிப்படுத்தி 
தெரு நாயாய் மாற வேண்டாம்!

தெய்வீகக் காதலின் 
தவறான இலக்கணம்
கலியுகக் (காமக்) காதல்!