இசைகள் சுகமாய் செய்கிறது
கணக்கில்லா இம்சைகளை !
பாதங்கள் இல்லா ராகங்கள்
பறந்து வருவதில் ஆச்சர்யமில்லை!
ஒற்றை சிறகும் இல்லாமல்
பறந்து வருவதுதான் ஆச்சர்யம் !
மனித குயில்கள் இசை அலையில்
மயங்காமல் தவழ்ந்து வரும்
மனித செவிகள் அதில் மயங்கும்
விழி திறந்து மயங்குதல் ஆச்சர்யம்!
வாழை மடல் ஏறிய பாதங்கள்
வழுக்கி விழுதல் இயல்பு நிலை
இதய குழலில் படிந்த இசைகள்
தாலாட்டு பாடுவது ஆச்சர்யம்!
சொல்லாத காதல் எல்லாம்
இரவில் சுக இம்சைகள் புரியும்
மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்
சுக இம்சை புரிவது ஆச்சர்யம்!
இரவுகள் நீடித்தால் பல காதல்கள்
தன முழுமை நிலை அடைந்து விடும்
இரவு நேரத்து இசை கேட்டும் - நாம் எல்லோரும்
கவிஞன் ஆகாதது ஆச்சர்யமே!
பாதங்கள் இல்லா ராகங்கள்
பறந்து வருவதில் ஆச்சர்யமில்லை!
ஒற்றை சிறகும் இல்லாமல்
பறந்து வருவதுதான் ஆச்சர்யம் !
மனித குயில்கள் இசை அலையில்
மயங்காமல் தவழ்ந்து வரும்
மனித செவிகள் அதில் மயங்கும்
விழி திறந்து மயங்குதல் ஆச்சர்யம்!
வாழை மடல் ஏறிய பாதங்கள்
வழுக்கி விழுதல் இயல்பு நிலை
இதய குழலில் படிந்த இசைகள்
தாலாட்டு பாடுவது ஆச்சர்யம்!
சொல்லாத காதல் எல்லாம்
இரவில் சுக இம்சைகள் புரியும்
மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்
சுக இம்சை புரிவது ஆச்சர்யம்!
இரவுகள் நீடித்தால் பல காதல்கள்
தன முழுமை நிலை அடைந்து விடும்
இரவு நேரத்து இசை கேட்டும் - நாம் எல்லோரும்
கவிஞன் ஆகாதது ஆச்சர்யமே!