இவள் பூலாக தேவதை | pooloka thevathai

இவள் பூலாக தேவதை | pooloka thevathai

Penmai
Penmai Kavithai


கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய் 
தீர விசாரிப்பதே  மெய்.

இடப்பக்க மூளை பல முறை 
இதயத்திற்கு உணர்த்தியது
விண்ணுலக தேவதையாக இருக்கலாம்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

எனது கவிதையின் கருவாக
கன்னி உனது அழகுகள் 
தேவதையின் அழகை போல் 
அமைந்ததால் - கன்னியே  
எனது கவிதை கூட
உன்னை சந்தேகப்பட்டது.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

எனது உயிர் நண்பனாம்
என் பேனாவின் மை 
கவிதையின் வழியாக 
உன் அழகோடு கலந்ததால்
அவனும் உன்னை சந்தேகிக்கிறான்.
இவள் பூலாக கன்னி அல்ல என்று!

இறுதியாக என் மனமும் 
ஆறுதல் அடைந்தது.
உன் கன்னத்தை கிள்ளி
உண்மையை அறிந்ததினால்.
இவள் பூலோக கன்னி அல்ல என்று!
இவள் பூலாக தேவதை!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக