இயற்கையின் புதல்வனே - நம்மாழ்வார்

இயற்கையின் புதல்வனே - நம்மாழ்வார்

nammalvaar

nammaalvaar

இயற்கையின் வேதனை 
இயல்பாக இல்லாமல் 
செயற்கையினால் வந்த 
செயற்கை என நீ அறிந்து
செயற்கையை கருவறுத்த
இயற்கையின் புதல்வனே !

இயற்கையை சிரிக்க வைத்து 
சிரிப்பின் சிதறல்களாய் - ஆங்காங்கே
இயற்கை விவசாயம் 
நலம் பெறச் செய்த நல்லவரே!

இயற்கை உரங்களின்
தவறான இலக்கணமாம்
செயற்கை உரங்களை 
வீழ்த்தச் செய்தவரே!

இயற்கையோடு இயற்கையாய் 
இரண்டற நீ கலந்ததால் 
உன் இயற்கை ஆர்வம் 
இறைவனும் அறிந்து
அழைத்து விட்டான் உன்னை!

நீ இல்லா இயற்கை 
இனி இடர் கண்டு விட
எங்கு சென்று தேடுவோம் உன்னை!

உங்களது ஆன்மா
சாந்தி அடைய 
இறைவனை வேண்டுகிறேன்!

https://www.facebook.com/pages/Dr-G-Nammalvar-Organic-Agriculturist/197789246939878






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக