தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
கவிதைத் தேடல் | Searching Poetry
விழிகளின் சிந்தனை | Kan sinthanai
நேர்மையாய் வாழ்ந்த நாட்கள் | Nermaiyaai vaalntha naatkal
![]() |
Honesty |
சில மாதம்
கை கால் அசைத்து
நேர்மையாகவும்
நிம்மதியாகவும்
நானும் இருந்தேன்
யோகாவும் தியானமும்
தரவில்லை
அந்த நிம்மதியை!
வழிபட்ட கடவுளும்
தரவில்லை
அந்த நிம்மதியை!
இமை மூடிய கருவிழியின்
கனவும் தரவில்லை
அந்த நிம்மதியை!
சம்பாதித்த காசு பணம்
தரவில்லை
அந்த நிம்மதியை!
மண்ணும் பொன்னும்
தரவில்லை
அந்த நிம்மதியை!
நட்பும் காதலும் கூட
தரவில்லை
அந்த நிம்மதியை!
இருந்தாலும் தந்து விட்டது
அந்த இருள் கொண்ட
கருவறை!
கை கால் அசைத்து
நேர்மையாகவும்
நிம்மதியாகவும்
நானும் இருந்தேன்
யோகாவும் தியானமும்
தரவில்லை
அந்த நிம்மதியை!
வழிபட்ட கடவுளும்
தரவில்லை
அந்த நிம்மதியை!
இமை மூடிய கருவிழியின்
கனவும் தரவில்லை
அந்த நிம்மதியை!
சம்பாதித்த காசு பணம்
தரவில்லை
அந்த நிம்மதியை!
மண்ணும் பொன்னும்
தரவில்லை
அந்த நிம்மதியை!
நட்பும் காதலும் கூட
தரவில்லை
அந்த நிம்மதியை!
இருந்தாலும் தந்து விட்டது
அந்த இருள் கொண்ட
கருவறை!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் | Pirantha naal vaalthukkal
![]() |
Pirantha Naal vaalthu kavithai |
சிறுவயது பெரிய கனவுகள்
சீராக செம்மையாக வளர வேண்டும்!
வந்து விடும் சோதனைகள்
வாழ்த்து சொல்லும் சாதனையாக வேண்டும்!
இதழ்கள் சிரித்து வாழ
இதயம் இனிமை காண வேண்டும்!
அகவை ஒன்று கூட
அளவற்ற்ற மகிழ்ச்சி காண வேண்டும்!
விதியையும் வீதியில் நிறுத்துபவனாக
வீரநடை நீ போட வேண்டும்!
உதிர்த்துவிட்ட உன் சிரிப்பில்
உதிராத சொந்தமாக நான் வேண்டும்!
பிறை கண்ட நிலா நீ
பிரியாத வளர்பிறை உனக்கு வேண்டும்!
நல்வாழ்வு நீ வாழ்ந்து
நலம் நாளும் பெற வேண்டும்!
கவிதை கண்ட வரிகள்
கற்பனை அல்லாத மெய்யாக மாற
கடவுளை வேண்டுகிறேன்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இது போன்ற மற்றுமொரு பிறந்த நாள் வாழ்த்து கவிதை இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2013/10/blog-post_19.html
இது போன்ற மற்றுமொரு பிறந்த நாள் வாழ்த்து கவிதை இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2013/10/blog-post_19.html
குழந்தைகள் தினம் | Childrens Day
புயல் வேக ஓட்டம் தினமும்!
சிரிப்பின் சிதறல்கள்
சிந்தாமல் இல்லை தினமும்!
செவிச்செல்வம் தேடி
சென்ற நடைபயணம் தினமும்!
புத்தகப் பையின் சுமைகள்
புதுவித சுகமாய் தினமும்!
காகித பணம் காணாமல்
காலணா கிடைத்தது தினமும்!
குளம் கிணறு என்று
குளித்த நாட்கள் தினமும்!
விளையாட்டாய் ஒரு விஞ்ஞானம்
வீதியில் காந்தங்களோடு தினமும்!
மிதிவண்டியில் அதிவேக பயணம்
மிதிக்காமல் இல்லை தினமும்!
அன்னை மடியில்
ஆர்ப்பரிக்கும் குழந்தை போல
அளவற்ற்ற மகிழ்ச்சி கண்ட
அந்த குழந்தை நாட்கள்
அழைப்பு விடுத்தால் வருமா?
நீ தேடிய நிம்ம்தி | Nee thediya nimmathi
![]() |
Tharkolai Suicide |
சமீபத்திய ஒரு தற்கொலையை மையமாக வைத்து இந்த கவிதை எழுதி உள்ளேன். இதில் சொல்ல வருவது என்னவென்றால், தற்கொலை செய்தவரை கிண்டல் செய்ய வேண்டாம். சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், அவர்கள் நிம்மதி தேடி இந்த முடிவை எடுத்து இருப்பார்கள்.
விண்ணைத் தொடும்
விளிம்பில் இருந்து
புவி நோக்கி நீ குதித்து
விண் நோக்கி நீ சென்றாய்!
மன வேதனைகள்
உன்னை தூரத்த
தனிமையும் அதற்கு
தோள் சேர்த்து
கை கோர்க்க
காலன் அவன்
கணித்து விட்டான்!
உடல் விட்ட உயிரை
வழிந்தோடும் குருதி சொல்ல
படிந்து விட்ட குருதி
பல பேருக்கு
காட்சி பொருளாய் தெரிய
படித்தவன் எவனுக்கும்
புரியவில்லை நீ பட்ட துயரம்!
கட்டிடத்தின் உயரத்தை
கருவிழி கொண்டு அளந்தவன்
உன் உள்மன துயரத்தை
அளக்க வில்லை!
மிஞ்சியது என்னவோ
உன் குடும்ப வேதனையும்
படித்தவனின் கிண்டலும்தான்!
அகல் விளக்கு ஏற்றி அழுதது
உன் அன்னை மட்டும் அல்ல
நானும் தான்!
உன் ஆன்மா நிம்மதி கொள்ள
நிரந்தரமான சாந்தி அடைய
சொர்க்கம் சென்று விட
இறைவனை வேண்டுகிறேன்!
இறந்த பிறகாவது கிடைக்கவிட்டும்
நீ தேடிய நிம்ம்தி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)