முற்றுப் புள்ளி......

முற்றுப் புள்ளி......


point
Muttrup pulli

மதம் கொண்ட காம கொடூரர்கள்
மலராத மொட்டுக்களையும் 
பிய்த்து எறிந்தனவே!

பயிரை காக்க வேண்டிய வேலி கூட
சில நேரம் பயிரை மேய்ந்து விட்டு 
சீரழிக்கவும் செய்திடுகிறது.

சட்டம் எனும் அதிகார பேனா 
பாலியல் பலாத்காரம் எனும் 
வன்கொடுமைக்கு முற்றுப் புள்ளி 
வைக்க மறந்தது போலும்.

என் பாரத தாயே!
உன் விழியோரம் மை தேடி 
முற்றுப் புள்ளி வைத்து விடு!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக