தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
அன்னையர் தின கவிதை
![]() |
அன்னையர் தின கவிதை |
உலக அகராதிகள் பாசம் என்றால்
உன் பெயரை முதலில் பொழியும்
உயிரைப் பிரித்து இன்னொரு உயிராய்
உலகிற்கும் உறவிற்கும் கை கொடுப்பாய்!
உனக்கென தனியாய் ஓர் சிந்தனை
உன் மனதை ஆட் கொண்டிருக்காது
உன் உறவைத் தவிர ஓர் சிந்தனை
உன் மனதில் துளியும் இருக்காது!
உன் முன்னுரையும் முடிவுரையும்
உறுதியாய் சொல்லலாம் உனக்கானதல்ல
உறுதியாய் சொல்லும் அனைத்தும்
உனது உறவை உறுதியாய் நிலை நிறுத்தும்!
நல்வார்த்தை நிதமும் நீ தருவாய்
உன் வேதனை ஏனோ தினம் மறப்பாய்
என் உள்ளம் மெலிய நிலை நேர்ந்தால்
உன் உயிரையும் விட்டு மீட்டிடுவாய்!
பத்து மாதம் அல்ல
முடிவிலி சுமையாய் இருந்தாலும்
சுமந்து இருப்பாய்!
முகம் காணாதிருந்தாலும்
முகம் சுளிக்காமல்
முதுகு வலி தாங்கிக் கொண்டே
முடிவிலி எண்ணிக்கையில்
முத்தங்கள் கொடுத்து இருப்பாய்!
அன்பை அளவிட நினைத்தேன்
எல்லை அதற்கு இல்லை என்றெண்ணி
கை விடும் நினைப்பை விதைத்தேன்
விதைத்த நினைப்பு மாறி முளையிடவே
அறிந்து கொன்டேன் - அன்னை இவளே
அன்பின் முடிவிலி இந்த அகிலத்தில்!
முதல் கவிதை எழுத முயற்சித்தால்
உன் அன்னையை நினைத்து விடு
கவிதை கடலென ஆர்ப்பரிக்கும்.
என்ன ஒரு ஆச்சரியம் என்றால்
கவிதையில் கற்பனை கலப்படம்
துளி அளவும் கலந்திருக்காது!
அன்னையின் முன்னே
சொல்லக் கூடாத உண்மை
எனக்கு பசிக்குது அம்மா!
சொல்லக் கூடாத பொய்
நான் சாப்பிட்டேன் அம்மா!
மீறியும் சொல்லி பாருங்கள்
அன்னையின் அர்த்தம் அறீவீர்கள்!
இதழ் கடித்து விழி உருட்டி
மிரட்டுவதில் இவள் கெட்டிக்காரி
என் இதழ் மட்டும் அல்ல
இதயமும் சேர்ந்தே சிரிக்கிறது!
தினமும் இதழும் சிரிக்கிறது
இதயமும் சிரிக்கிறது!
வான் உச்சிக்கு வந்த சூரியன்
கதிர் மூலம் என்ன சொல்லியதோ
தெரியவில்லை
என் பிள்ளையை காணவில்லை
புலம்பியபடி ஒரு தேடுதல் வேட்டை!
தெரு வீதிகழும் சந்தும்
இவள் பாசம் அறியும்!
மணி அடித்தால் சோறு
இது அம்மாவின் பாச ஜெயில்!
பல நேரங்ககளில்
மணி அடிக்காமழும் சோறு!
பசி என்னும் இரண்டெழுத்தை மறந்தேன்
பசித்து உண்ணுதலையும் மறந்தேன் !
இவளுக்கான உணவை
இரவுகள் எடுத்து வைக்கிறது
எஞ்சிய உணவுகள்
எல்லை அது இல்லை | pookkal kavithai --
மொட்டுகளுக்கு இனிக்கிறது
இதழுக்கு வலிக்கிறது!
முனகல்களில் சுக வலி அறிந்து
முறித்து விட முயற்சிக்க
கரங்களோ தலை கோதுகிறது!
இடம் மாறும் இதழுக்கு
இடைவெளி சிறு தாண்டி
இன்னும் ஓர் மொட்டு மலர்கிறது!
இடம் மாறும் இதழுக்கு
இடைவெளி சிறு தாண்டி
இன்னும் ஓர் மொட்டு மலர்கிறது!
உணர்ச்சி உள்ள பூவிது - ஆதலால்
கசங்கல்களை புறக்கணிக்கிறது
கனவுகள் நினைவு ஆகுவதால்!
பூக்களில் இது
சற்று வித்தியாசம்தான்
பறித்திடவே ஏங்குகிறது!
மெலியாத இயல்பான சிறிய இடையை
விரல் நுனி விழி கொண்டு
உற்று நோக்கி தழுவுகிறது!
வியர்வை ஈரத்தில் இதழ் நழுவ
இன்னும் சுக தேடுதல்
அவள் ஒரு தொடர் கதையாய்!
பூக்களின் நுனியில் மொட்டுக்கள்
பூமேனியில் இது அதிசயம் - ஆதலால்
எல்லை தவுறுதல் சாத்தியம்!
எல்லை அது இல்லை!...!..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)