தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
கண்ணீர் முத்தங்கள் | kanner mutham --
கர்ப்பம் கவிதை | Karppam kavithai
பூ மொட்டாய் மழலை உறவொன்று
என் இனம் தழைக்க வந்ததின்று!
வயிற்றுத் தசை இனி பெரிதாகும்
மழலை ஒன்று அங்கே உதயமாகும்!
இரவும் பகலும் இனி கவிதையாகும்
வளரும் மழலையால் நாளும் இனிமையாகும்!
சுரக்கும் உமிழ் நீர் இனி வாந்தியாகும்
சுவை தந்த உணவுகள் எதிரியாகும்!
இவள் மூச்சு இனி தாய்மை பேசும்
இவன் மூச்சு இனி தந்தை சொல்லும்!
தமிழுக்கு புனிதம் அம்மா எழுத்தாம்
வாழ்வில் இனி இது இவள் உயிரெழுத்தாம்!
கடைவீதி பொம்மை மழலையாய் மின்னும்
பத்து மாதங்கள் இனி பல வருடமாய் நகரும்!
எட்டி எட்டி மழலை பாதம் உதைக்குமாம்
ஏங்கி நாம் இருக்க மீண்டும் உதைக்குமாம்!
ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தோம்
இனி மூவுடல் ஓருயிராய் வாழ்வோம்!
நியுட்டன் காதல் விதி | newton love poet
சுயநல இதயம் | Suyanala Ithayam
உன் பாதம் பதித்த என் இல்லம்
கங்கை நதி துளிகள் காண துடிக்குது
செய்த பாவம் தனை தொலைக்க நினைக்குது!
உன் காமம் கண்ட தினசரி காகித நாட்கள்
மண்ணோடு மண்ணாக மக்கி போகாது
மனதை விட்டு நீங்கியும் தொலையாது !
வாலிப வயது உந்துதல் காம உணர்ச்சியால்
காமத்தை காதலாய் பயன்படுத்தினாய்
காதலில் காமத்தை கலப்படமாக்கினாய்!
உனக்காகவே உயிர் சுமந்த என்னிடம்
பணமும் பொருளையும் பரிசாக்கிக் கொண்டாய்!
என் உயிரை மட்டும் நேசிக்காமல் விட்டு விட்டாய்!
என் இதழ் உதிர்த்த காதல் வார்த்தைகள்
உன் இதயம் சென்று அடையவில்லை
உன் இதயம் கல்லென்று நான் அறியவுமில்லை!
நான் இல்லா உன் சுயநல தனிமையில்
உன் மூளைக்கு வேலை கொடுத்திருப்பாய்
வார விடுமுறை திட்டம் தீட்டி இருப்பாய்!
மல்லிகை மனமாய் ரோஜா இதழ்களாய்
மண வாழ்கையில் வசந்தம் வேண்டினேன்
வாழும் வயதில் புலம்பியவன் ஆனேன்!
மனது என்று உன்னிடம் இருந்திருந்தால்
என் உண்மை காதலை அறிந்திருப்பாய்
காதல் புனிதமென உணர்ந்திருப்பாய்!
காதல் இதயம் அல்லா
சுயநல இதயம் கொண்டவள் நீ!
ஸ்டிக்கர் பொட்டு | Stikker pottu
அலுவலக பிரிவுவிடை | Farewell kavithai
Office Farewell |
சாலையோரம் நான் பயணிக்கையில்
காற்றைக் கிழித்து கைவீசி நடக்கையிலே
நினைவுகளால் நீ என் விரல் பிடித்து நடைபோடுவாய்!
ஆர்பரிக்கும் அகம் அது துடித்ததால்
என் இதழ் அது வேண்டுகோள் விடுக்காமல்
நிழற்படம் நீ அனுப்பினாய்!
இரவு நேரத்து படுக்கை அறையில்
மேல் இமை கீழ் இமை தொடும் முன்
நினைவின் கனவுகளாய் வந்து விடுவாய்!
அகத்தாலும் தேகத்தாலும் அழகு நீயாதலால்
உயிர் பெற்று நிற்கிறது என் அலைபேசி!
என் அலைபேசிக்கு அழகு நீயாவாய்!
வானலை சுமது வரும் Whatspp வரிகளில்
ஒட்டிக் கொண்டது இளந்தளிர் தென்றல்கள்!
உன் Whatspp வரிகள் எனது கவிதைகளாய்!
நண்பர்களோடு அரட்டை அடிக்கையிலே
நகர்ந்து விடும் நொடி நிமிட முட்களிலே
உனது நினைவுகளே எனது காலமாய்!
அலுவலகம் பிரிவுவிடை நமக்கு தந்தாலும்
விடுமுறையே காணாத நமது நினைவுகள்
வரும் காலத்திலும் விழி திறந்து கவி எழுதட்டும்!
நீங்காத நினைவுகள் | neenkaatha ninaivukal
தொடரும் கவிதை | thodarum kavithai
மண வாழ்க்கை | Marriage life
காதல் நடை | Kaathal nadai
காதல் அறிமுகம் | Love introduction
அவள் விரல் தொட்ட முதல் முறை
என்னிலும் ஓர் கண்டு பிடிப்பு.
என்னிலும் மின்னோட்டம் உண்டு
நான் கண்ட புதிய அறிமுகம் நான்!
அழகான வீதி | Alakana veethi
மண்ணை முத்தமிட்ட மழைத்துளிகள்
சிறுதுளி பெருவெள்ளமாய் வழிந்தோட
மழலை பாதங்கள் அதில் விளையாட
விடி வெள்ளியாய் வீதியோ மிக அழகு!
என்னுள் பாதியானவளுக்கு | To my beloved one
பட்டுச் சேலை நீ உடுத்தி
பக்குவமாய் பாதங்கள் நகர்த்த
உன் தோழியரோடு சேர்ந்து
உன் நாணமும் தலைமை தாங்கும்!
நாணத்தால் அன்ன நடை நீ இட
காதோரம் எட்டா கொலுசொலி
உறைந்த வெள்ளை பனிகட்டியாய்
உன் பாத வெள்ளிக் கொலுசுகள்!
தலை சாய்த்த ஒற்றை நெற்கதிராய்
முகம் தாழ்த்தி நடை நீ இட
பூமிப் பந்தின் இதயம் அது
ரப்பர் பந்தாய் துள்ளல் கொள்ளும்!
ஆடி விடும் காதணிகள்
ஆடி காற்றையும் எதிர்க்கும்
அறிவியல் விசையையும் தகர்க்கும்
நடை இது அன்ன நடை!
காலணிகள் பாரம் உணராது
காதணிகள் ஆட்டம் கொள்ளாது
வளையல்கள் கோணம் மாறாது
கால் கொலுசுகள் ஓசை எழுப்பாது
அனைத்தும் இதயத்தின் கட்டுக்குள்!
இல்லை இல்லை! நாணத்தின் கட்டுக்குள்!!
மணமேடையில் உன் பாதம் பதித்து
மலர் மாலைகளுக்கு மணம் கொடுத்து
எனக்கு மட்டும் உன் மனம் கொடுத்து
மலர் மாலைகள் இட்டுக் கொள்வோம்!
அகம் கொடுத்து அருகில் அமர்வாய்
அரவணைக்க துடிக்கும் விரல்கள்
அன்று மட்டும் மவுன விரதம் கொண்டு
அய்யரின் மந்திரத்தில் மரியாதை கொள்ளும்!
நல் நேரம் நகர்கிறதென்று
கை கடிகாரம் சொல்லி விட
மூகூர்த்த நேரமோ அதை முத்தமிட
சிறகுகள் முளைத்து அக்கினி பறக்க
நாதஸ்வரங்களின் வாழ்த்து ஒலியில்
விரல்களில் தாலி பற்றி கழுத்தில் இட
என்னுள் பாதியாய் என் மனைவியாவாய்!
உதிரிப் பூ | Uthirip Poo
உனையே நினைத்து உருகி
உயிர் கொண்ட என் உடலில்
உயிரோட்டம் இன்றும் உள்ளதா
என் தலைவா நானறியேன்!
நிரந்தரமாய் என்னோடு வாழ
நினைவுகளை தினம் நகர்த்தி
நிதமும் அழும் விழியது
இயல்பாய் மாறுமா நானறியேன்!
உன்னோடு பழகிய நாட்கள்
ஊரார் பார்வையில் உருண்டோட
என்னோடு நகரவே இல்லாதிது
மறுஜென்மமும் தொடருமா நானறியேன்!
காதல்சுகம் கிடைத்து விட்டதென்று
கருங்கல்லை கடவுளாய் நினைத்து
கரம்குவித்து நன்றி செய்தேனே
கடவுள் இருக்கிறானா நானறியேன்!
இதயத் துடிப்பு நின்றதென்று
இறந்து நான் இடுகாடு சென்றாலும்
உன் நினைவால் துடிக்கும்
இதயத்துடிப்பை எவரறிவர் நானறியேன்!
ஒன்று மட்டும் நான் அறிவேன்
உன் தோளில் சாய ஆசை கண்டு
உனக்காய் பிறந்து உன்னை அடையா
மலர்ந்து உதிர்ந்த உதிரிப் பூ நான்!
கல்லூரி கவிதை | College kavithai
ஒற்றை புத்தகம் கையில் எடுத்து நடை போட
ஒரு வீரம் பிறக்கும் அடி மனதில்!
ஒட்டு மொத்த புத்தகமும் எடுத்து வர
ஒரு வித தயக்கம் பிறக்கும் மனதில்!
எதுவும் தெரியாமல் தேர்வறையில் அமர்ந்து
ஏதேதோ எழுதி விட்டு நாங்கள் வெளி வர
செமஸ்டர் வழக்கிற்கு தீர்ப்பு கிடைக்கும்
அடுத்த ஒரு சில மாதங்களில்!
மனம் சிறிதாக சோகம் காணும்
மதிப்பு இல்லாத எண்கள் மதிப்பெண்களால்!
அரியர் இல்லா மனிதன் அரை மனிதன்
சோகமே மாறும் கல்லூரி பழமொழியினால் !
வகுப்பறையின் இருக்கையில் பாதம் பதித்து
அங்கும் இங்குமாய் ஓடி விளையாடி
ஓய்வெடுத்து கடைசி இருக்கையில் அமர
கால் உடைந்து ஓய்வு எடுக்கும் முதல் இருக்கை!
தோள்மேல் கை போட்டு நாங்கள் வலம் வர
வழி விட்டு ஒதுங்கும் சோகங்கள்!
கூடி நின்று அரட்டை அடிக்கும் நேரங்கள்
வாடாத மல்லிகையாய் நட்பு அளித்த வரங்கள்
எரிபொருள் நிரப்பிய இரு சக்கர வாகனம்
எங்களது விளையாட்டுப் பொருள்!
நட்பைத் தவிர எந்த சொத்தும் இல்லை
எங்களது கல்லூரி வாழ்க்கையில்!
வெண் சோறு தனைக் கொட்டி குழி பறித்து
குழம்பு தனை அதில் ஊற்றி
உணவுக்கு உருண்டை உருவம் இட்டதில்லை
நாங்கள் எல்லோருமே சாப்பாடு ராமன்கள்!
ஓரறிவு மரங்கள் ஒற்றைக் கால் தவம் புரிய
ஆறறிவு காளைகள் ஐந்தறிவாய் மாறிவிட
மரக் கிளையில் மனிதக் குரங்காய் கல்லூரியில்
மட்டற்ற மகிழ்ச்சி நாங்கள் கண்டோம்!
மூன்று வருட காகித காலண்டர் நாட்கள்
குப்பை தொட்டி நோக்கி பயணம் முடிக்க
குட்பை சொல்ல கட்டாயம் ஏற்பட
விழியோர கண்ணீர் சிந்தி விடை பெற்றோம்!
பிறவிப் பயன் அடைந்து விட
கல்லூரி வாழ்க்கை பெற்றேனோ?
இமை மூடாமல் கண்ணீர் சிந்துகிறேன்
கல்லூரி வாயிலை கடந்து செல்கையிலே!
என் அருகே நீ இருந்தால் | En aruke nee irunthaal
வந்து போகும் உன் கனவுகள்
விடியலோடு விடை பெறாது
விடை பெறாத உன் நினைவுகள்
விழியின் ஓரமாய் தேங்காது!
உனக்கும் எனக்கும் தூதுவானாய்
தூதுவாக வந்த மூச்சுக் காற்று
வான் வெளியோடு கலவாது
நம் மனதோடு கலந்திருக்கும்!
வரமாய் வந்த உறவு நீயென
உலகறிய செய்திருப்பேன்!
உன்னில் மட்டும் நான் என்று
உன் உயிரோடு கலந்திருப்பேன்!
உன் குறிப்பறிந்து பணிவிடை
உனக்கு மட்டும் செய்திருப்பேன்
உன் உதடுகள் உத்தரவிடும் முன்
உன் முன்னே நின்றிருப்பேன்!
உன் கரம் தொட்டு வீதி உலா
தினமும் வந்திருப்பேன்!
உன் உள்ளங்கையில் காதல் ரேகையாய்
உன்னோடு இருந்திருப்பேன்!
விழிகள் ஏதும் இல்லாமல்
பூவிதழ் வருடும் காற்றாய்
உன் முகவரியது தெரியாமல்
உன் நினைவோடு வாழ்ந்திருக்க மாட்டேன்!
காதல் அது உயிரெழுத்துக்கள் அல்ல
கவலை கொண்டிருக்க மாட்டேன்!
கவலை கொண்டிருப்பேன்
உன் பெயர் உயிரெழுத்துக்கள் அல்ல என்று!
உன் நிழற்படம் நான் காண
விழியது சுவை நரம்பு பெற்றிருக்கும்
அருகில் நீ இருந்தால்
அமிர்த சுவை தெரிந்திருப்பேன்!
மணமேடை நம் மனம் தாங்கி
மண வாழ்க்கை மணம் பெற்றிருக்கும்
மகிழ்வோடு இருந்திருப்பேன்
மணவாளனே உன்னோடு இருந்திருப்பேன்!
எனக்கு மட்டும் ஏன் இப்படி
கேள்விகணை தொடுத்திருக்க மாட்டேன்!
கரம் கூப்பி தெய்வம் முன்னே
கண் கலங்கி நின்றிருக்க மாட்டேன்!
எல்லாம் கை கூடியிருக்கும்
என் அருகே நீ இருந்தால்!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | Tamil new Year
சூரியக் கதிர் அது
பூமிதனை முத்தமிட
உலவுகின்ற பனி
ஓய்வெடுக்க செல்லும்!
இடை அது வளைந்து
நங்கை இடுவாள் கோலம்
தூரிகை இல்லா
வரைந்த ஓவியமாய்!
விழியின் பளு அது
இரவில் நித்திரையோடு
இரவல் கனவுகள்
விடியலோடு செல்லும்!
விடியல் கண்ட விழி
கலைந்து விட்ட பனி
நங்கை அவள் ஓவியம்
விடை பெற்ற கனவுகள்
வழக்கம் போல
இது ஒரு நாளின் விடியல்.
இருந்தாலும் அகம் அது
அளவில்லா ஆர்ப்பரிக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு
விழியது கண்டுவிட!
விடியல் காண போகும்
தமிழ் விழிகளுக்கு
தமிழ் தோழமைகளுக்கு
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மன சிறகுகள் | Mana Sirakukal
இருவரி திருக்குறள் போல
பொய்தனை சொல்லாது
இருவரி இதழ்கள்
நாளும் மெய் பேச
மனமது ஆணையிடனும்!
பொய்தனை சொல்லாது
இருவரி இதழ்கள்
நாளும் மெய் பேச
மனமது ஆணையிடனும்!
உன் புகழ் பிறர் சொல்ல
தற்பெருமை நீ கொள்ளாது
தரணியில் நல்வாழ்வு வாழ
மனமது ஆணையிடனும்!
தற்பெருமை நீ கொள்ளாது
தரணியில் நல்வாழ்வு வாழ
மனமது ஆணையிடனும்!
அகம் அது அழுதாலும்
பிறர்முன் சிரித்திட
இன்முகம் நீ காட்ட
மனமது ஆணையிடனும்!
பிறர்முன் சிரித்திட
இன்முகம் நீ காட்ட
மனமது ஆணையிடனும்!
நன்றி மறவா நினைவோடு
தீமை மறக்கும் மனமோடு
நல் மனிதனாய் வாழ
மனமது ஆணையிடனும்!
தீமை மறக்கும் மனமோடு
நல் மனிதனாய் வாழ
மனமது ஆணையிடனும்!
பெற்றவள் தெய்வ மென
தந்தை வாக்கு மந்திரமென
பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க
மனமது ஆணையிடனும்!
தந்தை வாக்கு மந்திரமென
பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க
மனமது ஆணையிடனும்!
அகவை முதிர்ந்த முதுமையிடம்
அகத்தால் அன்பு கொண்டு
குணத்தால் மரியாதை செலுத்திட
மனமது ஆணையிடனும்!
அகத்தால் அன்பு கொண்டு
குணத்தால் மரியாதை செலுத்திட
மனமது ஆணையிடனும்!
பருவங்கள் சொல்லும் காதல்
பள்ளி கல்லூரியில் வந்து விடா
படிப்பில் மட்டும் சிறப்புற்றிட
மனமது ஆணையிடனும்!
பள்ளி கல்லூரியில் வந்து விடா
படிப்பில் மட்டும் சிறப்புற்றிட
மனமது ஆணையிடனும்!
அதர்மம் தனை நோக்கி
பாதங்கள் நடை போடா
தர்மம் தனை நோக்கி
பாதங்கள் நடை போட
மனமது ஆணையிடனும்!
பாதங்கள் நடை போடா
தர்மம் தனை நோக்கி
பாதங்கள் நடை போட
மனமது ஆணையிடனும்!
மனசிறகுகள் சரியாய் பயணிக்க
மானுடத்துள் சான்றோனாய் வாழ
மனமது ஆணையிடனும்!
விரிப்போம் மன சிறகுகளை!
மானுடத்துள் சான்றோனாய் வாழ
மனமது ஆணையிடனும்!
விரிப்போம் மன சிறகுகளை!
காதலின் எதிர்பார்ப்பு | Love expectation
![]() |
Love Expectation |
கவிதையோடு காலம் தள்ளி
கண்ணீர் சிந்தி விழிகள் பழுது
இருவிழிகள் இயல்பு நிலை திரும்புமா?
என் அகம் அறிந்த அலைபேசி
வேலை நிறுத்தம் செய்யுது
உன் குரல் கேக்க துடிக்குது!
உணர்வுகளையும் வலிகளையும்
உன்னோடு பகிர்ந்தேன்.
இதழ் திறந்து நீ பேசாமல் இருக்க
என் அன்பே! நான் இனி என்ன செய்வேன்?
கண்ணீரோடு உன் நினைவுகள் தீண்ட
என் கரம் தொட்ட உன் நிழற்படம்
விழி சிந்தும் கண்ணீரில் கரையுதே!
இறைவனே இறங்கி வந்து
அன்பாய் ஓர் வரம் தந்தாலும்
என் அன்பே! என் காதலே!
உன்னைப் போல் எவர் அன்பு தருவர்?
எழுதிய கவிதைகளை உன்னிடம் சமர்ப்பித்து
உன் இதழ் கொண்டு நீ வாசிக்க
சிந்திய உன் இதழ் காற்றை
இயற்கையது தழுவாமல்
நான் அதை சுவாசித்தேன்.
என் அன்பே!
இனி எவர் இதழ் காற்றை சுவாசிப்பது?
உன் விரல் தொடா என் விரல்கள்
கைரேகை அது தேய்மானம் கொள்ளாமல்
ஆறடி நிலம் தன்னில் மறையுமோ?
விதியும் வீதியும் மானுடர்க்கு உரியது
இதில் நீ யென்ன நானென்ன?
என்றாவது ஒரு நாள்
விதி வென்று சென்று விட
வீதியில் நான் வீழ்ந்தேன் என்றால்
ஆறடி நிலம் மட்டும் எனதென்று
நிறைவேறா ஆசையோடு நான் சென்றால்
என் அன்பே நீ என்ன செய்வாய்?
இரு விழியும் பார்வை யிழந்து
இருள் சூழ்ந்த உலகில் நான் நிற்க
என் காதல் அது என்னா யிற்று?
இறைவனுக்கும் உனக்கும் தான் வெளிச்சம்!
நந்தவன நாட்கள் | Nandavana Naatkal
புழுதியோடு புரண்டு
அழுக்கு ஆடையோடு
அமாவிடம் வீரம் பேச
வாரியலை ஆயுதமாய்
அம்மா எடுத்து விட
வீதியில் ஓட்டப்பந்தய வீரனாய்
புறமுதுகிட்டு ஓடிய நாட்கள்!
அழுக்கு ஆடையோடு
அமாவிடம் வீரம் பேச
வாரியலை ஆயுதமாய்
அம்மா எடுத்து விட
வீதியில் ஓட்டப்பந்தய வீரனாய்
புறமுதுகிட்டு ஓடிய நாட்கள்!
ஆடை அணிந்துவிட
அன்னை என்னை தேடி வர
கால் மடக்கி ஒளிந்து கொண்டேன்
கட்டிலின் கால்களுக்கு இடையில்!
அன்னை என்னை கண்டுபிடித்தாள்
ஆடைதனை அணிவித்தாள்.
மணிச்சத்தம் கேட்டிருக்கும் போல!
அன்னை என்னை தேடி வர
கால் மடக்கி ஒளிந்து கொண்டேன்
கட்டிலின் கால்களுக்கு இடையில்!
அன்னை என்னை கண்டுபிடித்தாள்
ஆடைதனை அணிவித்தாள்.
மணிச்சத்தம் கேட்டிருக்கும் போல!
கழனியில் காளைகள் சேறடிக்க
தந்தையங்கே வியர்வை சிந்த
தந்தை வேதனை நானறியாது
சேறு அடித்த கழனியில்
நான் போய் சேறடிக்க
சேற்றால் அடி வாங்கினேன்.
பாசம் கொண்ட தந்தையிடம்!
பாசம் சற்று அதிகம்....
தந்தையங்கே வியர்வை சிந்த
தந்தை வேதனை நானறியாது
சேறு அடித்த கழனியில்
நான் போய் சேறடிக்க
சேற்றால் அடி வாங்கினேன்.
பாசம் கொண்ட தந்தையிடம்!
பாசம் சற்று அதிகம்....
நண்பர்களோடு திருட்டுத்தனமாய்
ஆனந்தக்குளியல் நாங்கள் போட
சுதந்திரக்குளியல் சிந்தனையில் தோன்ற
கரையோரம் ஓய்வெடுத்தன ஆடைகள்.
உலா வந்த பண்ணையாரு
ஆடையோடு சென்றுவிட
காட்டுவாசியாய் வந்தோம் இல்லத்திற்கு!
ஆனந்தக்குளியல் நாங்கள் போட
சுதந்திரக்குளியல் சிந்தனையில் தோன்ற
கரையோரம் ஓய்வெடுத்தன ஆடைகள்.
உலா வந்த பண்ணையாரு
ஆடையோடு சென்றுவிட
காட்டுவாசியாய் வந்தோம் இல்லத்திற்கு!
காபித்தண்ணி பாட்டி குடிக்க
சர்க்கரை இல்லை என்று விட
ஒற்றை சர்க்கரையை
கையிலெடுத்து கொடுத்தேன்!
கர்ணனாய் மாறினேன்!
ஊரெல்லாம் பாட்டியாதலாள்!
சர்க்கரை இல்லை என்று விட
ஒற்றை சர்க்கரையை
கையிலெடுத்து கொடுத்தேன்!
கர்ணனாய் மாறினேன்!
ஊரெல்லாம் பாட்டியாதலாள்!
ஒற்றை நடைபாதை தனிமையிலே
பாதங்கள் மெதுவாய் நடைபோட
நானும் நினைத்துப் பார்க்கிறேன்.
அன்னை மடியில் குழந்தையாய்
இதயம் களிப்புற்ற நந்தவன நாட்களது!
பாதங்கள் மெதுவாய் நடைபோட
நானும் நினைத்துப் பார்க்கிறேன்.
அன்னை மடியில் குழந்தையாய்
இதயம் களிப்புற்ற நந்தவன நாட்களது!
சிட்டு குருவி தினம் | Sittu kuruvi day
![]() |
Chittu kuruvi Day |
ஏழை குடிசை அழகானது
சிட்டு குருவியின் குடிலாலே!
இறக்கை முளைத்த மழலையாய்
இலக்கு தெரியாமல் வீட்டினுள்
இங்கும் அங்கும் பறந்தாயே!
சிட்டு குருவியின் குடிலாலே!
இறக்கை முளைத்த மழலையாய்
இலக்கு தெரியாமல் வீட்டினுள்
இங்கும் அங்கும் பறந்தாயே!
கிராமத்து வீதிகளுக்கு அழகாய்
மின் கம்பியில் வரிசையாய்
மின்னொளியாய் தெரிந்தனவே!
இனி எங்கு சென்று தேடுவேன்
சிறுவயதில் நான் கண்ட சிட்டுதனை!
மின் கம்பியில் வரிசையாய்
மின்னொளியாய் தெரிந்தனவே!
இனி எங்கு சென்று தேடுவேன்
சிறுவயதில் நான் கண்ட சிட்டுதனை!
இரை தேடி ஏமாந்த சிட்டுக்கள்
மானுடனால் ஏமாற்றப்பட்டனவே!
வேதி உரங்கள் கலந்த மண்ணாலே!
புழு பூச்சி ஏதும் இல்லா
பூமித்தாய் அநாதை ஆனாளே!
மானுடனால் ஏமாற்றப்பட்டனவே!
வேதி உரங்கள் கலந்த மண்ணாலே!
புழு பூச்சி ஏதும் இல்லா
பூமித்தாய் அநாதை ஆனாளே!
சிட்டு பறக்கும் இடத்தில்
சிறகுகள் இல்லாமல்
புகை தூசு பறந்தனவே!
சிட்டு பறக்கும் உயரம் தாண்டி
செல்போன் டவர் வளர்ந்தனவே!
சிறகுகள் இல்லாமல்
புகை தூசு பறந்தனவே!
சிட்டு பறக்கும் உயரம் தாண்டி
செல்போன் டவர் வளர்ந்தனவே!
நொடிமுள் வேகமாய் மணிமுள் நகர
அலைபேசியில் பேசும் மானுடர்கள்
சிட்டுகளின் உயிரை சிதைத்தனரே!
மலர்ந்து விட்ட மொட்டு சிட்டுகளை
மலடிப் பெண்ணாய் மாற்றினரே!
அலைபேசியில் பேசும் மானுடர்கள்
சிட்டுகளின் உயிரை சிதைத்தனரே!
மலர்ந்து விட்ட மொட்டு சிட்டுகளை
மலடிப் பெண்ணாய் மாற்றினரே!
ஊடகங்களே ஊக்குவியுங்கள்
சிட்டுகளைக் காணவில்லை யென்று!
மானுட விழிகளே சபதமெடுங்கள்
சிட்டுகளின் இனம் காப்போம் யென்று!
சிட்டுகளைக் காணவில்லை யென்று!
மானுட விழிகளே சபதமெடுங்கள்
சிட்டுகளின் இனம் காப்போம் யென்று!
நெனைச்சபடி நெனைச்சபடி | ninaichapadi ninaichapadi
நெனைச்சபடி நெனைச்சபடி மணப்பொன்னு அமைஞ்சதடி என்ற பாடலைப் போல , இந்த உயிர்சிந்தி உயிர்சிந்தி பாடல். பாடிப் பாருங்கள்..
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
தலையணையே துணை என நினைத்து
தவிப்புகளை உணவாய் மாற்றி
தள்ளியவள் நீ என் பெண்ணே!
இரவுகளும் கனவுகள் படைக்க
இதயத்தில் ஓர் புத்துயிர் கொடுக்க
நீயும் நானும் சங்கமம் ஆவோம்!
தவிப்புகளை உணவாய் மாற்றி
தள்ளியவள் நீ என் பெண்ணே!
இரவுகளும் கனவுகள் படைக்க
இதயத்தில் ஓர் புத்துயிர் கொடுக்க
நீயும் நானும் சங்கமம் ஆவோம்!
உன் இதயத் துடிப்பாய் நானும்
என் உயிரில் உறவாய் நீயும்
உண்மைக் காதலாய் உலகிற்கு இருப்போம்!
வான் நிலவு உனை வரவேற்க
என்னவென்று அதை நான் கேட்க
இனி நிலவின் தேவதை நீ என்று
விண்ணுலகு அதிர்வலை எழுப்ப
மெய் உணர்ந்து மெய் மறந்தேன்!
என் உயிரில் உறவாய் நீயும்
உண்மைக் காதலாய் உலகிற்கு இருப்போம்!
வான் நிலவு உனை வரவேற்க
என்னவென்று அதை நான் கேட்க
இனி நிலவின் தேவதை நீ என்று
விண்ணுலகு அதிர்வலை எழுப்ப
மெய் உணர்ந்து மெய் மறந்தேன்!
ஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை
ஹை ஹை ஹை ஹைஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை ஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை
ஹை ஹை ஹை ஹைஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை ஹை
தூசு கொண்ட காற்று உந்தன் முகம் தீண்ட
மார்போடு உன்னை அணைத்தேன் உந்தன் கவசமாக
மோத வந்த தூசு என்னை தண்டித்து செல்ல
உந்தன் இதழ்கள் சிந்திய காற்று என் விழியோடு உறவாட
உன் இதயத் துடிப்பு இனி என்னோடு
என் வாழ்க்கையே இனி உன்னோடு ! (2)
என் பிறவி பலன் அது இனிக்கும்
கோவில் குளம் செல்லாமலே!
மார்போடு உன்னை அணைத்தேன் உந்தன் கவசமாக
மோத வந்த தூசு என்னை தண்டித்து செல்ல
உந்தன் இதழ்கள் சிந்திய காற்று என் விழியோடு உறவாட
உன் இதயத் துடிப்பு இனி என்னோடு
என் வாழ்க்கையே இனி உன்னோடு ! (2)
என் பிறவி பலன் அது இனிக்கும்
கோவில் குளம் செல்லாமலே!
என்னுயிரே...! கண்மணியே...!
என்னுயிரே...! கண்மணியே...!
என்னுயிரே...! கண்மணியே...!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
சூரியக்கதிர் என்னை சுட்டு விடும் என்று
சேலை நுனி நீயும் கொண்டு குடை பிடித்தாயே
பூமி கொண்ட காதல் அதை
உன் நிழலோடு சொல்லியது!
உந்தன் உள்ளம் புரியாமலே!
என்னோடு நீயும் காதல் கொள்ள
புரிந்து விட்ட பூமி அது தாடி வளர்த்தது(2)
சேலை நுனி நீயும் கொண்டு குடை பிடித்தாயே
பூமி கொண்ட காதல் அதை
உன் நிழலோடு சொல்லியது!
உந்தன் உள்ளம் புரியாமலே!
என்னோடு நீயும் காதல் கொள்ள
புரிந்து விட்ட பூமி அது தாடி வளர்த்தது(2)
பூமியெங்கும் பச்சை புற்கள்
புற்களே பூமியின் தாடியாய்
என் காதல் நீ! என் காதலி நீ!
புற்களே பூமியின் தாடியாய்
என் காதல் நீ! என் காதலி நீ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
உயிர்சிந்தி உயிர்சிந்தி
உருவாக்கிய காதல் இது!
உன்னை நானும் மறப்பேனோ
உன்னை விட்டுப் பிரிவேனோ!
தலையணையே துணை என நினைத்து
தவிப்புகளை உணவாய் மாற்றி
தள்ளியவள் நீ என் பெண்ணே!
இரவுகளும் கனவுகள் படைக்க
இதயத்தில் ஓர் புத்துயிர் கொடுக்க
நீயும் நானும் சங்கமம் ஆவோம்!
தவிப்புகளை உணவாய் மாற்றி
தள்ளியவள் நீ என் பெண்ணே!
இரவுகளும் கனவுகள் படைக்க
இதயத்தில் ஓர் புத்துயிர் கொடுக்க
நீயும் நானும் சங்கமம் ஆவோம்!
தேவதை அவள் எங்கே | Where is my Angel
தேகத்தால் அவள் நல்ல நிறமாம்
மனத்தால் அவள் நல்ல அழகாம்
கிரகங்களை கட்டத்தில் அடைத்து
ஜாதகம் சொன்ன கருத்துக்கணிப்பு இது!
மனத்தால் அவள் நல்ல அழகாம்
கிரகங்களை கட்டத்தில் அடைத்து
ஜாதகம் சொன்ன கருத்துக்கணிப்பு இது!
சிந்தனையில் சிக்கிய கவிதை வரி
காகிதத்தில் வந்து அமராததைப் போல
அகத்தால் அழகானவளைக் கண்டு
அவளைக் காணா புறவிழி இது
நிதமும் ஏக்கத்தில் சிக்கித் தவிக்கிறது!
காகிதத்தில் வந்து அமராததைப் போல
அகத்தால் அழகானவளைக் கண்டு
அவளைக் காணா புறவிழி இது
நிதமும் ஏக்கத்தில் சிக்கித் தவிக்கிறது!
வானவில் வளைவை மிதமாய் மிஞ்சும்
புருவங்கள் அதன் அழகின் இடையில்
இடையழகை மிஞ்சும் நெற்றிப் பொட்டென
நிலவதன் தங்கை இவளென சொல்லலாமாம்!
புருவங்கள் அதன் அழகின் இடையில்
இடையழகை மிஞ்சும் நெற்றிப் பொட்டென
நிலவதன் தங்கை இவளென சொல்லலாமாம்!
முகம் அது வெண்மை ஒளியாய்
கருகூந்தல் அது இருள் நிலவாய்
எந்த பெண்ணும் இவளருகே வராது
அழகின் சிகரமாய் இவள் இருப்பாளாம்!
கருகூந்தல் அது இருள் நிலவாய்
எந்த பெண்ணும் இவளருகே வராது
அழகின் சிகரமாய் இவள் இருப்பாளாம்!
பூக்களின் மணம் கொண்டு மணமுடித்து
அவள் மனம் தனை காதல் கொள்ள
நான் மலர் சுடப் போகும் மங்கை
அவளை காணும் நாள் எந்நாளோ?
அவள் மனம் தனை காதல் கொள்ள
நான் மலர் சுடப் போகும் மங்கை
அவளை காணும் நாள் எந்நாளோ?
உயிர் பெற்ற சிலை | Uyir pettra silai
நடனம் கவிதை | Dance kavithai
இவள் அழுகின்றாள் | Alukai
![]() |
Ival Alukindraal |
சிந்தனை விட்டு அகல மறுக்கும்
சிலுவையில் அறையப்பட்ட
குருதி கசிந்த நினைவுகள் அது!
விசா எதுவும் இல்லாமல்
விண்ணோடு உறவு கொண்டு
வீழ்த்த வருகிறது
சொந்த ஊர் சோகங்கள்!
உறவு தேடி வாழ வந்தவளை
வாழும் உறவுகள் சொன்னது
அகதி இவள் என்று!
கருவாய் வந்த நினைவுகள்
மழலையாய் முதிர்ச்சி பெற
அனைத்துக் கொண்டாள் இவள்.
சோகங்களின் அன்னை இவளோ?
கருவிழி சிந்த மறந்த கண்ணீரை
இவள் இதயம் தினம் சிந்தும்.
நித்திரை என்னவென்று அறியா
இவளின் ஆழ்மனது முனகல்கள்
சோகங்களின் தாலாட்டுகள்!
அளவுகோல் கொண்டு அளவிடமுடியா
அளவில்லா சோகங்கள் இவளோடு
நிழற்படம் இவள் எடுக்க
நிஜமாய் தெரிகிறது சோகங்கள்!
ஊனம் இல்லா உள்ளத்தால் அழுது
இரு வரி இதழ்களாள் சிரித்து
மெய்தனை கசியாமல் மறைத்து
சோகம் வெளிக் கொணராதவள்!
நரகம் சென்றது இவள் சந்தோசம்
நடை பிணமாய் இவள் வாழ்க்கை
நான் ஏது செய்வேன்?
இவள் அழுகின்றாள் அழுகின்றாள்!
காதலர் தின கவிதை | Lovers day Valentine day
![]() |
Kaathalar thina kavithai |
சிறகுகள் இல்லா என் தேவதைக்கு,
கற்பனை இல்லா கவியோடு
பொய் பேசா உன் விழியோடு
ராகம் பாடும் உன் இதழோடு
இசை மீட்டும் உன் காதணியோடு
தினமும் ஓர் விளையாட்டு!
அகமும் உணர்வும் அன்போடு
நாட்காட்டி நகர்த்திய நாட்களோடு
நடைபோட்டது நம் காதல் அன்போடு
கலந்து விட்டேன் இன்று உன்னோடு!
கரங்கள் தொட்டு நாம் விளையாட
அதனால் உன் நாணங்கள் கவி பாட
நம் காதல் கவித்துவம் பெற்று விட
ஏங்கினேன் மீண்டும் கவி வந்து விட!
இதயத்தால் உனக்கும் எனக்கும்
இன்று பிறந்த நாள் விழாவாம்!
தகவல் சொல்ல ஒற்றன் வந்தானாம்
சொல்ல வந்தது பிப்ரவரி 14 ம்
அகால மரணம்
அகம் அது சந்திக்காமல்
விழிகள் அது சந்தித்தால்
விளைவுகள் வீபரீதமானது
மரித்து விட்டது என் காதல்!
இயந்திரமாய் பயணிக்கும் வாழ்வில்
வழிப்போக்கனாய் வந்திருகிறது
வலி கொடுத்த அந்த காதல்!
விழியின் இறுதித்துளி கண்ணீரில்
வீழ்ந்து கிடக்கும் காதல் சுகத்தால்
நடை பிணமாய் வாழ்வு என்று
பொருத்தம் காணும் எதிர்காலம்!
சுகமாய் வந்த காதல்
சோகமாய் சென்று விட
நினைவுகள் உயிர் இழந்து
இதயம் அது துடித்தே இறக்கும்!
காதலுக்கு அழகு கூட்டி
பொய் கண்ட என் கவிதைகள்
மெய் சொல்ல மறந்தனவே!
காதல் பொய் என்று!
இனியொரு காதல்
இதயம் அது காணாது!
மரித்து போன காதல் உயிர்த்தெழ
காதல் ஒன்றும் இயேசு அல்ல!
அகால மரணம் கண்டது
என் காதல்!
கண் தானம்
நான் ஒரு பார்வை இல்லாதவன்!
இன்றைய சமுதாயத்தில்
ஊமை விழிகளின் உதாரணமாய்
பகலையும் இரவாய் நினைத்து
வாழ்கையை நகர்த்துபவன் நான்!
இரவுகள் ஆடை கழற்றி
பகல் பிறந்தது அந்த காலம்
அது கற்காலம்.
இரவுகளையே பகலாக்க
விழிகளாய் வந்தன
மின் விளக்குகள்!
இது இன்றைய காலம்.
நாகரிகம் வளர்ந்தாலும்
விஞ்ஞானம் செழித்தாலும்
என் விழிகளுக்கு ஒளி கொடுக்க
கண் தானம் ஒன்றே தீர்வு!
நிறங்கள் பல உண்டு
எங்களுக்குத் தெரிந்த
நிறம் என்னவோ
கருப்பு மட்டும்தான்.
அதுவும் சில நேரங்களில்
இருள் என்று
இதயம் உரைக்கிறது!
விரல் தொட்டு காசு அறியும்
விழி இல்லா விஞ்ஞானி நான்.
நிஜமாக நான் புலம்புகிறேன்
நிழலோடு என் வாழ்க்கை என்று!
இல்லாத விழிகளுக்கு
இமைகள் கொடுத்தான் கடவுள்.
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்
இன்னொரு கடவுள் வருவான்
எனக்கு விழி கொடுக்க!
வானத்தின் நுழைவு அலங்காரம்
வானவில்லாம்.
அதன் நிறங்களோ ஏழாம்.
எங்களுக்குத் தெரிந்த நிறம் என்னவோ
கருப்பு மட்டும்தான்.
மலரும் பூக்களின்
மணத்தை நுகர்ந்தேன்.
நிறத்தை மட்டும்
விழிகள் பார்க்க முடிவதில்லை!
ரோஜா பூ வேறு
மிகவும் அழகாக இருக்குமாம்!
என் போன்றவர்கள்
இனியாவது பார்ப்பார்களா?
அந்த சிவந்த ரோஜாக்களையும்
விழி தானம் செய்ய போகும்
உங்களை போன்ற கடவுளையும்!
உங்களது தியாகத்தில்
உங்களது சிந்தனையில்
எங்கள் இமைகள்
இருள் மறக்கும்!
எங்களுக்கு ஒளி பிறக்கும்!
எங்கள் கருவறை இருள்
கடைசி வரை தொடர வேண்டாம்!
கண் தானம் செய்வீர்கள் தோழர்களே!
பேஸ்புக் | facebook
அகம் தெரியாதவர்களின்
முகம் மட்டும் அறிந்து
அரட்டை அடிக்க
ஆரம்பமாகிறது
இணையதள உறவுகள் !
நிழற்படங்களின்
நிஜ முகம் காணாமல்
நிறம் தரம் கண்டு
நிரந்தரம் இதுவென
நினைக்கின்ற மனது இது!
விழிப்புணர்வு இல்லா
வளராத சிந்தனைகளால்
வளர்ச்சி காணும் சர்ச்சைகள்
இங்கு ஏராளம்!
உறவுகளை சீர்குலைக்க
உணர்வுகள் தூண்டும்.
தவறுகள் இங்கு
சாதுர்யம் எனப்படும்!
அரட்டை அடிக்கும்
வார்த்தை ஜாலங்களில்
விழிகள் சிரிக்கும்
அகம் மகிழ்வு கொள்ளும்.
உண்மை அன்புகள்
ஊமையாய் ஓய்வெடுக்கும்
உறவுகளுடன் இல்லத்தில்!
உலவுவார்கள் இணையத்தில்
போலி அன்பைத் தேடி!
மனம் ஒன்றை கண்டதாய்
மணம் முடிந்ததை மறப்பர்
மறப்பது இயல்பாகும்
மணம் கண்ட மனதினை!
மல்லு கட்டும் நீதிமன்றம்
மனதையும் மணத்தையும் பிரிக்க!
உணர்சிகளின் உந்துதலால்
நட்பு என்ற முன்னுரை
காதலாக நகரும்
இரண்டு தினங்களிலே!
முடிவுரை என்னவோ
உயிர் உருகுலைந்திருக்கும்
இல்லையேல் இதயம் ஒன்று
அங்கே உடைந்து இருக்கும்!
உறவுகளை சீர்குலைக்கா
உணர்வுகளை பாதிக்கா
வதந்திகள் பரப்பா
வன்முறை உண்டு பண்ணா
நல்ல சிந்தனை
நமக்கு வேண்டும்!
சமுக வலைத்தளங்களை
சரியாக பயன்படுத்துவோம்!
புகை
வளரும் சந்ததியினரை
வழுக்கிய சறுக்கள்!
வலிமையிழந்து நீ
வலுவோடு அவன்!
விரல்களுக்கு இடையில்
உயிரைத் தின்னும்
விளையாட்டுப் பொருளாக
கலியுக நாகரீகம் இவன்!
தொடர்ந்து வருகிறான்
தூக்கி நீ எறிந்த போதும்!
உதடுகளோடு மட்டுமல்ல
உயிரோடு உறவாடுகிறான்!
வெள்ளைப் புகையில்
கருப்பாய் ஒரு விதவை
சிவந்த நுரையீரலில்
சீராக மாற்றம் செய்தான்!
புகையோடு உறவாடி
புதியதாய் ஓர் உறவு
நுரையீரலை சந்தித்து
புற்று நோய் வளர்த்தான்!
வளர்ந்து விட்ட அவன்
எட்டி உதைத்தான்
அந்தோ சாய்ந்தான்
கல்லறைக் குழியில்!
பொங்கல் கவிதை | pongal kavithaigal
விடியற்காலையில் விடியலாய்
கழனி நோக்கி நீ சென்றாய்!
கால் பதித்த கழனியில்
உன் வெள்ளை உள்ளம் கண்டு
ஒட்டிக் கொண்ட சேறுகள்!
வயல் வரப்பு பாதைகளில்
உன் பாதச் சுவடுகள்
தினம் தினம் அரங்கேற்றம்!
சுட்டெரிக்கும் வெயிலில்
காந்தி உடையின் பாதியோடு
வியர்வைகள் நீ சிந்துவாய்!
நீயும் நெற்கதிரும்
உரையாடுவீர்கள் தினம் தினம்.
உனக்கு நீ எனக்கு நான்!
உழவனான உன் உழைப்புக்கு
வளர்ந்து விட்ட நெற்கதிர்
தலை சாய்த்து மரியாதை!
தமிழனாய் மட்டும் அல்ல
தரணியில் நல்லதொரு
உழவனாகவும் நீ!
தமிழனும் உழவனும்
தரணியில் வாழ்வாங்கு வாழ
ஒற்றுமையாய் சொல்லிடுவோம்!
பொங்கலோ பொங்கல்!
இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!
இரவுகளின் விழி | iravukalin vili
இரவுகளுக்கு பார்வை கொடுத்த
விஞ்ஞானத்தின் விழிகள்
மின் விளக்குகள்
நம்பிக்கையூன்றி நட
விழியினாலும் வலியினாலும்
விழுந்து விட்டாலும்
வீழ்ந்து விடாதே!
விதியை தூரத்தி
வீதியில் நிறுத்தும்
வல்லமை கொண்டவன் நீ!
வீறு கொண்டு நீ எழுந்தால்
இன்றைய முயற்சி
நாளைய வெற்றியென
வீர நடை நீ போடுவாய்!
தேடுகின்ற வாய்ப்புகள்
தூரத்து கானல் நீர்கள்!
உருவாக்கும் வாய்ப்புகள்
உன்னத அமிர்தங்கள்!
உன்னுள் இருக்கும்
ஒப்பற்ற திறமையை
நீ கண்டு கொண்டால்
முயற்சியின் உதாரணம் நீயென
உலகம் உன்னை அறியும்!
உலகை விட்டுச் செல்லும் முன்
சொல்லி விட்டுச் செல்ல வேண்டாம்!
செய்து விட்டுச் சொல்லுவோம்!
முயற்சிக்கு வேண்டும் வேகம்
வெற்றிக்கு வேண்டும் விவேகம்
தெரிந்தோ தெரியாமலோ
விழுந்து விடுவது
எழுந்து நடக்கத்தான்!
நம்பிக்கையூன்றி நட!
ஆண்பால் கணணி - done
கருவிழி கண்ட கணணி திரை
உன் மேல் காதல் கொள்ள
உன் விரல் தொட்ட மயக்கத்தில்
விசைப் பலகையும் மோகம் கொள்ள
அஃறிணை கணணி
ஆண்பால் என்று உணர்ந்தேன்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)