![]() |
Cinema Veriyarkal |
சினிமா என்றால் பொழுதுபோக்கு
மறந்து விட்டது பல பேருக்கு
சிந்தனை எல்லாம் மழுங்கி இருக்கு
விழிக்காத மூளை மயக்கத்தில் இருக்கு!
நடித்தவன் உச்சியில் இருப்பான்
ரசித்தவன் எங்கே இருப்பான்
ரசித்த போதை தெளிந்து விடும்
வெறி கொண்ட போதை கூடி விடும்!
முதல் முறை திரை நோக்க
சில நூறு ரூபாய்கள்
இரண்டாம் முறை திரை நோக்க
சேமிப்பதில் அரை குறைகள்!
நடிகனின் முகத்தில் முகத்திரை - அதை
அறியாத மனதில் மனத்திரை
முகத்திரை விலகி விடும்
மனத்திரை ஒட்டி விடும்!
அரசியலுக்கு சினிமா முதல் படி
ரசிகனுக்கு அதுவே கடைசி படி
இனி இங்கு இல்லை வேறு படி
எப்படி வாழ்வது முறைப்படி!
திரை வடிவில் மனம் கெட்டான்
இனி எதன் வடிவில் அதை மீட்பான்
மனமும் திரையும் ஒன்றல்ல
மனம் முன் திரை பெரிதல்ல!
அஜித்தும் நடிகரே விஜயும் நடிகரே
ரசிகன் இருவரையும் ரசிக்கிறான்
வெறியன் ஒருவரை துதி பாடுகிறான்
இவர்கள் ரசிகர்களே அல்ல வெறியர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக