தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
பைத்தியக்காரன் - done
![]() |
| Paithiyakaaran Kavithai |
பாதங்கள் வகுத்த வழியோடு
வலிக்காமல் பயணித்து
உடல் சொல்லி அமர்வது என் வழக்கம்!
சில நேரம் காதல் கொண்ட வாழ்க்கை
சில நேரம் உதறிய உறவுகள் - என்னை
தனிமையில் உலவ வைக்கிறது!
சில நேரங்களில் சாப்பாடு பிச்சையாக
சில நேரங்களில் தானமாக
சில நேரம் விதி உடன் வருவதில்லை!
உலகத்துக்கு என்னை பிடிக்கவில்லை
எனக்கும் உலகம் புடிக்கவில்லை
பூமிக்கு தத்துப் பிள்ளை - ஆதலால்
விட்டு வைத்திருக்கிறது!
அழகை மயக்கும் ரோஜாவும் தெரியும்
பகையை முடிக்கும் கூர்முனை கத்தியும் தெரியும்
காதலும் பகையும் தெரிவதில்லை!
இரவில் தாய் மடி தேடி அலைந்தேன்
தேடலில் எதுவும் எட்டவில்லை
சாலையோர மேடையே இறுதியில் தாய் மடியாய்!
நான் உளறுவது பிற விழிகளுக்கு தெரியும்
நான் அழுவது எனது விழியில் புலப்படாது
பைத்திய மனஙகள் மனதுக்குள் அழுகிறது!
பனியும் வெயிலும் பாடம் நடத்தின
கிழிந்து போன என் கந்தல் துணிக்கு
எந்த பாடமும் விளங்கவில்லை!
கண்ணீர் வந்தே தேய்பிறையானேன்
மதிப்பில்லா என் கண்ணீருக்கு
வளர்பிறை என்ன தேய்பிறை என்ன ?
எல்லை என்று சொல்வது எதிலும் உண்டு
எண்ணில் அந்த எல்லையை தேடினேன்
எட்டாத என் எல்லையை என்னவென்று சொல்ல !
வயிறு பசித்தால் சாப்பாடு
தாகம் எடுத்தால் தண்ணீர்
பஞ்சத்திற்கு வளைந்தது என் உடல்!
இதுவும் கடந்து போகும் என்ற
பொருந்தாத வார்த்தையுடன் அழுகிறேன்
கடைசிவரை பைத்தியக்காரனாய்!
ரசிகர்கள் அல்ல வெறியர்கள்
![]() |
| Cinema Veriyarkal |
சினிமா என்றால் பொழுதுபோக்கு
மறந்து விட்டது பல பேருக்கு
சிந்தனை எல்லாம் மழுங்கி இருக்கு
விழிக்காத மூளை மயக்கத்தில் இருக்கு!
நடித்தவன் உச்சியில் இருப்பான்
ரசித்தவன் எங்கே இருப்பான்
ரசித்த போதை தெளிந்து விடும்
வெறி கொண்ட போதை கூடி விடும்!
முதல் முறை திரை நோக்க
சில நூறு ரூபாய்கள்
இரண்டாம் முறை திரை நோக்க
சேமிப்பதில் அரை குறைகள்!
நடிகனின் முகத்தில் முகத்திரை - அதை
அறியாத மனதில் மனத்திரை
முகத்திரை விலகி விடும்
மனத்திரை ஒட்டி விடும்!
அரசியலுக்கு சினிமா முதல் படி
ரசிகனுக்கு அதுவே கடைசி படி
இனி இங்கு இல்லை வேறு படி
எப்படி வாழ்வது முறைப்படி!
திரை வடிவில் மனம் கெட்டான்
இனி எதன் வடிவில் அதை மீட்பான்
மனமும் திரையும் ஒன்றல்ல
மனம் முன் திரை பெரிதல்ல!
அஜித்தும் நடிகரே விஜயும் நடிகரே
ரசிகன் இருவரையும் ரசிக்கிறான்
வெறியன் ஒருவரை துதி பாடுகிறான்
இவர்கள் ரசிகர்களே அல்ல வெறியர்கள்!
சிறகுகளுக்காய் ஓர் ஏக்கம்
கிடைத்தே தீரும்
ஒரு பொழுதும் நேராது
நம்பிக்கை இல்லாத சூழல்
ஒரு பொழுதும் வாராது!
செய்து விட்ட புண்ணியங்கள்
பலன் தராமல் போவது இல்லை
செய்து விட்ட பாவங்கள்
கை விட்டுப் போவது இல்லை!
கைக்கு எட்டாத காதலியை நினைத்து
எழுதிய கவிதைகள் பலம் பெறும்!
எட்டாத வெற்றியை தொட்டு விட
எட்டும் முயற்சிகள் தோற்பதில்லை!
விழி கசிந்த கண்ணீரில்
மெய்மை சுரந்திருப்பின்
வருங்காலம் பதில் சொல்லும்!
காலம் நீளலாம், பொய்மை நீளாது!
நிமிர்ந்து நிற்பது தைரியம் என்று
தோள் நிமிர்த்தி சொல்பவர்
வளைந்து கொடுப்பது பலகீனம் என்று
தவறிய சொல் வழி நடப்பர்!
அறிவாளி என்று தன்னை உணர்ந்தால்
முட்டாளாய் முன்னோக்கி செல்வாய்
விதியானாலோ அறிவினாலோ
கிடைப்பவை நிச்சயம் கிடைத்தே தீரும்!
கைக்கு எட்டாத காதலியை நினைத்து
எழுதிய கவிதைகள் பலம் பெறும்!
எட்டாத வெற்றியை தொட்டு விட
எட்டும் முயற்சிகள் தோற்பதில்லை!
விழி கசிந்த கண்ணீரில்
மெய்மை சுரந்திருப்பின்
வருங்காலம் பதில் சொல்லும்!
காலம் நீளலாம், பொய்மை நீளாது!
நிமிர்ந்து நிற்பது தைரியம் என்று
தோள் நிமிர்த்தி சொல்பவர்
வளைந்து கொடுப்பது பலகீனம் என்று
தவறிய சொல் வழி நடப்பர்!
அறிவாளி என்று தன்னை உணர்ந்தால்
முட்டாளாய் முன்னோக்கி செல்வாய்
விதியானாலோ அறிவினாலோ
கிடைப்பவை நிச்சயம் கிடைத்தே தீரும்!
கிருஷ்ண ஜெயந்தி கவிதை
![]() |
| Krishna Jeyanthi Kavithai |
கீதையின் குருவாய்
வாழ்க்கையின் வழி காட்டியாய்
எண்ணங்களின் கண்ணாடியாய்!
புல்லாங்குழல் காற்றில் இசையாய்
குறும்புகளில் ஓர் கதையாய்
மயிலிறகில் ஓர் கண்ணனாய்!
மேகத்தில் மறையும் நிலவாய்
வாடா நட்சத்திர பூவாய்
வெண்ணெயையும் தாண்டிய வெண்மையாய்!
உடலைத் தாண்டிய ஆன்மாவாய்
உடலைத் தாண்டிய வீரமாய்
உன் நாடகத்தில் நானும் ஒருவனாய்!
நீல நிறத்தில் ஓர் குழந்தையாய்
அதர்மத்திற்கு எதிராய் தர்மமாய்
கிருஷ்ண வேடமிட்ட மழலையாய்!
ஆயர்பாடியில் ஓர் கண்ணனாய்
லீலைகளில் ராச லீலையாய்
காதலை எல்லாம் ஆட்கொண்டவனாய்!
மரணம் எட்டாத என் ஆன்மாவாய்
கிருஷ்ண ஜெயந்தி அவதாரமாய்
வெண்மை இதயங்களோடு வாழ்வாய்!
ஸ்ரீ ராம ஜெயம்!
அழகு மாறா விழிகள் | Alaku maara vilizhikal
![]() |
| Alaku vilikal |
அறிவியல் ஆர்வம் இல்லை
ஆர்வம் இருந்திருந்தால்
என்றோ சொல்லியிருப்பேன்
கருப்பு வானவில் உன் புருவம் என்று!
விழிகளின் கவசமாய்
இமை முடிகள்
உன் விழி
கூர் ஆயுதமாய் இருக்க
எதிர் பார்வை
சுடத் துடித்தேன்
என் கவசங்களோ
வெற்று முடிகளாய்!
இயல்பிலே
விழியோரம் கண்மை கொண்டு
அழகு தேவதையாய்
பூமியில் பிறந்தவள்
கண்மைக்கு
உன் விழியோரம் வேலை இல்லை
இயல்பாய் வசியமாய்
வசிய மை கூடுதல் சிறப்பு!
புவி ஈர்ப்பு விசையையும் ஏமாற்றி
உன் விழி ஈர்ப்பு விசையால்
புவியில் விழுந்தது நிலவு என்று
அறிவியலும் வரலாறும்
நாளை மாறும்!
என்றும் அழகு மாறா
உன் விழிகளுக்கு
சமர்ப்பணம்!
பறிக்கப்படுகின்ற முத்தங்கள் | Parikapadukindra Muthankal
கலைஞர் கருணாநிதி கண்ணீர் அஞ்சலி | Karunaanithi Anjali
Karunanith
ஏதோ ஒரு புள்ளியில்
உன்னால் ஒரு முதல் பட்டதாரி!
ஏதோ ஒரு புள்ளியில்
உன்னால் ஒரு இலவச மின்சார விவசாயி!
ஏதோ ஒரு புள்ளியில்
உன்னால் ஒரு வள்ளுவன் சிலை!
ஏதோ ஒரு புள்ளியில்
உன்னால் ஒரு மாற்றுத் திறனாளி!
ஏதோ ஒரு புள்ளியில்
உன்னால் ஒரு திருநங்கை!
இன்னும் எத்தனை புள்ளிகளோ
அத்தனை புள்ளிகளும் முத்தமிடுகிறது
உன் கையொப்பம் இட்ட எழுதுகோலில்!
எழுதுகோலுக்கு மரணம் இருக்கலாம்
எழுதிய எழுத்துக்களுக்கு மரணம் இல்லை!
எனது இனிய உடன் பிறப்புகளே!
நண்பர்கள் தின கவிதை | Nanbarkal thina kavithai
![]() |
| Friendship day kavithai |
உறவுகள் பலவிதம் என்று
உலகம் விதைத்து இருக்கிறது
நட்பு என்ற விதை ஒன்று
இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது!
ஒருமையும் (காதல்) பிடிப்பதில்லை
தனிமையும் (ஒரு தலை காதல்) பிடிப்பதில்லை
தோழர்கள் (நண்பர்கள் ) என்ற பன்மை
நட்புக்கு (உயிருக்கு ) பிடித்திருக்கிறது!
காதலை சல்லடை இட்டால்
வயதைச் சொல்லும்
நட்பை சல்லடை இட்டால்
உயிரை உணர்வை சொல்லும்!
விவரம் அறியும் முன்
நட்பு பூத்து விடுகிறது!
காதல் பிறக்க ஹார்மோன்கள் தேவை
நட்பு பிறக்க உயிரே தேவை!
பதில் இல்லா வினாக்கள்
நட்பில் எழுவதில்லை
நட்பான உறவுகள் பிரிவதில்லை
வேரிட்ட மரங்கள் நகர்வதில்லை!
குழந்தையின் கிறுக்கல்கள்தான்
ஆனாலும் புரிந்து விடுகிறது
நட்பாக கிறுக்கிப் பார்
ஆஹா! கிறுக்கல் எல்லாம் கவிகள்!
இரவின் இடைவெளி பகலா
பகலின் இடைவெளி இரவா
உயிரின் இடைவெளி நட்பா
நட்பின் இடைவெளி உயிரா!
மயில் இறகில் அழகு விழிகள்
குயில் குரலில் ஓர் சங்கீதம்
தூணிலும் துரும்பிலும் இறைவன்
துடிக்கும் இதயத்தினில் ஓர் நட்பு!
எனது இனிய தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
காதல் கனி | Kaathal kani
எட்டாத கனி அது காதல் என்று
சிலர் பறிக்க முயற்சி செய்கிறார்கள்
எட்ட முடியவில்லை ஆதலால்
சிலருக்குப் புளித்து விடுகிறது!
எட்டிப் பிடித்ததாய் உணர்ந்தவன்
முழுவதும் ருசிக்கும் முன்
தவறான முடிவெடுத்து விடுகிறான்
இதற்கா ஆசைப் பட்டோம் என்கிறான்!
எட்டிப் பிடிக்கவும் முடியவில்லை
எட்டிப் பிடிக்காமல் இருக்கவும் முடியவில்லை
இரண்டிற்கும் இடைப்பட்ட சம நிலை
தினமும் ருசிக்கிறான் காதல் கனியை !
சாலை விதிகள் | Saalai Vithikal
![]() |
| Saalai Vithak Kavithai |
வீட்டுக்கொரு வாகனம்
கட்டாயமில்லா கட்டாயம்
விதிமுறை அறிந்து பயணித்தால்
விபத்து ஒதுங்கி பயணிக்கும்!
தலைக்கொரு கீரிடமாய்
உயிர்க்கொரு கவசமாம்
தலைக்கவசம் கம்பீரமாய்
தலையினில் முடி சூடட்டும்!
வளைவுப் பாதையோ நளினம்
நளினத்திலே வேண்டுமோர் கவனம்
வாகனித்தில் ஒலி எழுப்ப
விபத்தை புறந் தள்ளலாம்!
விதிமுறை மீறிய வேகம்
விதியின் வசம் செல்லும்
விதியின் ஆணையோ
விபத்தை கொடுக்கும்!
வாழ்வில் பிற தடை கடந்து வர
வேகத் தடை கரம் கொடுக்கும்
வேகத் தடை அறிந்து பயணிக்க
அசம்பாவிதத்தில் தடை ஏற்படும்!
ஒளி நிற விளக்குகளில்
ஓர் மௌன ராகம்
ஓராயிரம் அர்த்தங்களுடன் !
நில் கவனி செல்!
முகப்பு விளக்கு பகலில் ஒளிர்ந்தால்
வாகன விபத்து மிகவும் குறைவு
முகப்பு விளக்கு பகலில் ஒளிரட்டும்
வாகன முகம் அதில் ஜொலிக்கட்டும்!
வாழ்க்கைக்கு ஓர் நெறிமுறை
சாலைகளுக்கு ஓர் விதிமுறை
நெறிமுறை மீறினால்
அவன் மனிதனே இல்லை!
விதிமுறை மீறினால்
அவனுக்கு வாழ்வே இல்லை!
மகளதிகாரம் - அட்சய பாத்திரங்கள் | Makalathikaaram
![]() |
| Thanthai Makal |
விருப்பமில்லா வெயிலோடு
சண்டையிட்டு களைத்து திரும்ப
முகம் பார்த்த என் வீட்டு கண்ணாடி
முகம் அலச உத்தரவிட்டது!
இரு கரங்கள் சிறு குவளையாய்
பொறுக்கிய நீர் தன்னில்
முகம் அலசி தொலைகாட்சி முன்
சம்மனமிட்டு அமர்ந்தாயிற்று!
தொலைக்காட்சி ஒலியை தாண்டி
செவியில் நுழைந்தது அந்த ஒலி
அப்பா சாப்பாடுறீயா ? - திரும்பினேன்
வெற்றுப் பாத்திரம் ஏந்தி என் மகள்!
அம்மா சாப்பாடு தருவாள் என்றேன்
அகம் கடிந்து கொண்டாள்
இன்று என் சமையல்
இப்போ நீ சாப்புடுவீயா ? மாட்டியா ?
மகளதிகாரம் என்பதால் அடங்கி விட்டேன்
பரிமாறு சாப்பிடலாம் என்றேன்
வெற்றுப் பாத்திரங்கள்
அணி வகுப்பெடுத்து முன் அமர்ந்தன!
இங்கே எங்கே சாதம் இருக்கிறது என்றேன்
விழி கொண்டு தேடியவள்
வெற்றுப் பாத்திரம் கையில் ஏந்தி
வெற்றுக் கரண்டியோடு பரிமாறினாள்!
இதழ்கள் திறந்து சிரித்து விட்டேன்
சாப்பிடும் போது என்ன சிரிப்பு ?
ஒழுக்கம் கற்றுக் கொடுத்தாள்
மீண்டும் மகளதிகாரம் அடங்கி விட்டேன்!
உப்பு காரம் எல்லாம் இருக்கா ?
காரம் இல்லா இனிப்பான கேள்வி
ஆம்மாமா! சூப்பரா இருக்கு என்றேன்!
சரி , சாப்பிடும் போது பேசாதே என்றாள்!
இடையிடையே வெற்றுக் கரண்டிகள்
இடைவிடாமல் பரிமாறின.
வேறு ஏதாவது வேணுமா ?
இடைவிடாத கேள்விகளும் தொடர்ந்தன!
வெற்று வயிறு நிரம்பியது
விடை பெறட்டுமா ? என்றேன்
இருப்பா, தண்ணீர் இங்கே இருக்கு என்றாள்
கரம் கழுவி எழுந்து நின்றேன்!
கரை படியா பாத்திரங்கள்
கழுவி கவிழ்த்து வைத்தாள்
விளையாட்டு முடிந்ததா? என்றேன்
சாப்பாடுதாம்ப்பா முடிந்து இருக்கு என்றாள்!
உணவை விளையாட்டு என்றெண்ணிய
உணர்வில்லா என் பெரு மூளையை
உணர்வுள்ள என் இதயம் சுட்டுவிட
உற்று நோக்கினேன் என் மகளையும்
உறங்கிய வெற்றுப் பாத்திரங்களையும்!
வெற்றுப் பாத்திரங்கள் எல்லாம்
பாசத்தின் அட்சய பாத்திரங்கள்
பரிமாறிய உணவுகள் எல்லாம்
பாசத்தின் பசி போக்கிகள்!
மகளதிகாரம் எல்லாம்
மரணம் தாண்டியும்
மரணிக்காமல் நினைவில்
மறவாமல் வர வேண்டும்!
வாழ்ந்து காட்டி விடு | Vaalnthu kaati vidu
![]() |
| Vaalnthu Kaatu |
காதலை அறிமுகம் செய்தவளே
வலியை சிறிது ஆற விடு
நாளைய நாளுக்கு வழி விடு!
விழிகளுக்கு ஓய்வு கொடு
கண்ணீருக்கு விடை கொடு
முகத்தை பொலிவாக்கி விடு!
சிரிப்பை எல்லாம் அள்ளி விடு
அதில் இன்பத்தை சற்று சிதற விடு
சிதறியதை என்னோடு பகிர்ந்து விடு!
உன் கனவில் என்னை வர விடு
கட்டியணைத்து ஆறுதல் சொல்ல விடு
உன் கண்ணீரை என்னோடு பகிர்ந்த்து விடு!
வாழ்க்கை கதவை திறந்து விடு
வெற்றி எனும் தென்றலை உலவ விடு
அமைதி வாழ்வை கரம் பிடித்து விடு!
விதி ரேகையை முற்றிலும் மாற்றி விடு
விடாது முயற்சிப்பவள் நிரூபித்து விடு
தோல்விகளை கைது செய்து விடு !
வழக்கம் போல சுழன்று விடு
வாழ்க்கை சுழற்சி நகர விடு
சரித்திரம் எட்டி பிடித்து விடு!
துன்பத்தை எல்லாம் மறந்து விடு
பெண் சிங்கமாய் வேட்டை ஆடி விடு
ஆண் சிங்கமாய் வீர நடை போட்டு விடு!
பாதத்தில் ஓர் இதயம் | Paathathil Oor Ithayam
![]() |
| Kaalkalil Or Kaathal |
அழகில் சில வகைகள் உண்டு
தேக நிறத்தை சிலர் அழகென்பர் !
உள்ளத்தை சிலர் அழகென்பர்
முக அமைப்பை சிலர் அழகென்பர்!
கருவிழிகள் ரசித்த எல்லாமே
படைப்பு எல்லாமே சிலர் அழகென்பர்!
சிந்தனை கோளாறோ வசியக் கோளாறோ
அவள் பாதங்கள் மட்டும் அழகென்றேன்!
காரணம் என்னவோ புரியாத கவிதை
கருங்கூந்தல் ரோஜா பூச்சூட மறந்து
பாத விரல் சூட நினைவூட்டியது போல
கனா சொன்ன காரணம் சற்றே ஏற்புடையது!
காற்றின் ஈரப்பதத்தை கவர்ந்திழுத்து
அதை பாத விரல் நுனியில் கீரிடமிட்டு
சிவந்த முகமாய் சிரிக்கிறது
பாத விரல் நகங்கள் எனும் கண்ணாடிகள்!
நாணம் கொண்டு தலை கவிழும் நேரம்
பாத விரல் நகம் கொண்டு
உன் முகம் நீ பார்ப்பாய்!
பத்து விரல்கள் ஜொலிக்கும் கண்ணாடிகள்!
நேரத்தை வீணடிக்கும் கவிதைகள்
உனது பாதங்களில் பிறப்பதில்லை
பாதத்தில் பிறந்து விட்ட கவிதைகள்
இதயத்தை வசியம் செய்ய மறப்பதில்லை!
தலையணை தலை சுமப்பதை விடுத்து
உன் பாத போதையை சுமக்கட்டும்!
ஆடை இல்லா பாத விரலில்
கவர்ச்சியும் இல்லை ஆபாசமும் இல்லை !
ஒரே இதயத்தை பாதம் தொட்டு
பத்து விரலுக்கும் காணிக்கையாக்கி
பாத அழகில் முழுவதும் மயங்கி
உன் பாதத்தில் சரணடைந்தேன்!
எளிமையான கவிதை | Elimaiyaana Kavithai
மே மாத வெயில் | May month Veyil
வாழ்த்துக்கு நன்றி | Vaalthukku nandri
சிலர் மற்றும் பலர் | Silar mattrum Palar
கலியுகத்திலும் நீதியின் கரம் பிடித்து
களைப்பு கொண்டு நடப்பவர் சிலர்
அதையே எள்ளி நகையாடி
களைப்பு இன்றி நடப்பவர் பலர்!
அரசியலை சேவை என்று
சுய வாழ்வை மறைந்தவர் சிலர்
அதையே பணம் என்றெண்ணி
படை பலமுடன் வருபவர் பலர்!
துன்பத்திலும் அமைதி காத்து
தனக்குள்ளே சிரிப்பவர் சிலர்
அதையே இன்பமாக்கி இதழால்
இதயத்தால் சிரிப்பவர் பலர்!
வெற்றியில் நிதானம் கொண்டு
தொடர் வெற்றி கொள்பவர் சிலர்
அதையே சாதனை என்றெண்ணி
அடங்காமல் திரிபவர் பலர்!
உடலும் அறிவும் செதுக்கிய திறமையை
தர்மத்திற்கு பயன்படுத்துபவர் சிலர்
அதையே திறமைக்கு விலையென்று
அதர்மத்திற்கு விலை போவர் பலர்!
சரித்திரங்கள் சிறகு விரித்து
அணைத்தது இன்றுவரை சிலர்
சரித்திரத்தில் இடம் பிடிக்க நினைத்து
சறுக்கிக் கொண்டவர் பலர்!
முட்டாள் தினம் கவிதை | April fool
![]() |
| Happy Fools day! |
கலியுக அரசியல்வாதிகளால்
சிந்திக்க மறந்த முட்டாளாகினோம்!
கற்பனை இல்லா உதாரணம் நாம்
நிச்சயம் கலப்படம் இல்லா உண்மை!
இலவச பொருட்கள் எல்லாம்
இலவசமாய் இன்று இல்லத்தில்!
இலவசத்தோடு இலவசமாய்
இலவச முட்டாள் இணைப்பிதழ் ஆனோம்!
ஊடகங்களின் அகோர பசிக்கு
உணவாக தினமொரு பொய்கள்!
குப்பை உணவான உண்மைகள்
உப்பில்லா உணவாய் முட்டாள் மக்கள்!
கார்ப்பரேட் எல்லாம்
சரியாய் சிந்திக்கும்
சரியாய் சிந்திக்கா மக்களை
சரியாக பயன்படுத்தும்!
சரி எது ? தவறு எது ?
அறிவாளியா ? முட்டாளா ?
தவறாய் சொல்வார்கள்
முட்டாள்தான் சரி என்று!
மணல் திருட்டெல்லாம்
கண் முன் கொள்ளை!
தினம் அறிந்து இதழ் திறக்கா
நாம் எல்லாம் முட்டாளின் எல்லை!
கட்சியின் கொள்கை எல்லாம்
கண்ட ---------ம் சொல்லும்!
பயணம் என்னவோ
ஊழலை நோக்கியே செல்லும்!
நாளும் ஏமாறுவதை
மூளைக்கு நினைவுபடுத்தவே
ஏமாற்றத்தை எடுத்துரைக்கவே
நமக்கென்று ஒரு நாள்!
முட்டாள் தினத்தை
கொண்டாடுங்கள்!
தலை கவிழ்ந்து நாணம் மறந்து
கொண்டாடுங்கள்!
முட்டாள் தின வாழ்த்துக்கள்!
நிலவின் அறியாமை | Nilavin Ariyaamai --
உலக தண்ணீர் தினம் கவிதை | World water day Kavithai
![]() |
| World Water Day |
(இளைய நிலா பொழிகிறதே பாடலின் சாயலில்)
நீர் வரவு குறைகிறதே
உலகமெல்லாம் காய்கிறதே!
விழி முடி செவி அடைத்து அலைகிறமே
மானுடரே அறிவில்லையோ ! ...(2)
நீர் வரவு குறைகிறதே...
வரும் காலம் அலங்கோலம்
தலைமுறை இனி தேய்பிறையோ
வரும் மழையில் ஒரு குளியல்
எண்ணமெல்லாம் இனி மறக்கும்! (2)
கானல் நீரிலே தாகம் தீருமோ
தண்ணீரில் முகம் காண அரிதாகுமோ
தண்ணீருக்கு வரிசை அமலாகுமோ
தண்ணீருக்கா சண்டை என்றாய்
சொன்ன சொல்லை நீ மறப்பாய்
சண்டையிட்டு அறிவிழப்பாய்
தண்ணீரை இழந்து நீ நிற்பாய்!(2)
வான வீதியில் வெண் சேலைகள்
இழந்த சேலையோ கரு மேகமோ
வான் மேகங்கள் விதவைக் கோலங்கள்!
நீர் வரவு குறைகிறதே...
கவிதை தேடல் | Kavithai Thedal done
உலக மகளிர் தின கவிதை | Ulaka makalir thinam kavithai
![]() |
| Women Day |
பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!
மணம் திறக்க இதழ் திறக்க
மல்லிகைகள் மறப்பதில்லை
அன்பு காட்ட மறப்பதில்லை
அன்னை மன பெண் இதயங்கள்!
இதயம் சில நேரம் பேச
இதழ்கள் அமைதி கொள்ளும்
இதழ்கள் அனபை நிராகரித்தால்
இதயம் பெரிதாய் எழுச்சி கொள்ளும்!
விழிகள் இரக்கத்தை பார்வையாகவும்
இதழ்கள் அன்பை சொற்களாகவும்
இதயம் தியாகத்தை துடிப்பாகவும்
உயிரோடு ஒட்டிக் கொண்டவள்!
மகளாய் பிறப்பெடுத்து
குல தெய்வமாய் உருமாறுபவள்
நதிகள் எல்லாம் பெண் பெயர் சூட
பூமியும் சூட்டிக் கொண்டது பூமா தேவியென்று!
உறவு முறை ஆராய்ந்து பார்த்தால்
உறவு படைத்த பிரம்மா ஆவாள்!
அன்னையாய் காதலியாய்
இன்னும் பல உறவுகள்!
கலியுக அறிவியல் ஆண் மகனையும்
தாய்மை அடையச் செய்யும்
இயல்பாய் பெண் சுரக்கும் அன்பை
இதயத்தோடு ஒட்டுவதில் தோல்வி கொள்ளும்!
பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!
மகளிர் தின வாழ்த்துக்கள்!.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




























