Vinayagar Sathurthi | விநாயகர் சதுர்த்தி

Vinayagar Sathurthi | விநாயகர் சதுர்த்தி

pillaiyaar
Vinaayagar Chudarthi


அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே பாடல் சாயலில்....


முதன்மை கடவுள் உன்னை நாங்கள் போற்றிடுவோமே!
உன் அருளும் கொண்டு நாங்களும்தான் வாழ்ந்திடுவோமே!
ஐங்கரம் கொண்டு நீயும் அருளிடுவாயே !
அருகம்புல் மகத்துவமும் புரிந்து கொண்டோமே!

உ எழுத்தை பிள்ளையார் சுழி ஆக்கியவன்
கஜம் முகம் கொண்டு கஜமுகன் ஆனவன்
அரச மரம் பலன் அறிந்து கொண்டவன்
அதையே இருப்பிடமாய் ஏற்றுக் கொண்டவன்!

தோப்புக்கரணம் அறிவியலை தொடங்கி வைத்தவன்
வழிபாட்டில் விஞ்ஞானத்தையே சேர்த்து வைத்தவன்!
தாய் தந்தை உலகம் என்று சொல்லி வைத்தவன்
ஓம் கார ரூபத்தின் இருப்பிடம் ஆனவன்!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக