christmas poems | christmas in tamil | கிறிஸ்துமஸ் கவிதை

christmas poems | christmas in tamil | கிறிஸ்துமஸ் கவிதை

christmas
christmas in tamil

கருணையின் சிகரமாய் 
கடவுளாய் பிறந்தவன்
கடவுளின் ஒளி!

வருந்தும் உள்ளங்களின் 
வாழ்க்கை வழி காட்டியாய்
வாழ்வு கொடுத்த ஒளி!

வாயில்தோறும் மின்னொளியில்
ஒளிர்கின்ற நட்சத்திரத்தில்
வீடு தேடி வந்த ஒளி!

சுக்குநாறிப் புல்லில்
வளர்ந்து விட்ட குடிலில்
அவதரித்த புனித ஒளி!

கேட்டதும் கொடுத்து 
தட்டியதும் திறந்து 
தேடியே கண்ட ஒளி!

மானுடர்களை இரட்சிக்க 
மாட்டு தொழுவத்திலே
புனிதனாய் பிறந்த ஒளி!

ஒளி தந்த வெளிச்சத்திலே
துயர் கொண்ட இருள் நீங்கி
வாழ்வை செழுமையாக்கிய  ஒளி!

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக