தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
நண்பர்கள் தின கவிதை | Nanbarkal thina kavithai
![]() |
| Friendship day kavithai |
உறவுகள் பலவிதம் என்று
உலகம் விதைத்து இருக்கிறது
நட்பு என்ற விதை ஒன்று
இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது!
ஒருமையும் (காதல்) பிடிப்பதில்லை
தனிமையும் (ஒரு தலை காதல்) பிடிப்பதில்லை
தோழர்கள் (நண்பர்கள் ) என்ற பன்மை
நட்புக்கு (உயிருக்கு ) பிடித்திருக்கிறது!
காதலை சல்லடை இட்டால்
வயதைச் சொல்லும்
நட்பை சல்லடை இட்டால்
உயிரை உணர்வை சொல்லும்!
விவரம் அறியும் முன்
நட்பு பூத்து விடுகிறது!
காதல் பிறக்க ஹார்மோன்கள் தேவை
நட்பு பிறக்க உயிரே தேவை!
பதில் இல்லா வினாக்கள்
நட்பில் எழுவதில்லை
நட்பான உறவுகள் பிரிவதில்லை
வேரிட்ட மரங்கள் நகர்வதில்லை!
குழந்தையின் கிறுக்கல்கள்தான்
ஆனாலும் புரிந்து விடுகிறது
நட்பாக கிறுக்கிப் பார்
ஆஹா! கிறுக்கல் எல்லாம் கவிகள்!
இரவின் இடைவெளி பகலா
பகலின் இடைவெளி இரவா
உயிரின் இடைவெளி நட்பா
நட்பின் இடைவெளி உயிரா!
மயில் இறகில் அழகு விழிகள்
குயில் குரலில் ஓர் சங்கீதம்
தூணிலும் துரும்பிலும் இறைவன்
துடிக்கும் இதயத்தினில் ஓர் நட்பு!
எனது இனிய தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
காதல் கனி | Kaathal kani
எட்டாத கனி அது காதல் என்று
சிலர் பறிக்க முயற்சி செய்கிறார்கள்
எட்ட முடியவில்லை ஆதலால்
சிலருக்குப் புளித்து விடுகிறது!
எட்டிப் பிடித்ததாய் உணர்ந்தவன்
முழுவதும் ருசிக்கும் முன்
தவறான முடிவெடுத்து விடுகிறான்
இதற்கா ஆசைப் பட்டோம் என்கிறான்!
எட்டிப் பிடிக்கவும் முடியவில்லை
எட்டிப் பிடிக்காமல் இருக்கவும் முடியவில்லை
இரண்டிற்கும் இடைப்பட்ட சம நிலை
தினமும் ருசிக்கிறான் காதல் கனியை !
சாலை விதிகள் | Saalai Vithikal
![]() |
| Saalai Vithak Kavithai |
வீட்டுக்கொரு வாகனம்
கட்டாயமில்லா கட்டாயம்
விதிமுறை அறிந்து பயணித்தால்
விபத்து ஒதுங்கி பயணிக்கும்!
தலைக்கொரு கீரிடமாய்
உயிர்க்கொரு கவசமாம்
தலைக்கவசம் கம்பீரமாய்
தலையினில் முடி சூடட்டும்!
வளைவுப் பாதையோ நளினம்
நளினத்திலே வேண்டுமோர் கவனம்
வாகனித்தில் ஒலி எழுப்ப
விபத்தை புறந் தள்ளலாம்!
விதிமுறை மீறிய வேகம்
விதியின் வசம் செல்லும்
விதியின் ஆணையோ
விபத்தை கொடுக்கும்!
வாழ்வில் பிற தடை கடந்து வர
வேகத் தடை கரம் கொடுக்கும்
வேகத் தடை அறிந்து பயணிக்க
அசம்பாவிதத்தில் தடை ஏற்படும்!
ஒளி நிற விளக்குகளில்
ஓர் மௌன ராகம்
ஓராயிரம் அர்த்தங்களுடன் !
நில் கவனி செல்!
முகப்பு விளக்கு பகலில் ஒளிர்ந்தால்
வாகன விபத்து மிகவும் குறைவு
முகப்பு விளக்கு பகலில் ஒளிரட்டும்
வாகன முகம் அதில் ஜொலிக்கட்டும்!
வாழ்க்கைக்கு ஓர் நெறிமுறை
சாலைகளுக்கு ஓர் விதிமுறை
நெறிமுறை மீறினால்
அவன் மனிதனே இல்லை!
விதிமுறை மீறினால்
அவனுக்கு வாழ்வே இல்லை!
மகளதிகாரம் - அட்சய பாத்திரங்கள் | Makalathikaaram
![]() |
| Thanthai Makal |
விருப்பமில்லா வெயிலோடு
சண்டையிட்டு களைத்து திரும்ப
முகம் பார்த்த என் வீட்டு கண்ணாடி
முகம் அலச உத்தரவிட்டது!
இரு கரங்கள் சிறு குவளையாய்
பொறுக்கிய நீர் தன்னில்
முகம் அலசி தொலைகாட்சி முன்
சம்மனமிட்டு அமர்ந்தாயிற்று!
தொலைக்காட்சி ஒலியை தாண்டி
செவியில் நுழைந்தது அந்த ஒலி
அப்பா சாப்பாடுறீயா ? - திரும்பினேன்
வெற்றுப் பாத்திரம் ஏந்தி என் மகள்!
அம்மா சாப்பாடு தருவாள் என்றேன்
அகம் கடிந்து கொண்டாள்
இன்று என் சமையல்
இப்போ நீ சாப்புடுவீயா ? மாட்டியா ?
மகளதிகாரம் என்பதால் அடங்கி விட்டேன்
பரிமாறு சாப்பிடலாம் என்றேன்
வெற்றுப் பாத்திரங்கள்
அணி வகுப்பெடுத்து முன் அமர்ந்தன!
இங்கே எங்கே சாதம் இருக்கிறது என்றேன்
விழி கொண்டு தேடியவள்
வெற்றுப் பாத்திரம் கையில் ஏந்தி
வெற்றுக் கரண்டியோடு பரிமாறினாள்!
இதழ்கள் திறந்து சிரித்து விட்டேன்
சாப்பிடும் போது என்ன சிரிப்பு ?
ஒழுக்கம் கற்றுக் கொடுத்தாள்
மீண்டும் மகளதிகாரம் அடங்கி விட்டேன்!
உப்பு காரம் எல்லாம் இருக்கா ?
காரம் இல்லா இனிப்பான கேள்வி
ஆம்மாமா! சூப்பரா இருக்கு என்றேன்!
சரி , சாப்பிடும் போது பேசாதே என்றாள்!
இடையிடையே வெற்றுக் கரண்டிகள்
இடைவிடாமல் பரிமாறின.
வேறு ஏதாவது வேணுமா ?
இடைவிடாத கேள்விகளும் தொடர்ந்தன!
வெற்று வயிறு நிரம்பியது
விடை பெறட்டுமா ? என்றேன்
இருப்பா, தண்ணீர் இங்கே இருக்கு என்றாள்
கரம் கழுவி எழுந்து நின்றேன்!
கரை படியா பாத்திரங்கள்
கழுவி கவிழ்த்து வைத்தாள்
விளையாட்டு முடிந்ததா? என்றேன்
சாப்பாடுதாம்ப்பா முடிந்து இருக்கு என்றாள்!
உணவை விளையாட்டு என்றெண்ணிய
உணர்வில்லா என் பெரு மூளையை
உணர்வுள்ள என் இதயம் சுட்டுவிட
உற்று நோக்கினேன் என் மகளையும்
உறங்கிய வெற்றுப் பாத்திரங்களையும்!
வெற்றுப் பாத்திரங்கள் எல்லாம்
பாசத்தின் அட்சய பாத்திரங்கள்
பரிமாறிய உணவுகள் எல்லாம்
பாசத்தின் பசி போக்கிகள்!
மகளதிகாரம் எல்லாம்
மரணம் தாண்டியும்
மரணிக்காமல் நினைவில்
மறவாமல் வர வேண்டும்!
வாழ்ந்து காட்டி விடு | Vaalnthu kaati vidu
![]() |
| Vaalnthu Kaatu |
காதலை அறிமுகம் செய்தவளே
வலியை சிறிது ஆற விடு
நாளைய நாளுக்கு வழி விடு!
விழிகளுக்கு ஓய்வு கொடு
கண்ணீருக்கு விடை கொடு
முகத்தை பொலிவாக்கி விடு!
சிரிப்பை எல்லாம் அள்ளி விடு
அதில் இன்பத்தை சற்று சிதற விடு
சிதறியதை என்னோடு பகிர்ந்து விடு!
உன் கனவில் என்னை வர விடு
கட்டியணைத்து ஆறுதல் சொல்ல விடு
உன் கண்ணீரை என்னோடு பகிர்ந்த்து விடு!
வாழ்க்கை கதவை திறந்து விடு
வெற்றி எனும் தென்றலை உலவ விடு
அமைதி வாழ்வை கரம் பிடித்து விடு!
விதி ரேகையை முற்றிலும் மாற்றி விடு
விடாது முயற்சிப்பவள் நிரூபித்து விடு
தோல்விகளை கைது செய்து விடு !
வழக்கம் போல சுழன்று விடு
வாழ்க்கை சுழற்சி நகர விடு
சரித்திரம் எட்டி பிடித்து விடு!
துன்பத்தை எல்லாம் மறந்து விடு
பெண் சிங்கமாய் வேட்டை ஆடி விடு
ஆண் சிங்கமாய் வீர நடை போட்டு விடு!
பாதத்தில் ஓர் இதயம் | Paathathil Oor Ithayam
![]() |
| Kaalkalil Or Kaathal |
அழகில் சில வகைகள் உண்டு
தேக நிறத்தை சிலர் அழகென்பர் !
உள்ளத்தை சிலர் அழகென்பர்
முக அமைப்பை சிலர் அழகென்பர்!
கருவிழிகள் ரசித்த எல்லாமே
படைப்பு எல்லாமே சிலர் அழகென்பர்!
சிந்தனை கோளாறோ வசியக் கோளாறோ
அவள் பாதங்கள் மட்டும் அழகென்றேன்!
காரணம் என்னவோ புரியாத கவிதை
கருங்கூந்தல் ரோஜா பூச்சூட மறந்து
பாத விரல் சூட நினைவூட்டியது போல
கனா சொன்ன காரணம் சற்றே ஏற்புடையது!
காற்றின் ஈரப்பதத்தை கவர்ந்திழுத்து
அதை பாத விரல் நுனியில் கீரிடமிட்டு
சிவந்த முகமாய் சிரிக்கிறது
பாத விரல் நகங்கள் எனும் கண்ணாடிகள்!
நாணம் கொண்டு தலை கவிழும் நேரம்
பாத விரல் நகம் கொண்டு
உன் முகம் நீ பார்ப்பாய்!
பத்து விரல்கள் ஜொலிக்கும் கண்ணாடிகள்!
நேரத்தை வீணடிக்கும் கவிதைகள்
உனது பாதங்களில் பிறப்பதில்லை
பாதத்தில் பிறந்து விட்ட கவிதைகள்
இதயத்தை வசியம் செய்ய மறப்பதில்லை!
தலையணை தலை சுமப்பதை விடுத்து
உன் பாத போதையை சுமக்கட்டும்!
ஆடை இல்லா பாத விரலில்
கவர்ச்சியும் இல்லை ஆபாசமும் இல்லை !
ஒரே இதயத்தை பாதம் தொட்டு
பத்து விரலுக்கும் காணிக்கையாக்கி
பாத அழகில் முழுவதும் மயங்கி
உன் பாதத்தில் சரணடைந்தேன்!
எளிமையான கவிதை | Elimaiyaana Kavithai
மே மாத வெயில் | May month Veyil
வாழ்த்துக்கு நன்றி | Vaalthukku nandri
சிலர் மற்றும் பலர் | Silar mattrum Palar
கலியுகத்திலும் நீதியின் கரம் பிடித்து
களைப்பு கொண்டு நடப்பவர் சிலர்
அதையே எள்ளி நகையாடி
களைப்பு இன்றி நடப்பவர் பலர்!
அரசியலை சேவை என்று
சுய வாழ்வை மறைந்தவர் சிலர்
அதையே பணம் என்றெண்ணி
படை பலமுடன் வருபவர் பலர்!
துன்பத்திலும் அமைதி காத்து
தனக்குள்ளே சிரிப்பவர் சிலர்
அதையே இன்பமாக்கி இதழால்
இதயத்தால் சிரிப்பவர் பலர்!
வெற்றியில் நிதானம் கொண்டு
தொடர் வெற்றி கொள்பவர் சிலர்
அதையே சாதனை என்றெண்ணி
அடங்காமல் திரிபவர் பலர்!
உடலும் அறிவும் செதுக்கிய திறமையை
தர்மத்திற்கு பயன்படுத்துபவர் சிலர்
அதையே திறமைக்கு விலையென்று
அதர்மத்திற்கு விலை போவர் பலர்!
சரித்திரங்கள் சிறகு விரித்து
அணைத்தது இன்றுவரை சிலர்
சரித்திரத்தில் இடம் பிடிக்க நினைத்து
சறுக்கிக் கொண்டவர் பலர்!
முட்டாள் தினம் கவிதை | April fool
![]() |
| Happy Fools day! |
கலியுக அரசியல்வாதிகளால்
சிந்திக்க மறந்த முட்டாளாகினோம்!
கற்பனை இல்லா உதாரணம் நாம்
நிச்சயம் கலப்படம் இல்லா உண்மை!
இலவச பொருட்கள் எல்லாம்
இலவசமாய் இன்று இல்லத்தில்!
இலவசத்தோடு இலவசமாய்
இலவச முட்டாள் இணைப்பிதழ் ஆனோம்!
ஊடகங்களின் அகோர பசிக்கு
உணவாக தினமொரு பொய்கள்!
குப்பை உணவான உண்மைகள்
உப்பில்லா உணவாய் முட்டாள் மக்கள்!
கார்ப்பரேட் எல்லாம்
சரியாய் சிந்திக்கும்
சரியாய் சிந்திக்கா மக்களை
சரியாக பயன்படுத்தும்!
சரி எது ? தவறு எது ?
அறிவாளியா ? முட்டாளா ?
தவறாய் சொல்வார்கள்
முட்டாள்தான் சரி என்று!
மணல் திருட்டெல்லாம்
கண் முன் கொள்ளை!
தினம் அறிந்து இதழ் திறக்கா
நாம் எல்லாம் முட்டாளின் எல்லை!
கட்சியின் கொள்கை எல்லாம்
கண்ட ---------ம் சொல்லும்!
பயணம் என்னவோ
ஊழலை நோக்கியே செல்லும்!
நாளும் ஏமாறுவதை
மூளைக்கு நினைவுபடுத்தவே
ஏமாற்றத்தை எடுத்துரைக்கவே
நமக்கென்று ஒரு நாள்!
முட்டாள் தினத்தை
கொண்டாடுங்கள்!
தலை கவிழ்ந்து நாணம் மறந்து
கொண்டாடுங்கள்!
முட்டாள் தின வாழ்த்துக்கள்!
நிலவின் அறியாமை | Nilavin Ariyaamai --
உலக தண்ணீர் தினம் கவிதை | World water day Kavithai
![]() |
| World Water Day |
(இளைய நிலா பொழிகிறதே பாடலின் சாயலில்)
நீர் வரவு குறைகிறதே
உலகமெல்லாம் காய்கிறதே!
விழி முடி செவி அடைத்து அலைகிறமே
மானுடரே அறிவில்லையோ ! ...(2)
நீர் வரவு குறைகிறதே...
வரும் காலம் அலங்கோலம்
தலைமுறை இனி தேய்பிறையோ
வரும் மழையில் ஒரு குளியல்
எண்ணமெல்லாம் இனி மறக்கும்! (2)
கானல் நீரிலே தாகம் தீருமோ
தண்ணீரில் முகம் காண அரிதாகுமோ
தண்ணீருக்கு வரிசை அமலாகுமோ
தண்ணீருக்கா சண்டை என்றாய்
சொன்ன சொல்லை நீ மறப்பாய்
சண்டையிட்டு அறிவிழப்பாய்
தண்ணீரை இழந்து நீ நிற்பாய்!(2)
வான வீதியில் வெண் சேலைகள்
இழந்த சேலையோ கரு மேகமோ
வான் மேகங்கள் விதவைக் கோலங்கள்!
நீர் வரவு குறைகிறதே...
கவிதை தேடல் | Kavithai Thedal done
உலக மகளிர் தின கவிதை | Ulaka makalir thinam kavithai
![]() |
| Women Day |
பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!
மணம் திறக்க இதழ் திறக்க
மல்லிகைகள் மறப்பதில்லை
அன்பு காட்ட மறப்பதில்லை
அன்னை மன பெண் இதயங்கள்!
இதயம் சில நேரம் பேச
இதழ்கள் அமைதி கொள்ளும்
இதழ்கள் அனபை நிராகரித்தால்
இதயம் பெரிதாய் எழுச்சி கொள்ளும்!
விழிகள் இரக்கத்தை பார்வையாகவும்
இதழ்கள் அன்பை சொற்களாகவும்
இதயம் தியாகத்தை துடிப்பாகவும்
உயிரோடு ஒட்டிக் கொண்டவள்!
மகளாய் பிறப்பெடுத்து
குல தெய்வமாய் உருமாறுபவள்
நதிகள் எல்லாம் பெண் பெயர் சூட
பூமியும் சூட்டிக் கொண்டது பூமா தேவியென்று!
உறவு முறை ஆராய்ந்து பார்த்தால்
உறவு படைத்த பிரம்மா ஆவாள்!
அன்னையாய் காதலியாய்
இன்னும் பல உறவுகள்!
கலியுக அறிவியல் ஆண் மகனையும்
தாய்மை அடையச் செய்யும்
இயல்பாய் பெண் சுரக்கும் அன்பை
இதயத்தோடு ஒட்டுவதில் தோல்வி கொள்ளும்!
பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!
மகளிர் தின வாழ்த்துக்கள்!.....
தேசிய அறிவியல் தினம் | Dhesiya Ariviyal thinam
ராமன் விளைவினால் வந்த விளைவு
தேசிய அறிவியல் தினமாம்!
அறிவினால் வந்த விளைவு அறிவியலாம்!
சிறீப் பாய்ந்து சிரித்து நிற்கின்றது
சிறகுகள் இல்லா ராக்கெட்கள்
செவ்வாய் கிரக செயற்கை கோள்கள்!
இல்லத்து இயந்திர பொருட்களில்
எண்ணிய வேலை சுகமாய் முடிக்க
கச்சிதமான அறிவியல் உண்டு!
விளையாட்டிலும் அறிவியல் புகுத்துவோம்
வீதியில் காந்தங்களோடு விளையாடுவோம்
விண்ணை தாண்டியும் தேடல் கொள்வோம்!
விடுமுறை காணாத அறிவினால்
மின் விளக்கினால் இரவும் பகலாயிற்று
பகலவனையும் படித்தாயிற்று!
முடியாது என்ற வார்த்தை எல்லாம்
விழி முடி பல நாளாயிற்று
அறிவியலுக்கு அடி பணிந்தாயிற்று!
இன்னும் சொல்லிச் செல்லலாம்
அறிவுக்கு எல்லை இல்லை - ஆதலால்
அறிவியலுக்கும் எல்லை இல்லை!
சர்வதேச உலக நீதி தினம் கவிதை | Sarvadesa Ulaga Neethi thinam
உன் இதயத் துடிப்பு போலவே
என் இதயத் துடிப்பும்
உன்னைப் போலவே
நீ பிறரையும் என்ன வேண்டும்!
உன் அகம் உன் சுற்றம் போல
என் அகம் என் சுற்றம்
நல் உறவுக்கும் நல் உணர்வுக்கும்
நீ கை குலுக்கிடல் வேண்டும்!
உன் உடல் உன் குருதி போல
என் உடல் என் குருதி
நல் சிந்தனைகள் மனதில் ஏற
சாதிகள் உடன் கட்டை ஏறட்டும்!
உன் மதம் போதிக்கும் அன்பைப் போல
என் மதம் போதிக்கும் அன்பு
மதங்கள் எல்லாம் ஒன்றே
மனங்கள் முழுமை பெறட்டும்!
உரிமைகள் முழு உருவம் பெற
அதிகாரம் அழிந்து போகட்டும்!
எல்லாமே சில காலம்
குற்றங்கள் மண்டி இடட்டும்!
தனி மனித ஒழுக்கங்கள்
முழுமையான ஒழுக்கம் பெறட்டும்!
நீதி தேவதையின் தராசுக்கு
வேலை இல்லாமல் போகட்டும்!
சர்வதேச தாய் மொழி தினம் கவிதை | Sarvadesa Thaai mozhi thinam
மொழியின்றி வாழ்வதில்லை
இல்லை இல்லை
தாய் மொழியின்றி வாழ்வதில்லை!
சிந்தனைக்கு கவி சுவை சூட்டவும்
இல்லை இல்லை
சிந்தனைக்கு கவி சுவை ஊட்டவும்,
நம் கலாச்சாரம் அழிந்து விடாமல்
இல்லை இல்லை
நம் கலாச்சாரம் சிதறி விடாமல்,
மொழியில் பிற மொழி புகாமல்
இல்லை இல்லை
மொழியில் பிற மொழி கலப்பிடம் ஆகாமல்,
இன்று வரை செம்மொழியாய்
இல்லை இல்லை
என்றுமே செம்மொழியாய்,
தாய் மொழியை மனதில் மறவாமல்
இல்லை இல்லை
தாய் மொழியை மனதில் மறைக்காமல்,
எங்கு நான் நடந்து சென்றாலும்
எங்கு நான் பறந்து சென்றாலும்
நிழலாய் பிற மொழி வரட்டும்!
உடலாய் உணர்வாய் உயிர்வாய்
ஆன்மாவாய், ஆம்! ஆன்மாவாய்!
என் தாய் தமிழ் மொழி வரட்டும்!
ஆன்மாவிற்கு அழிவில்லை!
தாய் மொழிக்கு நிகர் ஏதும் இல்லை!
இனிய காதலிக்கு | Iniya Kaathalikku done
கவிதைகள் எல்லாம்
உன்னை குற்றம் சொல்வதில்லை
மாறாக கடன் மட்டுமே பட்டிருக்கின்றன
இன்று சற்று அதிகமாகவே
கடன் பட்டிருக்கின்றன!
என் இனிய காதலிக்கு
பொய்மையின் உச்சம் | poimaiyin ucham
Vinayagar Sathurthi | விநாயகர் சதுர்த்தி
முதன்மை கடவுள் உன்னை நாங்கள் போற்றிடுவோமே!
உன் அருளும் கொண்டு நாங்களும்தான் வாழ்ந்திடுவோமே!
ஐங்கரம் கொண்டு நீயும் அருளிடுவாயே !
அருகம்புல் மகத்துவமும் புரிந்து கொண்டோமே!
உ எழுத்தை பிள்ளையார் சுழி ஆக்கியவன்
கஜம் முகம் கொண்டு கஜமுகன் ஆனவன்
அரச மரம் பலன் அறிந்து கொண்டவன்
அதையே இருப்பிடமாய் ஏற்றுக் கொண்டவன்!
தோப்புக்கரணம் அறிவியலை தொடங்கி வைத்தவன்
வழிபாட்டில் விஞ்ஞானத்தையே சேர்த்து வைத்தவன்!
தாய் தந்தை உலகம் என்று சொல்லி வைத்தவன்
ஓம் கார ரூபத்தின் இருப்பிடம் ஆனவன்!
உயிர்த் தோழிக்கு | to my best friend
என் உணர்வுக்கு உயிர் கொடுக்க
உள்ளத்து துள்ளல்களை சுகமாக்க
வாழ்நாள் கனவு சுக நிஜமாக்க
என் உள்ளத்து விழி காட்டிய வழி நீ !
கருமேக மழை குளிர் காற்றாய்
மனதோடு ஒட்டிக் கொண்டு
நிதமும் என் மனம் வருடும்
மதுரை மல்லித் தென்றல் நீ !
உன் குரல் என் செவி அறிந்து
உன்னதக் குரல் இதுவென்று
என் அகம் அது தினம் உணர்த்திற்று
தரணியில் சிறகில்லா தமிழ் குயில் நீ !
என் இதயத்திற்கு விழி கொடுத்து
அதற்கு இமை கொடுக்க நீ மறந்து
காலம் முழுதும் உன் உள்ளம் பார்க்க
இதய விழி கொடுத்த பிரம்மா நீ !
வாழை மடல் மென்மை நீ கொண்டு
வானுயர நற்குணம் அதில் விதைத்து
இன்முக நட்பை எனக்கு பரிசாக்கி
கண்ணீர் ஊற்றை நிறுத்தியவள் நீ !
வலியும் சுகமும் வாழ்வோடு நடை போட
வலியை நிரந்தரமாய் புறந்தள்ளி
சுகத்தை நிரந்தரமாய் எனதாக்கி
என் உள்ளத்துக்கு வரம் கொடுத்தவள் நீ !
முகம் பார்க்கும் காதலுக்கு
உலகத்தை உதாரணம் சொல்லி
உள்ளம் பார்க்கும் நட்புக்கு
உலகமாய் நம்மை உதாரணமாக்கியவள் நீ !
நரை தொடா கவிதை | white hair poem ||
மனக் கதவு | manak kathavu
தவற விட்ட கடந்த வாழ்க்கையை
விரல் நுனி கொண்டா தேடுவேன்
எங்கோ கதவுகள் தாழிடப்பட்டு
எதிர் முனையில் தேடுகிறேன்!
விதை இல்லா வேர் ஏதும் இல்லா
நட்சத்திரம் பூவாய் தெரியுது
என்னோடு நித்தமும் பயணித்த
வாழ்க்கை மட்டும் தெரியவில்லை!
என் சுவாசக் குழல் புகுந்த காற்றை
அறிவியல் செய்து கூட அறிந்திடுவேன்
ஆறறிவு கொண்டு அறிய முடியாததை
எவ்வறிவு கொண்டு அறிந்து கொள்வேன்!
எதிர் காலத்தை கனவுகள் சொல்லுது
கடந்த காலம் சொல்ல களைப்பாகுது
விழி மூடி தூங்கினால்தானே
கனவுகளும் ஏதேனும் வழி சொல்லும்!
காற்றோடு காற்றாய் கலந்தாலும்
சல்லடை இட்டு பிரித்திடுவேன்
காயங்களோடு மீட்டு விட்டாலும்
கண்ணீர் கொண்டு மருந்து இட்டுடுவேன்!
கடந்த வாழ்க்கை தவறவில்லை
களைப்போடு தேட வேண்டாம்
கவலை களைந்து விட்டு திறக்கலாம்
கதவுகள் இது மனக் கதவுகளே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


























