தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
இரவு நேரத்து இசைகள்
இசைகள் சுகமாய் செய்கிறது
கணக்கில்லா இம்சைகளை !
பாதங்கள் இல்லா ராகங்கள்
பறந்து வருவதில் ஆச்சர்யமில்லை!
ஒற்றை சிறகும் இல்லாமல்
பறந்து வருவதுதான் ஆச்சர்யம் !
மனித குயில்கள் இசை அலையில்
மயங்காமல் தவழ்ந்து வரும்
மனித செவிகள் அதில் மயங்கும்
விழி திறந்து மயங்குதல் ஆச்சர்யம்!
வாழை மடல் ஏறிய பாதங்கள்
வழுக்கி விழுதல் இயல்பு நிலை
இதய குழலில் படிந்த இசைகள்
தாலாட்டு பாடுவது ஆச்சர்யம்!
சொல்லாத காதல் எல்லாம்
இரவில் சுக இம்சைகள் புரியும்
மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்
சுக இம்சை புரிவது ஆச்சர்யம்!
இரவுகள் நீடித்தால் பல காதல்கள்
தன முழுமை நிலை அடைந்து விடும்
இரவு நேரத்து இசை கேட்டும் - நாம் எல்லோரும்
கவிஞன் ஆகாதது ஆச்சர்யமே!
பாதங்கள் இல்லா ராகங்கள்
பறந்து வருவதில் ஆச்சர்யமில்லை!
ஒற்றை சிறகும் இல்லாமல்
பறந்து வருவதுதான் ஆச்சர்யம் !
மனித குயில்கள் இசை அலையில்
மயங்காமல் தவழ்ந்து வரும்
மனித செவிகள் அதில் மயங்கும்
விழி திறந்து மயங்குதல் ஆச்சர்யம்!
வாழை மடல் ஏறிய பாதங்கள்
வழுக்கி விழுதல் இயல்பு நிலை
இதய குழலில் படிந்த இசைகள்
தாலாட்டு பாடுவது ஆச்சர்யம்!
சொல்லாத காதல் எல்லாம்
இரவில் சுக இம்சைகள் புரியும்
மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்
சுக இம்சை புரிவது ஆச்சர்யம்!
இரவுகள் நீடித்தால் பல காதல்கள்
தன முழுமை நிலை அடைந்து விடும்
இரவு நேரத்து இசை கேட்டும் - நாம் எல்லோரும்
கவிஞன் ஆகாதது ஆச்சர்யமே!
இந்த நாள் இனிய நாள்
![]() |
| இந்த நாள் இனிய நாள் |
பாதங்கள் இல்லா இரவுகள்
மெதுவாய் நடை போட
மேகத்தை விலக்கி
நிலவை அடைந்தேன்!
உன்னால் - இந்த நாள் இனிய நாள்!
கடந்து போன நேரங்களை
கடக்க போகும் நேரங்களை
அருகே பிடித்து அமர வைத்து
ஆணி அடித்து இருக்கச் செய்தாய்!
உன் நினைவுகளை மலர செய்தாய்!
இதழ் திறந்து இடை விடாமல் நீ பேச
இதயம் திறந்து இடை விடாமல் நான் பேச
உன் மொழி நான் புரிந்தேன்
என் மொழி பேச்சு மெதுவாய் நீ புரிவாய்!
இரு சக்கர வாகனத்தில் பயணித்து
இரண்டு துருவத்தையும் தொட்ட உணர்வு
இருந்தும் கேட்டுக் கொண்டேன்
இவ்வளவு நேரம் வாகனத்திலா பயணித்தோம்?
அருகே அமர்ந்து இலக்குகள் இல்லா
இடைவிடா பயணம் உன்னோடு!
எதிர் காற்று முகத்தில் மோத
உன் இதயத்தின் அரணாய் என் இதயம்!
உன் இதயம் பின்னே ! என் இதயம் முன்னே!
நியாபக மறதி நான் அறிவேன்
மயக்க நிலையும் நான் அறிவேன்
காதல் நட்பு நிலையும் அறிவேன் - ஆனால்
நம் நிலை நான் அறியேன்!
களங்கமில்லா இதயத்தோடும் பேசுகிறாய்
சிந்தித்து மூளையோடும் பேசுகிறாய்
உன் முழு குழப்பமாய் நான் இருக்க
உன் இதயம் பேசினால் உன் இதழுக்கு தண்டனை!
எதிர்பார்த்து தேடிய முடிவிலி அன்பு
கரம் தொட்டதாய் உணர்ந்தேன்
கரம் தொட வேண்டும் என்றேன்
இதயமும் இதழும் சேர்த்து முறைத்தாய்!
எங்கு சென்று முறையிடுவேன்
உன்னைத் தவிர எவர் உண்டு
தவறுதலாய் வேண்டுகோள் இட்டேன்
வந்த கவிதைகள் எல்லாம் ஓடி விட்டன
கவிதை இல்லா வெற்றுக் காகிதமாய் நான்!
எதில்தான் கவிதை இல்லை
உன் மூச்சிலும் உண்டு பேச்சிலும் உண்டு
என் இதயம் நிரம்ப கவிதையாய் நீ இருக்க
வெற்று காகிதமாய் நான் இல்லை
என் இதயம் முழுக்க கனத்த கவிதையாய் நீ!
நம் அகமும் முகமும் சந்தித்து
கடந்து போன அந்த நாள், என் இனிய நாள்!
இல்லை! இல்லை! நம் இனிய நாள்!
அன்னையர் தின கவிதை
![]() |
| அன்னையர் தின கவிதை |
உலக அகராதிகள் பாசம் என்றால்
உன் பெயரை முதலில் பொழியும்
உயிரைப் பிரித்து இன்னொரு உயிராய்
உலகிற்கும் உறவிற்கும் கை கொடுப்பாய்!
உனக்கென தனியாய் ஓர் சிந்தனை
உன் மனதை ஆட் கொண்டிருக்காது
உன் உறவைத் தவிர ஓர் சிந்தனை
உன் மனதில் துளியும் இருக்காது!
உன் முன்னுரையும் முடிவுரையும்
உறுதியாய் சொல்லலாம் உனக்கானதல்ல
உறுதியாய் சொல்லும் அனைத்தும்
உனது உறவை உறுதியாய் நிலை நிறுத்தும்!
நல்வார்த்தை நிதமும் நீ தருவாய்
உன் வேதனை ஏனோ தினம் மறப்பாய்
என் உள்ளம் மெலிய நிலை நேர்ந்தால்
உன் உயிரையும் விட்டு மீட்டிடுவாய்!
பத்து மாதம் அல்ல
முடிவிலி சுமையாய் இருந்தாலும்
சுமந்து இருப்பாய்!
முகம் காணாதிருந்தாலும்
முகம் சுளிக்காமல்
முதுகு வலி தாங்கிக் கொண்டே
முடிவிலி எண்ணிக்கையில்
முத்தங்கள் கொடுத்து இருப்பாய்!
அன்பை அளவிட நினைத்தேன்
எல்லை அதற்கு இல்லை என்றெண்ணி
கை விடும் நினைப்பை விதைத்தேன்
விதைத்த நினைப்பு மாறி முளையிடவே
அறிந்து கொன்டேன் - அன்னை இவளே
அன்பின் முடிவிலி இந்த அகிலத்தில்!
முதல் கவிதை எழுத முயற்சித்தால்
உன் அன்னையை நினைத்து விடு
கவிதை கடலென ஆர்ப்பரிக்கும்.
என்ன ஒரு ஆச்சரியம் என்றால்
கவிதையில் கற்பனை கலப்படம்
துளி அளவும் கலந்திருக்காது!
அன்னையின் முன்னே
சொல்லக் கூடாத உண்மை
எனக்கு பசிக்குது அம்மா!
சொல்லக் கூடாத பொய்
நான் சாப்பிட்டேன் அம்மா!
மீறியும் சொல்லி பாருங்கள்
அன்னையின் அர்த்தம் அறீவீர்கள்!
இதழ் கடித்து விழி உருட்டி
மிரட்டுவதில் இவள் கெட்டிக்காரி
என் இதழ் மட்டும் அல்ல
இதயமும் சேர்ந்தே சிரிக்கிறது!
தினமும் இதழும் சிரிக்கிறது
இதயமும் சிரிக்கிறது!
வான் உச்சிக்கு வந்த சூரியன்
கதிர் மூலம் என்ன சொல்லியதோ
தெரியவில்லை
என் பிள்ளையை காணவில்லை
புலம்பியபடி ஒரு தேடுதல் வேட்டை!
தெரு வீதிகழும் சந்தும்
இவள் பாசம் அறியும்!
மணி அடித்தால் சோறு
இது அம்மாவின் பாச ஜெயில்!
பல நேரங்ககளில்
மணி அடிக்காமழும் சோறு!
பசி என்னும் இரண்டெழுத்தை மறந்தேன்
பசித்து உண்ணுதலையும் மறந்தேன் !
இவளுக்கான உணவை
இரவுகள் எடுத்து வைக்கிறது
எஞ்சிய உணவுகள்
எல்லை அது இல்லை | pookkal kavithai --
மொட்டுகளுக்கு இனிக்கிறது
இதழுக்கு வலிக்கிறது!
முனகல்களில் சுக வலி அறிந்து
முறித்து விட முயற்சிக்க
கரங்களோ தலை கோதுகிறது!
இடம் மாறும் இதழுக்கு
இடைவெளி சிறு தாண்டி
இன்னும் ஓர் மொட்டு மலர்கிறது!
இடம் மாறும் இதழுக்கு
இடைவெளி சிறு தாண்டி
இன்னும் ஓர் மொட்டு மலர்கிறது!
உணர்ச்சி உள்ள பூவிது - ஆதலால்
கசங்கல்களை புறக்கணிக்கிறது
கனவுகள் நினைவு ஆகுவதால்!
பூக்களில் இது
சற்று வித்தியாசம்தான்
பறித்திடவே ஏங்குகிறது!
மெலியாத இயல்பான சிறிய இடையை
விரல் நுனி விழி கொண்டு
உற்று நோக்கி தழுவுகிறது!
வியர்வை ஈரத்தில் இதழ் நழுவ
இன்னும் சுக தேடுதல்
அவள் ஒரு தொடர் கதையாய்!
பூக்களின் நுனியில் மொட்டுக்கள்
பூமேனியில் இது அதிசயம் - ஆதலால்
எல்லை தவுறுதல் சாத்தியம்!
எல்லை அது இல்லை!...!..!
காதலர் தின கவிதை - பிப்ரவரி - 14
ஆராய்ச்சியிலும் பிடிபடா
காலாவதி பெயரளவிலும் இல்லா
காலம் கடந்தும் வாழ்ந்தும் வாழ்ந்திட்ட
வாழ்ந்து கொண்டிருக்கும் காதலே!
மெதுவாய் சுகமாய் நீ என் இதயம் தொட
என் கரமோ காதல் கவிதை தொட
நழுவி விட்டன கவி வார்த்தைகள்
எட்டிப் பிடித்து கரம் கொடுத்தாய்! - காதல்
கரமும் பிடித்தேன்! கவிதையும் பிடித்தேன்!
உதிக்கும் சூரியனும் மலரும் நிலவும்
புரியாத வார்த்தைகள் தினம் சொல்லும் - காதலே
என் விழி நோக்கி விளக்கவுரை சொல்வாய்!
கண்டதெல்லாம் புரிகிறது
காதல் மட்டும் புரியவில்லை - இருந்தும்
காதலிக்க தகுதி உன்னால் பெற்றேன் !
எத்திசை தேடினும் நிலவாய் காதலி முகம்
நேர் எதிரே எதிரொலி எதிரொளியாய்
காதலே ! எல்லாமே உன் மாய ஜாலம்!
காதல் என்றால் சும்மாவா ? உலகமே குலுங்கும்!
வான் புவி எத்திசை நோக்கினும் காதலே!
தனிமை சற்று கிடைத்தால்
தானியங்கி ஒலி பெருக்கியாய்
இரு வரி இதழ்கள் மாறும்!
இலவச இணைப்பாக
இதழ் சிரிக்கவும் செய்யும்!
எல்லாமே காதல்/காதலியின் பரிசு!
மாலை மயங்கும் சூரியன்
காலையில் விழிக்கும்
பொழுது மறைந்தாலும்
பொழுது மலர்ந்தாலும்
காதலர்கள் விழிப்பதில்லை!
விழிக்காமல் இருப்பதில்
வியப்பு ஏதும் இல்லை!
மாலை கருக்கல் மலர வேண்ட
கதிரவனை வழி அனுப்பி
சில மனது கவிதை தேடி
காதலி முகம் அதில் காணும்!
கவிதை அறியா மனது
கனவில் கால் பதிக்கும்!
கவிதையும் கனவும்
காதலின் இரு கண்கள்!
முழு நிலவு வானில் தொங்கும்
எதிரொளி நிலவு கடல் அலையில்
அங்கும் இங்கும் சிதறும்!
வேடிக்கை பார்க்கும் முழு நிலவு
உன்னத சுகம் அதில் காணும்!
காதலை விளக்கியாயிற்று!
தினம் ஓர் இன்பம் கிடைக்கும்
அந்த இன்பத்திற்கு பெயர் சூட்ட
மனமும் மூளையும் தடுமாறும்!
இந்த இன்பமும் தடுமாற்றமும்
இறுதி ஆயுள் வரை வேண்டுமா?
எனில் - காதலித்துப் பாருங்கள்!
வாழ்க காதல் ! வளர்க காதலர்கள்!
காதலர் தினத்துக்கான இன்னும் ஓர் கவிதை படிக்க லிங்கை கிளிக் செய்யவும்...
குடியரசு தின கவிதை | Kudiyarsu thina Kavithai
![]() |
| Kudiyarsu thina kavithai |
இடைவெளி இல்லா காற்றாய்
பாரதம் எங்கும் சமத்துவம் தொடர
நகருகின்ற தனி ஊசலாய்
சம உரிமை தொடர்ந்து நீடிக்க
காலம் காட்டும் கடிகாரமாய்
அனைவருக்கும் ஒரே சட்டம்!
அன்று முதல் இன்று வரை
முடிவை எட்டா தீப ஒளியாய்
வேற்றுமையில் ஒற்றுமை
நம்மோடும் நம் உணர்வோடும்
தினமும் பயணம் செய்ய
வழி வகுத்த அரசியல் அமைப்போடு
அனைவரும் பயணிப்போம்!
இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!
இழப்பில் மகிழ்ச்சி | சிகரெட் கவிதை
tamil christmas songs | தமிழ் கிறிஸ்துமஸ் பாடல்
Tamil Christmas song
அகரத்தின் அகரமே, இயேசுவே
உலக அகரத்தில் நீ அகரமே!
இதழ் படிக்கும் பைபிளிற்கு நீயே அகரம்
படித்து உணரும் இதயத்திற்கும் நீயே அகரம்
நகரும் உலகிற்கு உந்தன் ஒளியே அகரம் - (2)
தடம் பதிக்க வரும் எல்லா கருவுக்கும் நீ அகரம்
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2)
உருகும் அன்புக்கு உலகில் நீயே அகரம்
உருவாகும் அன்புக்கும் நீதான் என்றும் அகரம்
உன்னதங்கள் எல்லாவற்றிலும் நீதான் அகரம்
அதை காத்திட துடிப்பதில் நீதான் அகரம் - (2)
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2) இதழ் படிக்கும்
தாய் தேற்றும் அன்புக்கு உந்தன் அருளே அகரம்
தவமாய் தந்தை அருளும் வலிமைக்கு நீயே அகரம்
குதூகலமாய் குடும்பம் காரணம் நீதான் அகரம்
உன் அகரத்தின் துணையாய் உன்னோடுதானே என் அகரம் - (2)
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2) இதழ் படிக்கும்
Birthday kavithai in tamil | காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து
பைத்தியக்காரன் - done
![]() |
| Paithiyakaaran Kavithai |
பாதங்கள் வகுத்த வழியோடு
வலிக்காமல் பயணித்து
உடல் சொல்லி அமர்வது என் வழக்கம்!
சில நேரம் காதல் கொண்ட வாழ்க்கை
சில நேரம் உதறிய உறவுகள் - என்னை
தனிமையில் உலவ வைக்கிறது!
சில நேரங்களில் சாப்பாடு பிச்சையாக
சில நேரங்களில் தானமாக
சில நேரம் விதி உடன் வருவதில்லை!
உலகத்துக்கு என்னை பிடிக்கவில்லை
எனக்கும் உலகம் புடிக்கவில்லை
பூமிக்கு தத்துப் பிள்ளை - ஆதலால்
விட்டு வைத்திருக்கிறது!
அழகை மயக்கும் ரோஜாவும் தெரியும்
பகையை முடிக்கும் கூர்முனை கத்தியும் தெரியும்
காதலும் பகையும் தெரிவதில்லை!
இரவில் தாய் மடி தேடி அலைந்தேன்
தேடலில் எதுவும் எட்டவில்லை
சாலையோர மேடையே இறுதியில் தாய் மடியாய்!
நான் உளறுவது பிற விழிகளுக்கு தெரியும்
நான் அழுவது எனது விழியில் புலப்படாது
பைத்திய மனஙகள் மனதுக்குள் அழுகிறது!
பனியும் வெயிலும் பாடம் நடத்தின
கிழிந்து போன என் கந்தல் துணிக்கு
எந்த பாடமும் விளங்கவில்லை!
கண்ணீர் வந்தே தேய்பிறையானேன்
மதிப்பில்லா என் கண்ணீருக்கு
வளர்பிறை என்ன தேய்பிறை என்ன ?
எல்லை என்று சொல்வது எதிலும் உண்டு
எண்ணில் அந்த எல்லையை தேடினேன்
எட்டாத என் எல்லையை என்னவென்று சொல்ல !
வயிறு பசித்தால் சாப்பாடு
தாகம் எடுத்தால் தண்ணீர்
பஞ்சத்திற்கு வளைந்தது என் உடல்!
இதுவும் கடந்து போகும் என்ற
பொருந்தாத வார்த்தையுடன் அழுகிறேன்
கடைசிவரை பைத்தியக்காரனாய்!
ரசிகர்கள் அல்ல வெறியர்கள்
![]() |
| Cinema Veriyarkal |
சினிமா என்றால் பொழுதுபோக்கு
மறந்து விட்டது பல பேருக்கு
சிந்தனை எல்லாம் மழுங்கி இருக்கு
விழிக்காத மூளை மயக்கத்தில் இருக்கு!
நடித்தவன் உச்சியில் இருப்பான்
ரசித்தவன் எங்கே இருப்பான்
ரசித்த போதை தெளிந்து விடும்
வெறி கொண்ட போதை கூடி விடும்!
முதல் முறை திரை நோக்க
சில நூறு ரூபாய்கள்
இரண்டாம் முறை திரை நோக்க
சேமிப்பதில் அரை குறைகள்!
நடிகனின் முகத்தில் முகத்திரை - அதை
அறியாத மனதில் மனத்திரை
முகத்திரை விலகி விடும்
மனத்திரை ஒட்டி விடும்!
அரசியலுக்கு சினிமா முதல் படி
ரசிகனுக்கு அதுவே கடைசி படி
இனி இங்கு இல்லை வேறு படி
எப்படி வாழ்வது முறைப்படி!
திரை வடிவில் மனம் கெட்டான்
இனி எதன் வடிவில் அதை மீட்பான்
மனமும் திரையும் ஒன்றல்ல
மனம் முன் திரை பெரிதல்ல!
அஜித்தும் நடிகரே விஜயும் நடிகரே
ரசிகன் இருவரையும் ரசிக்கிறான்
வெறியன் ஒருவரை துதி பாடுகிறான்
இவர்கள் ரசிகர்களே அல்ல வெறியர்கள்!
சிறகுகளுக்காய் ஓர் ஏக்கம்
கிடைத்தே தீரும்
ஒரு பொழுதும் நேராது
நம்பிக்கை இல்லாத சூழல்
ஒரு பொழுதும் வாராது!
செய்து விட்ட புண்ணியங்கள்
பலன் தராமல் போவது இல்லை
செய்து விட்ட பாவங்கள்
கை விட்டுப் போவது இல்லை!
கைக்கு எட்டாத காதலியை நினைத்து
எழுதிய கவிதைகள் பலம் பெறும்!
எட்டாத வெற்றியை தொட்டு விட
எட்டும் முயற்சிகள் தோற்பதில்லை!
விழி கசிந்த கண்ணீரில்
மெய்மை சுரந்திருப்பின்
வருங்காலம் பதில் சொல்லும்!
காலம் நீளலாம், பொய்மை நீளாது!
நிமிர்ந்து நிற்பது தைரியம் என்று
தோள் நிமிர்த்தி சொல்பவர்
வளைந்து கொடுப்பது பலகீனம் என்று
தவறிய சொல் வழி நடப்பர்!
அறிவாளி என்று தன்னை உணர்ந்தால்
முட்டாளாய் முன்னோக்கி செல்வாய்
விதியானாலோ அறிவினாலோ
கிடைப்பவை நிச்சயம் கிடைத்தே தீரும்!
கைக்கு எட்டாத காதலியை நினைத்து
எழுதிய கவிதைகள் பலம் பெறும்!
எட்டாத வெற்றியை தொட்டு விட
எட்டும் முயற்சிகள் தோற்பதில்லை!
விழி கசிந்த கண்ணீரில்
மெய்மை சுரந்திருப்பின்
வருங்காலம் பதில் சொல்லும்!
காலம் நீளலாம், பொய்மை நீளாது!
நிமிர்ந்து நிற்பது தைரியம் என்று
தோள் நிமிர்த்தி சொல்பவர்
வளைந்து கொடுப்பது பலகீனம் என்று
தவறிய சொல் வழி நடப்பர்!
அறிவாளி என்று தன்னை உணர்ந்தால்
முட்டாளாய் முன்னோக்கி செல்வாய்
விதியானாலோ அறிவினாலோ
கிடைப்பவை நிச்சயம் கிடைத்தே தீரும்!
கிருஷ்ண ஜெயந்தி கவிதை
![]() |
| Krishna Jeyanthi Kavithai |
கீதையின் குருவாய்
வாழ்க்கையின் வழி காட்டியாய்
எண்ணங்களின் கண்ணாடியாய்!
புல்லாங்குழல் காற்றில் இசையாய்
குறும்புகளில் ஓர் கதையாய்
மயிலிறகில் ஓர் கண்ணனாய்!
மேகத்தில் மறையும் நிலவாய்
வாடா நட்சத்திர பூவாய்
வெண்ணெயையும் தாண்டிய வெண்மையாய்!
உடலைத் தாண்டிய ஆன்மாவாய்
உடலைத் தாண்டிய வீரமாய்
உன் நாடகத்தில் நானும் ஒருவனாய்!
நீல நிறத்தில் ஓர் குழந்தையாய்
அதர்மத்திற்கு எதிராய் தர்மமாய்
கிருஷ்ண வேடமிட்ட மழலையாய்!
ஆயர்பாடியில் ஓர் கண்ணனாய்
லீலைகளில் ராச லீலையாய்
காதலை எல்லாம் ஆட்கொண்டவனாய்!
மரணம் எட்டாத என் ஆன்மாவாய்
கிருஷ்ண ஜெயந்தி அவதாரமாய்
வெண்மை இதயங்களோடு வாழ்வாய்!
ஸ்ரீ ராம ஜெயம்!
அழகு மாறா விழிகள் | Alaku maara vilizhikal
![]() |
| Alaku vilikal |
அறிவியல் ஆர்வம் இல்லை
ஆர்வம் இருந்திருந்தால்
என்றோ சொல்லியிருப்பேன்
கருப்பு வானவில் உன் புருவம் என்று!
விழிகளின் கவசமாய்
இமை முடிகள்
உன் விழி
கூர் ஆயுதமாய் இருக்க
எதிர் பார்வை
சுடத் துடித்தேன்
என் கவசங்களோ
வெற்று முடிகளாய்!
இயல்பிலே
விழியோரம் கண்மை கொண்டு
அழகு தேவதையாய்
பூமியில் பிறந்தவள்
கண்மைக்கு
உன் விழியோரம் வேலை இல்லை
இயல்பாய் வசியமாய்
வசிய மை கூடுதல் சிறப்பு!
புவி ஈர்ப்பு விசையையும் ஏமாற்றி
உன் விழி ஈர்ப்பு விசையால்
புவியில் விழுந்தது நிலவு என்று
அறிவியலும் வரலாறும்
நாளை மாறும்!
என்றும் அழகு மாறா
உன் விழிகளுக்கு
சமர்ப்பணம்!
பறிக்கப்படுகின்ற முத்தங்கள் | Parikapadukindra Muthankal
கலைஞர் கருணாநிதி கண்ணீர் அஞ்சலி | Karunaanithi Anjali
Karunanith
ஏதோ ஒரு புள்ளியில்
உன்னால் ஒரு முதல் பட்டதாரி!
ஏதோ ஒரு புள்ளியில்
உன்னால் ஒரு இலவச மின்சார விவசாயி!
ஏதோ ஒரு புள்ளியில்
உன்னால் ஒரு வள்ளுவன் சிலை!
ஏதோ ஒரு புள்ளியில்
உன்னால் ஒரு மாற்றுத் திறனாளி!
ஏதோ ஒரு புள்ளியில்
உன்னால் ஒரு திருநங்கை!
இன்னும் எத்தனை புள்ளிகளோ
அத்தனை புள்ளிகளும் முத்தமிடுகிறது
உன் கையொப்பம் இட்ட எழுதுகோலில்!
எழுதுகோலுக்கு மரணம் இருக்கலாம்
எழுதிய எழுத்துக்களுக்கு மரணம் இல்லை!
எனது இனிய உடன் பிறப்புகளே!
நண்பர்கள் தின கவிதை | Nanbarkal thina kavithai
![]() |
| Friendship day kavithai |
உறவுகள் பலவிதம் என்று
உலகம் விதைத்து இருக்கிறது
நட்பு என்ற விதை ஒன்று
இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது!
ஒருமையும் (காதல்) பிடிப்பதில்லை
தனிமையும் (ஒரு தலை காதல்) பிடிப்பதில்லை
தோழர்கள் (நண்பர்கள் ) என்ற பன்மை
நட்புக்கு (உயிருக்கு ) பிடித்திருக்கிறது!
காதலை சல்லடை இட்டால்
வயதைச் சொல்லும்
நட்பை சல்லடை இட்டால்
உயிரை உணர்வை சொல்லும்!
விவரம் அறியும் முன்
நட்பு பூத்து விடுகிறது!
காதல் பிறக்க ஹார்மோன்கள் தேவை
நட்பு பிறக்க உயிரே தேவை!
பதில் இல்லா வினாக்கள்
நட்பில் எழுவதில்லை
நட்பான உறவுகள் பிரிவதில்லை
வேரிட்ட மரங்கள் நகர்வதில்லை!
குழந்தையின் கிறுக்கல்கள்தான்
ஆனாலும் புரிந்து விடுகிறது
நட்பாக கிறுக்கிப் பார்
ஆஹா! கிறுக்கல் எல்லாம் கவிகள்!
இரவின் இடைவெளி பகலா
பகலின் இடைவெளி இரவா
உயிரின் இடைவெளி நட்பா
நட்பின் இடைவெளி உயிரா!
மயில் இறகில் அழகு விழிகள்
குயில் குரலில் ஓர் சங்கீதம்
தூணிலும் துரும்பிலும் இறைவன்
துடிக்கும் இதயத்தினில் ஓர் நட்பு!
எனது இனிய தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
காதல் கனி | Kaathal kani
எட்டாத கனி அது காதல் என்று
சிலர் பறிக்க முயற்சி செய்கிறார்கள்
எட்ட முடியவில்லை ஆதலால்
சிலருக்குப் புளித்து விடுகிறது!
எட்டிப் பிடித்ததாய் உணர்ந்தவன்
முழுவதும் ருசிக்கும் முன்
தவறான முடிவெடுத்து விடுகிறான்
இதற்கா ஆசைப் பட்டோம் என்கிறான்!
எட்டிப் பிடிக்கவும் முடியவில்லை
எட்டிப் பிடிக்காமல் இருக்கவும் முடியவில்லை
இரண்டிற்கும் இடைப்பட்ட சம நிலை
தினமும் ருசிக்கிறான் காதல் கனியை !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



























