தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள் ,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள் காதலிக்கு வாழ்த்து பேஸ்புக் ஸ்டேட்டஸ் தந்தையர் தின வாழ்த்து
மழை மொட்டுக்கள் | malai mottukkal
காய்ந்த முள்ளின் நுனியில்
மலர்ந்து விட்டன
மழைத் துளையின் மொட்டுக்கள்!
முடிவு
முடிவு காணும் முன்
முடிந்து விட்ட கவிதை
முற்று பெற்ற வாழ்க்கை!
எல்லாம் தாண்டி | Ellam thaandi
![]() |
| Vibachaari Kavithai |
பசி தீர்க்கும் எல்லா உணவிலும்
ஏதோ ஒரு முனகல் அறிந்தேன்!
தேக ஆசை கொண்ட ஆடவனின்
பணத்தின் உணர்ச்சி என்று அறிந்தேன்!
தேக ருசி கொண்ட கழுகுகள்
வீடு வாயில் வரை தூரத்தின!
கட்டிலோடு தொலையவில்லை
கடந்து போன கட்டில் உறவுகள்!
பேருந்தில் உரசுபவன் முன்னே
தலை நிமிர்ந்து பேசுகிறேன்
பத்தினி வேஷம் போடுகிறேன்
என் தொழில் அவன் அறியாதலால்!
பல வீட்டு கட்டில் கால்கள்
பழுதடைந்தோ சுகமில்லாமலோ ஆனதால்
பழகிப் போனது பலருக்கு என் கட்டில்
பக்குவப்பட்டு நாசமானது என் மனது!
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
மறைமுகமாக சொல்லி செல்கிறது
ஒவ்வொரு கடந்த இரவுகளும்
சில நாள் என் தேகத்திற்கு விடுமறை!
வளையல் என்றால் உடைகிறது
காப்பு என்றால் வளைகிறது
அணியும் ஆபரணங்கள் உணர்த்துகிறது
கலியுக ஆடவர்களின் காம ஆசையை!
கசங்காமல் உடுத்தி செல்லும் ஆடை
கசங்காமல் திரும்பி வர
கசங்கிய காகித பண கையோடு
கசங்கி இருக்கும் என் தேக மது!
பாதங்கள் படிதாண்டி வெளியேற
வழி மறித்து நிற்கும் மகனிடம்
பதில் எதுவும் சொல்லமுடியவில்லை
எங்கு செல்கிறேன் என்று!
செய்யும் தவறுக்கான காரணத்தோடு
இதழ் சிரித்து இதயம் அழுது
நகர்கிறது என் வாழ்க்கை
கலியுக ராமர்கள் இல்லை - ஆதலால்!
ஏதோ ஒரு முனகல் அறிந்தேன்!
தேக ஆசை கொண்ட ஆடவனின்
பணத்தின் உணர்ச்சி என்று அறிந்தேன்!
தேக ருசி கொண்ட கழுகுகள்
வீடு வாயில் வரை தூரத்தின!
கட்டிலோடு தொலையவில்லை
கடந்து போன கட்டில் உறவுகள்!
பேருந்தில் உரசுபவன் முன்னே
தலை நிமிர்ந்து பேசுகிறேன்
பத்தினி வேஷம் போடுகிறேன்
என் தொழில் அவன் அறியாதலால்!
பல வீட்டு கட்டில் கால்கள்
பழுதடைந்தோ சுகமில்லாமலோ ஆனதால்
பழகிப் போனது பலருக்கு என் கட்டில்
பக்குவப்பட்டு நாசமானது என் மனது!
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
மறைமுகமாக சொல்லி செல்கிறது
ஒவ்வொரு கடந்த இரவுகளும்
சில நாள் என் தேகத்திற்கு விடுமறை!
வளையல் என்றால் உடைகிறது
காப்பு என்றால் வளைகிறது
அணியும் ஆபரணங்கள் உணர்த்துகிறது
கலியுக ஆடவர்களின் காம ஆசையை!
கசங்காமல் உடுத்தி செல்லும் ஆடை
கசங்காமல் திரும்பி வர
கசங்கிய காகித பண கையோடு
கசங்கி இருக்கும் என் தேக மது!
பாதங்கள் படிதாண்டி வெளியேற
வழி மறித்து நிற்கும் மகனிடம்
பதில் எதுவும் சொல்லமுடியவில்லை
எங்கு செல்கிறேன் என்று!
செய்யும் தவறுக்கான காரணத்தோடு
இதழ் சிரித்து இதயம் அழுது
நகர்கிறது என் வாழ்க்கை
கலியுக ராமர்கள் இல்லை - ஆதலால்!
என் கல்லூரி காதல் க(வி)தை
என் கல்லூரி காதல் க(வி)தை
எட்டிப் பிடிக்க நினைத்த கவிதையெல்லாம்
என்னைக் கண்டும் காணமல் செல்ல
எட்டிப் பிடித்துக் கொடுத்தவள்
எனதருகே வராமல் ஒதுங்கிச் சென்றாள்!
அவள் விழியோ காந்தத்தின் வட துருவம்
என் விழியோ காந்தத்தின் தென் துருவம்
இருந்தும் ஏன் இருவரும் ஓட்ட வில்லை
காதல் அறிவியலை சபித்துக் கொண்டேன்!
இருந்தாலும் என்றாவது ஒட்டிக் கொள்ளும்
அதுதான் காந்த விழியின் காதல் அறிவியல்
வகுப்பு முடிந்து கலைந்து செல்வோரில்
கவனமாய் தேடும் எனது தேடல் விழிகள்!
நட்சத்திர அணி வகுப்பாய் பெண்கள் செல்ல
ஒற்றை முழுமதியாய் அவள் செல்வாள்
இவள் வருகை எதிர்பார்த்து நந்தவன தேராய்
தன்னிலை மறந்து காத்திருக்கும் பேருந்து எண் 4!
இவள் பாதம் பேருந்தினுள் மெல்ல பதிய
பேருந்து இயந்திரமும் காதல் கொள்ளும்
இயந்திர மனிதனாம் எந்திரனைப் போல!
எட்டி நின்று ரசிப்பேன் மகளிர் பேருந்து ஆதலால்!
தொடரும்...
பஞ்சுப் பொம்மை | panjup pommai
பஞ்சணையில் அமர்ந்திருக்கிறது
பஞ்சுப் பொம்மை!
உன் கூந்தல் பூக்கள்!
காதல் சொல்ல வந்தேன் | Kaathal solla vanthen
![]() |
| Kaathal sol |
என் விழிகள் நகலெடுத்த
முதல் காதல் நிழற்படமாம் நீ!
காதல் அறியாத உன் விழிகள்
முதல் காதலை உணரட்டும்!
சிறகில்லாமல் பறக்கும் கருங்கூந்தலில்
சிறகில்லாமல் மாட்டியவன் நான்!
கருங்கூந்தலில் கருப்புநிற வேரிட்டு
கடைசிவரை வாழ நினைக்கிறேன்!
பாரமில்லா உன் இடை அழகால்
பாதங்கள் சுகம் பெற்றிருக்கிறது!
பாரம் தாங்க பழகி கொள்கிறது
பாரமில்லா என் காதல் இதயம்!
பிறவிக்குருடன் பார்வை பெற்றேன்
அதிலும் முதல் பார்வை உன் முகம்!
வானம் இடிந்து வீழ்ந்த நிலா
வீற்றிருக்கிறது உன் நெற்றியில்!
விரல் தொடா வீணையாய்
வீணாய் போகாது என் வாழ்வு!
உன் கரம் தொட காதல் நடையோடு
வந்தேன் ! காதல் சொல்ல வந்தேன்!
அவள் கண்கள் | Aval Kankal
கண்ணாடி முகம் | Kannadi Mukam
ஜோதிட வாழ்க்கை | Jothida vaalkai
பூ முகமாய் கவிப் புன்னகை | Kulanthai Sirippu
![]() |
| Smile |
உன் மழலை முகம் கண்ட பிற முகங்கள்
பிரம்மன் படைத்த அழகோ யென வருணிக்க
நாத்திகனும் ஆத்திகனாய் உரு மாறினான்!
பிரம்மன் படைத்த அழகோ யென வருணிக்க
நாத்திகனும் ஆத்திகனாய் உரு மாறினான்!
ஏட்டில் எழுத மனம் நினைத்த கவிதைகள்
வீடு வாயில் நுழையும் முன் மறந்து விட
உன் இதழ் சிரிப்பால் நினைவுபடுத்தி விடுவேன்!
வீடு வாயில் நுழையும் முன் மறந்து விட
உன் இதழ் சிரிப்பால் நினைவுபடுத்தி விடுவேன்!
உன் போன்ற சிரிப்பு எவரிடமும் இல்லையென
நான் சிந்தித்து தெளிவு முடிவு பெறும் முன்
மீண்டும் ஒருமுறை சிரித்து விடுகிறாய்!
நான் சிந்தித்து தெளிவு முடிவு பெறும் முன்
மீண்டும் ஒருமுறை சிரித்து விடுகிறாய்!
சுழலும் மின் விசிறி உன் சிரிப்பை தூண்டிவிட
சுழலுகின்ற பூமி ஆச்சர்யமாய் தெரியவில்லை
மின்விசிறிதான் ஆச்சர்யமென்று சொல்லி விடுவேன்!
சுழலுகின்ற பூமி ஆச்சர்யமாய் தெரியவில்லை
மின்விசிறிதான் ஆச்சர்யமென்று சொல்லி விடுவேன்!
சொந்தங்கள் எல்லாம் உன்னோடு விளையாட
உன்னோடு உன் பொம்மையாய் நான் விளையாட
எண்ணிய எண்ணம் ஈடேராமல் நொந்து விடுவேன்!
உன்னோடு உன் பொம்மையாய் நான் விளையாட
எண்ணிய எண்ணம் ஈடேராமல் நொந்து விடுவேன்!
தியானம் என்பது மன அமைதி தரும் என்றால்
நித்திரை கொள்ளும் உன் பூ முகம் கண்டு
விழி திறந்தும் நான் தியானம் கொள்வேன்!
நித்திரை கொள்ளும் உன் பூ முகம் கண்டு
விழி திறந்தும் நான் தியானம் கொள்வேன்!
கவி எழுத மறுக்கும் பேனாவிற்கு எல்லாம்
உரிமை கொண்ட வார்த்தை இல்லா கவிஞன்
உன் முகம் கண்டால் கவி எழுதி விடுவான்!
உரிமை கொண்ட வார்த்தை இல்லா கவிஞன்
உன் முகம் கண்டால் கவி எழுதி விடுவான்!
அவ்வாறு உன் மழலை முகம் தினம் கண்டு
தினமொரு கவி எழுதும் உன் ரசிகன்
உன் முக அமைப்போடு உன் தந்தை நானானேன்!
தினமொரு கவி எழுதும் உன் ரசிகன்
உன் முக அமைப்போடு உன் தந்தை நானானேன்!
ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் எனது கவிதையின் வரியில் | Anantha yzhalai meetukiraai
சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது
உன்னோடு காதல் கொள்ளுதடி
உன் விரல் மென்மை உணர்ந்து விட்டேன்
அது பூவிதழ் தாண்டி அறிந்து விட்டேன்
உன் புன்னகை தாண்டி உலகம் சொல்ல
உலகிடம் எதுவும் இல்லையடி
சோர்ந்து கிடக்கும் நெஞ்சங்கள் எல்லாம்
உன்னிடம் சுகங்கள் பெற்று விடும்
கண்விழி பார்த்து கவிதைகள் படித்தேன்
கவிதையில் எதுவும் கற்பனை இல்லை
உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான்
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி
சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது
உன்னோடு காதல் கொள்ளுதடி
உன் விரல் மென்மை உணர்ந்து விட்டேன்
அது பூவிதழ் தாண்டியதை அறிந்து விட்டேன்
சுற்றிலும் இயற்கை சொல்லுதடி
சுந்தர தமிழில் பாடுதடி
மீண்டும் கேட்க நாடுதடி
உன் புகழ் ஏனோ உயர்ந்தபடி
அடி தாளங்கள் எதற்கு ராகங்கள் எதற்கு
உனது குரலே போதுமடி
உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான்
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி
சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது
உன்னோடு காதல் கொள்ளுதடி
ரோஜாவின் இதழ்கள் சின்னதடி
உன்னை பார்த்தால் நடுங்குதடி
உந்தன் அழகோ கூடுதடி
ரோஜாவோ இன்று தோற்றதடி
அதன் முள்ளையும் தொட்டு நறுமணம் கொடுத்து
உனக்குச் சமமாய் மாற்றி விடு
உலத்தின் துரும்பாய் இருந்தவன் நான்
உன்னால் உலகமே ஆனதாய் உணர்ந்தேனடி
சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது
உன்னோடு காதல் கொள்ளுதடி
சிந்தும் மழைத்துளி சிரிக்குதடி அது
உன்னோடு காதல் கொள்ளுதடி
பண்பாடு நிலைக்கட்டும் | panbadu nilakattum
உலகம் முன்னேறியதாய்
மார் தட்டும் விஞ்ஞானத்திற்கு
மானம் என்னவென்று அறியாது
பண்பாடு என்னவென்று புரியாது!
தலைவனைக் கண்ட தலைவியவள்
தலை கவிழ்ந்து இதழ் சிரித்தாள்
சிறப்பாய் சிதறின இதழ் சிரிப்புகள்
சிதறாமல் இருந்தன பண்பாடுகள்!
தேகம் மறைக்கா ஆடைகள்
வாழ்வை கெடுக்கும் வாய்ப்புண்டு
பக்குவப்படா மிருகங்கள் விழி முன்
புத்திசாலித்தனமாய் நடப்பது நல்லது!
அகவை முதிர்ந்த பெரியவர்களிடம்
அன்போடு நடக்க வேண்டும்
பண்பு கொண்ட முதிர்ந்த மனது
பண்பாடோடு உன்னை பாராட்டும்!
இலக்கணம் மறந்த கவிதைகளை
புதுக்கவிதைகள் என புகழ்ந்தாலும்
மரபு மீறிய கவிதைகள் அவையென
மனம் நினைக்கும் அல்லவா?
செவ்வாயில் நீர் கண்டுபிடித்தாலும்
விஞ்ஞானம் ஒளிவேகத்தில் பயணித்தாலும்
பண்பாடு ஒலி வேகத்திலாவது
பயணிக்கட்டும்! பண்பாடு நிலைக்கட்டும்!
உவரி சுயம்புலிங்க சுவாமி | uvari suyambulinga swamy
அமைதியும் அருளும் தரும் சுயம்புவே!
அலைகடல் உவரியின் அருள் நாயகனே!
அள்ளித் தந்து உலகை வாழச் செய்து
அழகாய் பொலிவாய் வீற்றிருப்பவனே!
பக்தர்கள் வாழ்வுகளின் துயர் துடைத்து
பல மடங்கு இன்பம் பெருக்கியவனே!
மணி ஓசை பக்தர்கள் தூண்டினதால்
மகிமைகள் பல நீ செய்தவனே!
விரதங்கள் பக்தர்கள் மேற்கொள்ள
விரைந்து அருள் பாலித்தவனே!
தூயரம் கொண்டு உன்னை நாடியவர்களின்
துயரங்களை துடைத்து எறிந்தவனே!
அலைச்சல் கொண்ட பக்தர்களை
அதிசயம் காண செய்தவனே!
உன் மணமான சந்தனமும் விபூதியும்
பக்தர் வெற்றித் திலகமாய் கொடுத்தவனே!
உன் அருள் உலகம் அறிந்ததினால்
உலகமே உன்னை நாடச் செய்தவனே!
ஓணம் நல்வாழ்த்துக்கள்| Onam Wishes
ரயில் பயணம் | Rayil payanam
வெளியூர் பயணம் நான் செல்ல
தூண்டி விடுவாய் என் நினைவுகளை!
நகராத இரு கோடு தண்டவாளத்தில்
மைல் வேகத்தில் நீ பறப்பாய்!
முன்பதிவில்லா பெட்டியில்
முன்பதிவு செய்யபட்டிருக்கும்
எனது கடந்த கால நினைவுகள்
முதல் காதல் முதல் கடைசி காதல் வரை !
உனக்கும் மூதாதையர் உண்டு-அது
என் சிறு வயது அட்டை ரயில்.
எரிபொருள் சக்கரம் இரண்டும் இல்லா
என் பட்ஜெட் பெரிய ரயில்!
உன்னோடு ஓடி வரும் மரங்களால்
உன்னை வீழ்த்த முடிவதில்லை
ஆங்கங்கே நின்று செல்லும் நிலையத்தில்
விட்டுப் பிடித்து தொடரச் சொல்வாய்!
அடம் பிடிக்கும் செல்ல குழந்தைகளை
ஜன்னலோர இருக்கையில் அமர்த்தினால்
அன்னை மடி அதுவென ஆர்பரிப்பர்.
குழந்தைப் புன்னகை ரயிலுக்குச் சமர்ப்பனம்!
பெரிய சத்தம் பெரிய வேகமாய் நீ செல்ல
சிறிய சிகப்பு விளக்கு உன்னை மயக்கும்!
புத்தி மயங்கிய உன்னை எழுப்ப
பச்சை விளக்கு பளிசென்ன ஒளிரும்!
வளைந்து செல்லும் தண்டவாளத்தால்
வளைவு நெளிவு உனக்கு அழகு
அதை வடித்து கொடுத்த தண்டவாளம்
கவிஞனுக்கெல்லாம் தலைவன் ஆனான்!
என் வருகை என் அம்மா எதிர்பார்க்க
என் அன்னைக்கு அன்னை நீயானாய்!
நல்ல படியாய் சேர்ந்து விட்டேன்
நற்பெயர் எல்லாம் நீ அடைவாய்!
நான் பயணம் செய்தது என்னவோ
முன்பதிவு இல்லா பெட்டிதான் - ஆனால்
எனக்கும் ரயிலுக்குமான உறவு
முன் ஜென்மத்தில் பதிவானவை!
அப்துல் கலாம் கண்ணீர் அஞ்சலி கவிதை | Abdul kalam
இளைஞர்களை கனவு காண சொல்லி
இந்தியாவையும் உற்சாகபடுத்தி
இரு துருவ முனைகளிலும்
இந்திய பெருமையை எடுத்துரைத்து
யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாரினில் நம் பெருமை எடுத்துரைத்து
இரு வரி தமிழ் திருக்குறள்களை
இளைஞர் இதயத்தில் விதைத்து
குழந்தையோடு குழந்தையாய் நீ மாறி
குதூகலத்தோடு நீயும் உரையாடி
கேள்விக்கனை தொடுக்கச் செய்து
குழந்தைகளுக்கு அறிவுப்பதில் ஊட்டி
பிறந்த ஒரு நாள் மட்டும் நீ அழுது
உன் இறந்த நாளில் இந்தியாவை அழ செய்து
தன்னம்பிக்கை உத்வேகம் எமக்களித்து
எம்மை விட்டுப் பிரிந்த எம் கலாமே!
வருந்துகிறது! நீங்கள் இல்லா இந்தியா!
முதல் காதல் | Muthal Kaathal
அழகுப் போதை | Alaku pothai
urukum panikatti | உருகும் பனிக்கட்டி | பனி விழிகள்
ஹைக்கூ - மூச்சு | haikoo breath
காதல் நடிகை | Kaathal Nadigai
விளக்கு ஒளி பொலிவாய்
விழியது காதலில் மின்னும்!
இருந்தும் இல்லவே இல்லை
இன்று வரை சொல்லிக் கொள்கிறாய்!
உன் இதயத்தின் காதல் வார்த்தையை
உதடுகளால் தவறாய் உச்சரிப்பாய்!
ஒரு முறை சரியாய் உச்சரித்தால்
ஓராயிரம் கவிதை எழுதிடுவேன்!
உன் இருவிழி ஓரப்பார்வையை
தினம் தினம் நான் அறிவேன்!
அந்நேரம் நம் காதலோடு
நான் படும் பாடையும் நீ அறிவாய்!
காதலைக் கட்டுக்குள் கொண்டு வர
சிறு மூளையைத் தூண்டி விடுவாய்!
அந்நேரம் இதயத்தில் கசியும் காதலை
இதழ் வெளிப்படுத்தாமல் நீ தடுப்பாய்!
எட்டும் தூரத்தில் நான் நிற்க
எட்டாக் கனியாய் நீ நினைப்பாய்!
எட்டுகின்ற கனியாம் நம் காதலை
எட்டிப் பிடிக்காமல் நீ நடிப்பாய்!
உன் சுய நினைவு நீ இழந்தாலும்
உன் விழியில் நம் காதல் மின்னும்!
சுய நினைவு இழக்கா காதலோடு
அந்நேரமும் சுயநினைவாய் நீ நடிப்பாய்!
விழியது காதலில் மின்னும்!
இருந்தும் இல்லவே இல்லை
இன்று வரை சொல்லிக் கொள்கிறாய்!
உன் இதயத்தின் காதல் வார்த்தையை
உதடுகளால் தவறாய் உச்சரிப்பாய்!
ஒரு முறை சரியாய் உச்சரித்தால்
ஓராயிரம் கவிதை எழுதிடுவேன்!
உன் இருவிழி ஓரப்பார்வையை
தினம் தினம் நான் அறிவேன்!
அந்நேரம் நம் காதலோடு
நான் படும் பாடையும் நீ அறிவாய்!
காதலைக் கட்டுக்குள் கொண்டு வர
சிறு மூளையைத் தூண்டி விடுவாய்!
அந்நேரம் இதயத்தில் கசியும் காதலை
இதழ் வெளிப்படுத்தாமல் நீ தடுப்பாய்!
எட்டும் தூரத்தில் நான் நிற்க
எட்டாக் கனியாய் நீ நினைப்பாய்!
எட்டுகின்ற கனியாம் நம் காதலை
எட்டிப் பிடிக்காமல் நீ நடிப்பாய்!
உன் சுய நினைவு நீ இழந்தாலும்
உன் விழியில் நம் காதல் மின்னும்!
சுய நினைவு இழக்கா காதலோடு
அந்நேரமும் சுயநினைவாய் நீ நடிப்பாய்!
வாழ்த்து கவிதை | Vaalthu kavithai
அன்னையை அரவணைக்கும்
மழலை சிறு குழந்தையாய் !
தமிழை சீராட்டி கவி பாடும்
சங்க கால புலவனாய்!
ஆடையில்லா மல்லிகை பூக்களின்
பிரிக்க முடியாத மணமாய்!
தேகத்திற்கு குளிர் கொடுக்கும்
மார்கழி விடியல் பனியாய் !
இல்லத்தை தினம் அழகுபடுத்தும்
இல்லத்து குல ராணியாய்!
இல்லத்தை நல்வழி நடத்தும்
இல்லத்து குல அரசனாய்!
பிறர் வாழ்வுக்கு உதாரணமாய்
அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள் !
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!
விதி வலியது | Vithi valiyathu
ஒரு தலைக் காதல் | oru thalaik kaathal
சோகங்கள் | Sokam
உதித்தவன் மறைந்து இரவுகள் மலர
உதயமாகிறது என் இதயத்தின் புலம்பல்கள்!
சில துளி பெருவெள்ளமாய் கண்ணீர் துளிகள்
சிறப்புரை ஆற்றுகிறது விழியோரங்களில்!
நிம்மதியை இதயமருகே வர விடாது
நித்தமும் காவல் புரிகிறது தனிமைகள்!
படுக்கை அறை போர்வைக்குள் ஒழிந்து
படாத பாடு படுத்துகிறது சோகங்கள்!
என்றாவது ஒரு நாள் முடிவுரை காணுமா?
ஏக்கத்தோடு படுக்கையறை நான் செல்ல
எட்டும் தூரத்தில் எள்ளி நகையாடுது
என் தூக்கம் தொலைக்கும் சோகங்கள்!
பிறப்பு என்றால் இறப்பு ஒன்று இருக்க
சோகம் என்றால் இன்பம் மட்டும் இல்லை!
ஆகாயத்தில் பொலிவாய் கோட்டை கட்டி
அடிமண்ணில் அஸ்திவாரமாய் சோகங்கள்!
ஆண்மகன் என்றால் அழக கூடாதாம்
அழகாய் இருக்கிறது கலியுக பழமொழி!
அடக்கிய சோகங்கள் ஆயுள் குறைக்க
அடி மண் இன்றே கண்டால் சந்தோசம்தான்!
ஆறடி மண்ணுக்குள் நான் சென்றாலும்
அடக்கம் செய்யாதீர்கள் என் சோகங்களை!
அங்கும் சோகங்கள் நுழைந்து விட்டால்
அகிலமே ! எங்கு நான் செல்வேன் ?
நாய் கவிதை | Sella pirani
![]() |
| Chella Piraani Kavithai |
வீட்டு வாயிலில் என் பாதம் பதிய
லொள் லொள் சத்தத்துடன் வரவேற்புரை
அன்பு நன்றி முடிவுரை உன்னோடு!
இரு கால்களை இரு கரங்களாக்கி
என் இடையோடு இறுகத் தழுவி
நன்றியை பகிர்வாய் என்னோடு!
என் இடையோடு இறுகத் தழுவி
நன்றியை பகிர்வாய் என்னோடு!
என் விரல் நுனி உன் நெற்றி தொட
உன் அன்பை எனக்கு உணர்த்திட
வால் ஆட்டிடுவாய் நன்றியோடு!
உன் அன்பை எனக்கு உணர்த்திட
வால் ஆட்டிடுவாய் நன்றியோடு!
என் தோட்டத்து வயல்களுக்கு
காவலாய் கள்ளி வேலிகள்
கள்ளி வேலிகள் உன் காவலோடு!
காவலாய் கள்ளி வேலிகள்
கள்ளி வேலிகள் உன் காவலோடு!
இரவில் மடியில் நான் விழி முடி
கனவோடு கவியோடு நான் பயணிக்க
வாயிலில் நீ என்றென்றும் நன்றியோடு!
கனவோடு கவியோடு நான் பயணிக்க
வாயிலில் நீ என்றென்றும் நன்றியோடு!
உன்னோடு என் உயிர் | unnodu en uyir
இரவின் புலம்பல் விடியல் வரை
விடியலில் அலுவலக போலி வாழ்வு
நீ இல்லா வாழ்வில் புரிகிறது
காதல் வாழ்வு என்னவென்று!
கண்ணீர் துளிகள் விழியில் ஊற
கவிதைக்குள் கல்லறை கட்டுகிறேன்!
கவிதை மெய்யன்று பலபேர் வாதம்
என் கவிதை பொய்யன்று உன் வாதம்!
விளகேற்றும் மாலை வேளையில்
விழியோடு ஒட்டிக் கொள்வாய்!
விழியில் ஒட்டிய உன்னை தேட
வீணாய் போகிறது என் தேடல்கள்!
உன் நிழற்படம் தினம் வருடி
விரல் நுனியில் உயிர் வளர்த்தேன்!
விஷம் அருந்தி உயிர் பிரிய
விரல் நுனி உதவுமா? புலம்புகிறேன்!
உன்னோடு பழகிய நாட்களால்
காதல் வாழ்வில் பற்று கொண்டேன்!
எங்கோ நீ தொலைவில் இருக்க
உலக வாழ்வில் விடை பெறலாம்!
உயிரை திரட்டி உள்ளைங்கையில்
காதல் ரேகையில் வைக்கின்றேன்!
உன் உள்ளங்கை ரேகை தொட்டு
உன் மடியில் உயிர் பிரிவேன்!
கண்ணீர் முத்தங்கள் | kanner mutham --
கர்ப்பம் கவிதை | Karppam kavithai
பூ மொட்டாய் மழலை உறவொன்று
என் இனம் தழைக்க வந்ததின்று!
வயிற்றுத் தசை இனி பெரிதாகும்
மழலை ஒன்று அங்கே உதயமாகும்!
இரவும் பகலும் இனி கவிதையாகும்
வளரும் மழலையால் நாளும் இனிமையாகும்!
சுரக்கும் உமிழ் நீர் இனி வாந்தியாகும்
சுவை தந்த உணவுகள் எதிரியாகும்!
இவள் மூச்சு இனி தாய்மை பேசும்
இவன் மூச்சு இனி தந்தை சொல்லும்!
தமிழுக்கு புனிதம் அம்மா எழுத்தாம்
வாழ்வில் இனி இது இவள் உயிரெழுத்தாம்!
கடைவீதி பொம்மை மழலையாய் மின்னும்
பத்து மாதங்கள் இனி பல வருடமாய் நகரும்!
எட்டி எட்டி மழலை பாதம் உதைக்குமாம்
ஏங்கி நாம் இருக்க மீண்டும் உதைக்குமாம்!
ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தோம்
இனி மூவுடல் ஓருயிராய் வாழ்வோம்!
நியுட்டன் காதல் விதி | newton love poet
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



























