Arthamulla hindhu matham | அர்த்தமுள்ள இந்து மதம்

Arthamulla hindhu matham | அர்த்தமுள்ள இந்து மதம்


Hindu
Arthamulla Indhu matham


காலம் கடந்து 
நான் தொட்ட பகவத் கீதை.
உண்மைதனை உணர்ந்தேன்
விதியும் மதியும் என்னவென்று.
உன் அர்த்தமுள்ள இந்து மதத்தினால்!

என் காதலுக்குக் கண்ணில்லை
காதலை பொறுத்தவரை
நான் குருடன்தான்- ஆனாலும் 
பள்ளம் மேடு அறிந்து 
பாதையில் பயணிப்பேன்.
உன் அர்த்தமுள்ள இந்து மதத்தினால்!

ஒரு கோப்பையிலே 
உன் குடியிருப்பு - இனி
உன் அர்த்தமுள்ள இந்து மதத்திலே
என் குடியிருப்பு.

கவிதை உலகிற்கும் 
கற்பனை உலகிற்கும்
தத்துவ உலகிற்கும் 
மறையா சூரியனே!
கவிஞர் கண்ணாதாசனே!

அர்த்தமுள்ள இந்து மதம் 
அருளியமைக்கு நன்றி!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக