பரிசு பெற்ற பேனா

பரிசு பெற்ற பேனா



parisu
Kaathal Parisu

மையை அம்பாக தொடுத்து 
காகிதத்தோடு போர் புரிந்து 
எனது பேனா கண்ட வெற்றி - கவிதை !!!

வெற்றி கண்ட களிப்பிலும் 
அமைதியாய் 
என் சட்டைப்பையில் 
நின்று கொண்டிருந்தான்.

கன்னி அவள் பாதங்கள் பட்டு 
பாத சுவடுகள்  பூ பூத்திட 
நடந்து என்னருகே வந்தாள்.

கன்னி அவளின் 
வாழ்த்துகளை எதிர்நோக்கி 
கம்பீரமாய் காட்சி கொடுத்தான் 
என் பேனா!

கவிதையை படித்தாள்
இரு வரி இதழ்களால்
காகிதத்தை முத்தமிட்டாள்.

எழுதியவன் இவன் என்று 
பேனாவை சுட்டி காட்டவில்லை 
எனது ஆட்காட்டிவிரல்!

எல்லாம் அறிந்த கன்னி 
அருகே வந்தாள் 
அகம் குளிர்ந்தாள் 
இதயம் குளிர்ந்து 
இதயமும் கனிந்தது 
பேனாவின் வருத்தமும் மறைந்தது!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக