கடிகாரம்

கடிகாரம்



Kadikaaram
Kadikaaram

பன்னிரண்டு எண்களை வைத்து 
மூன்றே மூன்று பேர் மட்டும்
விளையாடும் விளையாட்டிற்கு 
மானுடர்கள் வைத்த பெயர் 
கடிகாரம்!

ஒன்று முதல் 
பன்னிரண்டு வரையிலான எண்கள் 
படைக்கப்பட்டது உனக்காகத்தானோ ?

கூண்டுக்குள் அடைபட்ட முட்கள் 
முத்தமிட துடித்து முத்தமிடாமல் 
விலகிச் செல்கிறது!

முட்கள் என்பதால்
உரசல்கள் கூட 
இங்கு நடை பெறவில்லை!

உங்கள் கால்கள் 
ஆணியில் அடிக்கபட்டதால்
ஆணித்தரமாக எடுத்துரைகிறாய்! 
கடந்த காலம் 
திரும்ப வராது என்று!

உன்னை மானுடர்கள்
உள்ளங்கையில் அடக்கினாலும்
நீ காட்டும் காலத்தை மட்டும் 
மானுடர்களால் அடக்க முடிவதில்லை!
மானுடர்களின் சிம்ம சொப்பனமடா நீ!

உனது நொடி முள்ளின்
ஒரு அசைவு 
எவ்வளவு வலிமை 
என்பதை உணர்ந்தேன்.
பூங்காவில்
அவளுக்காக காத்திருந்த பொழுது!

நிமிட முள்ளின் ஒரு அசைவு 
எவ்வளவு வலிமை 
என்பதை உணர்ந்தேன்.
தேர்வு அறையின் 
இறுதி நேர்த்தில்!

மணி முள்ளின் ஒரு அசைவு 
எவ்வளவு வலிமை 
என்பதை உணர்ந்தேன்.
அவளுடன் மணிக்கணக்கில்
பேசி விட்டு பிரியும் பொழுது!

காலம் எனும் பூவை 
சுற்றி வரும் வண்டுகள் 
நீங்கள்தானோ?

காலம் எனும் பூ 
உதிர்வதற்கு முன் 
பறிப்பது 
மானுடர்களாகிய 
நமது சிந்தனையில் தான் உள்ளது!

காலம் பொன் போன்றது நம்
கடமை கண் போன்றது!
ஒவ்வொரு கடிகாரத்தினுள்ளும்
எழுத பட வேண்டிய 
மானுடர்களின்
புதிய திருக்குறள்!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக